ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Friday, 21 August 2015

“குஜராத் கலவரத்திற்கு முழு காரணம் மோடிதான்” என பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய் பட் பணி நீக்கம்

அகமதாபாத் : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வழக்கில் நரேந்திரமோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த காரணத்தால் பழிவாங்கப்பட்ட ஐ.பி.எஸ்.அதிகாரி சஞ்சீவ்பட்டை பணியிலிருந்தே நீக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து அவசரமாக கூட்டிய கூட்டத்தில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது கோபத்தை வெளியிட அனுமதிக்கவேண்டும் என்று மோடி உத்தரவிட்டதாக சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து மோடி அரசு, சஞ்சீவ் பட்டை பழிவாங்கும்விதமாக துறைசார்ந்த விசாரணைக்கு உள்படாதது, அனுமதியின்றி விடுமுறையில் சென்றது, காவலர் பயிற்சிப் பள்ளித் தலைவராக இருந்தபோது அலுவலக வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியது, ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தது போன்ற காரணங்களைக் கூறி சஸ்பெண்ட் செய்தது. சஸ்பெண்ட்...

Friday, 14 August 2015

இந்திய பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் நூல்

நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் முதல் பணியாக உளவுத் துறையின் அவதூறுகளை பதினைந்து நிமிடங்கள் கேட்டுவிட்டு, தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குகிறார் இந்தியப் பிரதமர். இந்நாட்டு ஊடகங்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பொதுப்புத்தியை எவ்வாறு அரசின் விருப்பத்திற்கேற்ப தகவமைக்கின்றன என அடுக்கடுக்காய் நாம் இதுவரை கேட்டிராத செய்திகளை, இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிவு செய்திருக்கிறார், எஸ்.எம். முஷ்ரிப். மாலெகவ்னில் உள்ள பிகு சதுக்கத்தில் 29 செப்டம்பர் 2008 அன்று, ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். நூறு பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். இது ‘சிமி' என்ற முஸ்லிம் இயக்கத்தின் சதி என அரசு உடனே அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதனை பத்திரிகைகளில் படித்துவிட்டு, இதுதான் உண்மை என மக்கள் நம்பினர். ஆனால், இது போன்ற நேரங்களில் அதற்கு...

வக்ப் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் முன்னாள் IAS அதிகாரி

அதிகார வர்க்கங்கள் அச்சுறுத்தி அடக்கி ஒடுக்க நினைப்பதை உடைத்தெறிய வேண்டும்! ஊடகங்கள் அதிகார வர்க்கங்களுக்கு பயந்து செய்தியை வெளியிட மறுக்கிறது! நமக்கான ஊடகத்தில் அதிகமாக பகிர்ந்து இச்செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்ல உதவுங்கள் தயவு செய்து! நடவடிக்கை இல்லாத பட்சத்தில் ஆலோசனைக்கு பிறகு ஓரிரு தினங்களில் அடுத்த கட்ட நிகழ்வு அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்..! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்... திருச்சி மீர் ஹசனுல்லா ஷா வக்புக்கு சொந்தமான நில பிரச்சனை தொடர்பான விவரங்கள் பின்வருமாறு.... திருச்சி மாவட்டம், தென்னூர், கிராமம், டைட்டில் டீடு எண் 1142-க்கு உட்பட்ட திருச்சி டவுன், புதிய வார்டு “Y” பிளாக் 26, புதிய சர்வே எண்கள்: 5, 6,8,9-க்கு கட்டுப்பட்ட 2.04 ஏக்கர் மேற்படி தர்காவுக்கு சொந்தமான நிலமாகும். 2005-ஆம் வருடம் வரை ஆவணங்கள் அனைத்தும் இதை உறுதி...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR