ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Saturday, 28 September 2013

உணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்? எப்படி கண்டு பிடிப்பது ?

கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம்.தவறான வழியில் காசு சம்பாதிக்க மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்ஏலக்காயில்...

Monday, 23 September 2013

இந்தியாவில் மறதிநோயால் 6.40 கோடி பேர் பாதிப்பு

இந்தியாவில் மறதி நோயால் 6.40 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அல்சைமர் (மறதி நோய்) தினத்தை முன்னிட்டு, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. டீன் கனகசபை தலைமை வகித்தார். டாக்டர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக டீன் கனகசபை கூறியதாவது:இந்திய மக்கள் தொகையில் 6.40 கோடி (5.5 சதவீதம்) பேர் அல்சைமர் நோயினால் (மறதி நோயால்) பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2030ம் ஆண்டில் 9 கோடியாகவும் (6.4 சதவீதம்), 2050ம் ஆண்டில் 11.30 கோடியாகவும் (7.2 சதவீதம்) உயரக்கூடும். ஞாபகமறதி, முடிவு எடுப்பதில் திணறுவது, உணர்ச்சி வசப்படுவது, சந்தேகம், கோபம், பிடிவாதம் போன்றவை அல்சைமரின் அறிகுறிகள். 60 வயதுக்கு மேல் இந்த நோய் ஏற்படும்.நரம்பு மற்றும் மனநல பரிசோதனைகள் மூலம் அல்சைமர் நோய் கண்டுபிடிக்கப்படுகிறது....

Saturday, 21 September 2013

இந்திய அரசியலமைப்புச்சட்ட உரிமைகள்

இந்திய அரசமைப்புச் சட்டம் Ariticle :25 Freedom of conscience and free profession, practice and propagation of religion “ஒரு இந்தியனுக்கு சுய சிந்தணையோடு ஒரு மதத்தை ஏற்க, வழிபாடு செய்ய, பிறர்க்கு பரப்புறை செய்யும் உரிமை.” Ariticle :28. (2)  shall apply to an educational institution which is administered by the State but has been established under any endowment or trust which requires that religious instruction shall be imparted in such institution மத போதனைக்கென ஓர் அறக்கட்டளை அல்லது கொடைகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள கல்விச் சாலைகள் நடத்தும் உரிமை. (அவை அரசின் நிதி உதவியின் மூலம்நடைபெற்றாலும் கூட) Ariticle...

வெளிநாட்டில் வேலை... ஏமாறாமல் இருக்க!!!

வெளிநாட்டில் வேலையா? எங்கே, எங்கே?’ என்று கேட்டு ஓடியது அந்தக் காலம். வெளிநாட்டில் வேலை என்றாலே சந்தேகத்தோடு ஒதுங்குவது இந்தக் காலம். காரணம், வெளிநாட்டு வேலை என்று நம்பிப் போய், அடியும், மிதியும் பட்டு ஊருக்குத் திரும்புகிற அனுபவம் பலருக்கு. ஆனாலும், முறையான வழியில் உஷாராகப் போகிறவர்கள் கைநிறைய பணத்தோடு திரும்பவே செய்கிறார்கள். வெளிநாட்டு வேலைக்குத் தங்களை எப்படி தயார்படுத்திக்கொள்வது? யாரிடம் சென்று சரியான தகவல் பெறுவது? உண்மையான முகவர் என்பவர் யார்? அவரை எப்படி நாம் அடையாளம் காண்பது? என்கிற கேள்விகளுக்கு பதில் தேடி அலைந்தபோதுதான் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் கே.இளங்கோவனைச் சந்தித்தோம். அவரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டோம். தெளிவான விளக்கத்தைத் தந்தார் அவர்.''தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு...

Saturday, 14 September 2013

இதயத்தை கவனமா பாத்துக்கங்க!

வளைகுடா நாடுகள்,மற்றும் சவூதி அரேபியாவில் 5 ஆண்டுகள் அதையும் தாண்டி 10 ஆண்டுகள் பணியாற்றி வருபவரா நீங்கள்? பத்திரமா பாத்துக்கங்க...வளைகுடா வாழ் குறிப்பாக சவூதி அரேபியாவில் பணியாற்றும் சொந்தங்களுக்கு! உங்களுக்குத் தெரியுமா? சவூதி அரேபியாவின் தட்ப வெட்ப சீதோஷ்ண நிலை மாற்றங்கள் மற்றும் சுற்றுப்புற சூழல் பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்களா?இந்த ஆண்டு குறிப்பாக கடந்த சில மாதங்களில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உடன் களப்பணியாற்றிய சகோதரர்கள் என்று அதிகமான பேர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போய் உள்ளனர்.ஒவ்வொருவரும் மரணத்தை சுகித்தே தீருவோம் என்பது இயற்கை. சவூதி அரேபியாவில் 5 ஆண்டுகள் அதையும் தாண்டி 10 ஆண்டுகள் பணியாற்றுபவர்களா நீங்கள்? என்றால் உங்கள் இதயத்தை பத்திரமா பாத்துக்கங்க... உங்கள் உடல் நலனை மாதம் ஒரு முறை...

Sunday, 1 September 2013

நீரும்.... மருந்தே....! ....,,,,,,,

...

டாப் 10 ஊழல் (இந்தியாவில்)

ஊழல் செய்வதிலும் கணக்கு எடுக்க வேண்டாமா? எல்லாவற்றிலேயும் டாப் டென் பார்த்தாச்சு……இதிலும் பார்த்துவிடுவோம்……. இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா… ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அந்த ஊழலில் சில ‘துளிகளை’ இங்கே பார்க்கலாம்: 1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் – ரூ 1.76 லட்சம் கோடி( தமிழனாக இருந்து நமக்கு அந்த பெருமையை கொடுத்துள்ளார் ராசா )இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.2 ஜி அலைக்கற்றை...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR