ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Wednesday 20 November 2013

Fwd: MASJID CONSTRUCTION IN CHENNAI - INDIA

Assalamu Alaikum


Kindly find in attachment PPT of a proposed Masjid
in Chennai INDIA which is under construction.

1. The Masjid is being built on a land measuring 6200 square feet.

2.Total
number of floors Ground, First and Second floors total built up area of
11500 square feet Inclusive of ablution area and wash rooms.






3. Ground Floor has been made ready and Salah is being performed.

4. Total cost for building is Indian Rs. 143.75 lakhs
(estimated )
5. We have already collected Indian Rs. 35.00 lakhs





6 We have so far spent Indian Rs. 40.00 lakhs (
5 lakhs loan taken )
7. There is a deficit of Indian Rs. 108.75 lakhs

We shall be very much grateful if you could help us with the balance
amount to complete the Masjid.






This Masjid would be of immense benefit to the 1200 families
Capacity 1600 Members can pray. Further the muslims in the area are
economically backward.

Inshallah we look forward to your participation in the cause of Allah






MOHAMMED AYUB ...0091 9962 10628 - 0091 90940 04414

Your early reply will be appreciated, http://masjid-construction.blogspot.in/

ALLAH’S COMMAND – DO NOT RIDICULE AND DEFAME OTHERS

[ALLAH'S Quran - 49:11] "O you who believe, no men should ever scoff
at other men. May be, the latter are better than the former. Nor
should women (ever scoff) at other women. May be, the latter women are
better than the former ones. And do not find fault with one another,
nor call one another with bad nicknames. Bad is the name of sinfulness
after embracing Faith. If anyone does not repent, then such people are
the wrongdoers."


The Prophet (Peace Be Upon Him) has said:

[Bukhari, Book #73, Hadith #58] "Narrated Anas bin Malik: The Prophet
was not one who would abuse (others) or say obscene words, or curse
(others), and if he wanted to admonish anyone of us, he used to say:
"What is wrong with him, his forehead be dusted!"

[Bukhari, Book #73, Hadith #72] "Narrated Anas: Allah's Apostle was
neither a Fahish (one who had a bad tongue) nor a Sabbaba (one who
abuses others) and he used to say while admonishing somebody, "What is
wrong with him? May dust be on his forehead!"

[Bukhari, Book #46, Hadith #721 ] "Narrated Al-Ma'rur bin Suwaid: I
saw Abu Dhar Al-Ghifari wearing a cloak, and his slave, too, was
wearing a cloak. We asked him about that (i.e. how both were wearing
similar cloaks). He replied, "Once I abused a man and he complained of
me to the Prophet . The Prophet asked me, 'Did you abuse him by
slighting his mother?' He added, 'Your slaves are your brethren upon
whom Allah has given you authority. So, if one has one's brethren
under one's control, one should feed them with the like of what one
eats and clothe them with the like of what one wears. You should not
overburden them with what they cannot bear, and if you do so, help
them (in their hard job)."

[Sunan Abudawud, Book #41, Hadith #4859] "Narrated Abu Hurayrah: The
Prophet (peace_be_upon_him) said: The gravest sin is going to lengths
in talking unjustly against a Muslim's honour, and it is a major sin
to abuse twice for abusing once.

[Muslim, Book #032, Hadith #6263] "Abu Huraira reported Allah's
Messenger (may peace be upon him) as saying: When two persons indulge
in hurling (abuses) upon one another, it would be the first one who
would be the sinner so long as the oppressed does not transgress the
limits."

http://al-tanzil.com/Prophet_Explained_Quran_2.html

பர்தா (ஹிஜாபு)

இன்றைய நவீன உலகில் பெண்களின் கல்வி மிகவும் இன்றியாமையாததாக இருப்பதால்
பெண்கள் கல்விச்சாலைகளுக்கு செல்வது தவீர்க்க முடியாத
ஒன்றாகவிட்டது.இருபாலரும் இணைந்து படிக்கக்கூடிய பெண்கள் மார்க்கம்
வலியுறுத்தும் பர்தா (புர்கா) முறை பின்பற்றுவதில்லை என்பது வேதனையான
விஷயம்.ஒரு சில பெண்கள் (மாணவிகள்) புர்காயை பின்பற்ற வேண்டும் என்ற
எண்ணத்திலிருந்தாலும் கல்வி நிறுவனங்கள் அதற்கு அனுமதி
அளிப்பதில்லை.இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் சிலவற்றை உரிமையுடன் கேட்கும்
இஸ்லாமிய பெற்றோர்.பருவம் அடைந்த தனது பெண் படிக்கும் கல்வி
நிறுவனத்தில் மார்க்கம் வலியுறுத்தும் ஹிஜாபு அணிய அனுமதிப்பதில்லை
என்பதை தெரிந்தே பள்ளிகளில் சேர்க்கின்றார்கள்.ஹிஜாபு அனுமதி மறுக்கும்
பள்ளிக்கூடங்களில் எத்தனை இஸ்லாமிய பெற்றோர் ஹிஜாபு எனது மகளுக்கு
வேண்டும் என கேட்டுள்ளார்கள் என்றால் ஆம் நான் கேட்டேன் என பதிலுரைக்கும்
பெற்றோர் அற்பமே.அதே வேலையில் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட சகோதரர்கள்
தங்களின் பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல் இஸ்லாமிய மாணவிகள்
அனைவருக்காகவும் ஹிஜாபை பற்றி கல்வி நிறுவனங்களில் வலியுறுத்தும்போது சில
மாணவிகளின் பெற்றோர் இவர்களுக்கு ஏன் ? இந்த வேலை எனது மகள் நல்ல தான்
பள்ளிக்கு சென்று வருகின்றாள் என்ற தோனியில் பஜனை செய்கின்றார்கள்.இன்றைய
கால சூழலின் ஹிஜாபின் முக்கியத்தை மாற்றுமத சமுதாய பெண்கள்
அறிந்துள்ளார்கள்.ஆனால் கடமையாக்கப்பட்ட நாம் அதில் கவனக்குறைவாக
இருக்கின்றோம்.அன்பான பெற்றோர்களே மதுக்கூரில் செயல்படுகின்ற அரசு
மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவியர்களுக்கு ஹிஜாபு
அணிய அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையினை சமுதாய ஆர்வலர்கள்
எடுத்துரைத்துள்ளார்கள்.கல்வி நிறுவனங்களும் அதை நீங்கள் தானே
வலியுறுத்திகின்றீர்கள் ஹிஜாபு விஷயத்தில் பெற்றோரின் மனநிலை எப்படி
உள்ளது என்பதை அறிந்து முடிவு செய்கின்றோம் என சொன்னதாக தெரிகின்றது.எனவே
அன்பான பெற்றோர்களே !உறவின்முறைகளே ! மதுக்கூரில் உள்ள
பள்ளிநிறுவனங்களில் ஹிஜாபு பற்றி உங்களிடம் கருத்துரைகள் கேட்டால்
ஹிஜாபின் அவசியத்தை உணர்ந்து வேண்டும் என்ற ஒருமித்த கருத்தை
எடுத்துரைக்கவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள்
பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப்
பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று
(சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்
காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை
மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள்,
அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம்
புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள்
அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின்
புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள்
சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும்
(பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான
அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர,
(வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;
மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு
தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே!
(இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து
(பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள்
அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.(அல் குர் ஆன் 24:31)

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான்
கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத்
தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என)
அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும்
அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.(அல் குர் ஆன் 33:59)


உமர்(ரலி) அறிவித்தார்
நான், 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர்.
எனவே, தாங்கள் (தங்களின் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை
பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!' என்று சொன்னேன்.
அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான். (நூல்
:புகாரி 4790)

Thanks : Madukkur TMMK

Wednesday 6 November 2013

முஹர்ரம்!!

"முஹர்ரம்"

இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம். முற்காலம் தொட்டு அரபிகள்
இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். முஹர்ரம்
என்னும் அரபிச் சொல்லிற்கு "விலக்கப்பட்டது" என்று பொருள்.

"சொற் பொருள்"

முஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம,இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர்
சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை
செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது,
தடுக்கப்பட்டது,என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால்
அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும்
பொருள் கொள்ளப்படுகிறது.

( உ-ம் : தொழுகைக்கு முன் செய்யப்படும் செயல்கள் தொழுகையில்
தடுக்கப்படுவதால் "தக்பீர் தஹ்ரீம்" என்றும் , உம்ரா,ஹஜ்ஜ'க்குமுன்
அனுமதிக்கப்படுவை இஹ்ராமுக்கு நிய்யத் செய்ததும் தடுக்கப்படுவதால்
"இஹ்ராம்" என்றும், ஹரம் எல்லைக்கு வெளியே செய்யப்படும் பாவமானவை-
விலக்கப்பட்டவை- ஹரம் எல்லையில் தடுக்கப்படுவதால் "ஹரம்"-புனித எல்லை-
என்றும்,"மஸ்ஜிதுல்ஹராம்"- புனிதமான பள்ளி வாசல்- என்றும்
சொல்லப்படுகிறது.)

"புனித மாதங்கள்- அஷ்ஹுருல் ஹுரும்"

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில்
உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள்
புனிதமானவை ஆகும். ( அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை
துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.

இந்நான்கு மாதங்கள் புனிதமிக்கவை என்னும் போது ஏனைய மாதங்கள்
சிறப்புக்குரியவை அல்ல என்பது பொருளல்ல. ஏனெனில் ரமளான் என்னும் மாண்பார்
மாதம் இதில் தான் வருகிறது.இந்நான்கு மாதங்களை நபி இப்ராஹீம் (அலை)
அவர்கள் காலம் முதல் மக்கள் புனிதமானவையாகக் கருதி வந்தனர்.

ஒருவர் அறியாமல் செய்த தீங்கையும் தம் மானம் அழிக்கும் பெரும் குற்றமாகக்
கொண்டு அதற்காக பழி வாங்குவதில் தம் காலத்தையெல்லாம் கழித்து வந்தவர்கள்
அரபிகள். கொலை,கொள்ளை போன்ற மாபாதகச் செயல்களை செய்வதற்கு அவர்கள்
கொஞ்சமும் தயங்காதவர்கள்.இந்த ஓயாச்சண்டைகளிலும் ஒழியாச் சச்சரவுகளிலும்
ஈடுபட்டிருந்த அவர்களை தடுப்பதற்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட
மாதங்களே இந்நான்கு மாதங்களும். அவற்றுள் முதன்மையானதே முஹர்ரம்
மாதமாகும்.

குறிப்பாக இந்த மாதத்தில் தமது சண்டை சச்சரவுகளை விலக்கிவைத்திருப்பதால்
தான் விலக்கப்பட்டது என்ற பொருள் கொண்ட "முஹர்ரம்" என்ற பெயர் இதற்கு
ஏற்பட்டது. இவ்விதம் அக்கால அரபிகள் தமது உணர்ச்சிகளையும், வாளையும்
உறையுள் போடத்தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இந்த மாதத்தை ஒரு புனித
மாதமாகக் கருதியது தான்.

இந்த மாதத்தில் தான் "ஆஷூரா" என்னும் நாள் வருகிறது. இந்த 'ஆஷூரா'
என்னும் சொல் ஹீப்ரு மொழிச் சொல்லாகும். அதாவது "பத்தாவது நாள்" என்பது
பொருளாகும். யூதர்களின் பத்தாவது நாளுக்கு இப்பெயர் இருந்து வருகிறது.
யூதர்களின் "திஷ்ரி" மாதமும் அரபிகளின் "முஹர்ரம்" மாதமும் இணையாக
வருபவையாகும். திஷ்ரி மாதத்தின் பத்தாம் நாளே முஹர்ரம் மாதத்தின் பத்தாம்
நாளாகும்.

யூதர்கள் இந்த பத்தாம் நாளில் நோன்பு நோற்கும் வழக்க முடையவர்களாக
இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது
இப்பழக்த்தைக் கண்டதும் அதற்குரிய காரணத்தை அவர்களிடம் கேட்டனர். அதற்கு
"நானே இறைவன்" எனக் கூறிய பிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் இறைவன்
செங்கடலில் மூழ்கடித்ததும் நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களின்
மக்களையும் காத்தருளியதும் அந்நாளில்தான் என்றும் அந்த நன்றியை நினைவுகூர
மூஸா(அலை) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றனர் என்றும் அதனையே தாங்களும்
பின்பற்றுவதாகவும் கூறினர். அதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் , "
அவ்விதமாயின் நானும் என் மக்களும்தாம் உங்களையும்விட மூஸா(அலை)
அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்" என்று கூறி அது முதல் தாங்களும்
நோற்று தம் மக்களையும் அவ்வாறே நோன்பு நோற்குமாறும் பணித்தனர்.

அது மட்டுமன்றி "வரும் ஆண்டும் நான் இவ்வுலகில் வாழ்ந்தால் முஹர்ரம்
ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" என்றும் கூறினார்கள். { ஆதாரம்:
முஸ்லிம், அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

Tuesday 5 November 2013

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.

2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக
உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.

3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை
(நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.

4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும்
வீடேயாகும்.

5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.

6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.

7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.

8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால
வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ,
அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை
இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.

9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம்
உண்டாகட்டும்.

10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.

11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.

12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.

13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.

14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.

15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும்
நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில்
நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.

16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு
பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி
அனுப்பப்பட்ட உன் மகள் தான்.

17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.

18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.

19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம்
விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.

20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும்
வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.

21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.

22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக
பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.

23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.

24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர்
தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி
விடட்டும்.

25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே
அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.

26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.

27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.

28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.

29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.

30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு
நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.

31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.

32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம்
வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.

33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.

34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.

35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.

36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை
சாம்பலாக்கி விடும்.

37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக
பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக்
கொள்கிறேன். 38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.

39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.

40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.

41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.

42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.

43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.

44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு
அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.

45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது
நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.

46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள்
முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.

47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு
கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.

48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.

49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.

50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.

51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.

52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.

53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள்
செய்கிறான்.

54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்

55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது
மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.

56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.

57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை
பெறுவதே உண்மையான செல்வமாகும்.

58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.

59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை
செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.

60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன்
அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR