
அகமதாபாத் : குஜராத் முஸ்லிம்
இனப்படுகொலை வழக்கில்
நரேந்திரமோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்
பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த
காரணத்தால் பழிவாங்கப்பட்ட
ஐ.பி.எஸ்.அதிகாரி சஞ்சீவ்பட்டை பணியிலிருந்தே
நீக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பைத்
தொடர்ந்து அவசரமாக கூட்டிய
கூட்டத்தில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கு
எதிரான தங்களது கோபத்தை வெளியிட
அனுமதிக்கவேண்டும் என்று மோடி
உத்தரவிட்டதாக சஞ்சீவ் பட்
உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம்
தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து மோடி அரசு, சஞ்சீவ்
பட்டை பழிவாங்கும்விதமாக துறைசார்ந்த
விசாரணைக்கு உள்படாதது, அனுமதியின்றி
விடுமுறையில் சென்றது, காவலர் பயிற்சிப்
பள்ளித் தலைவராக இருந்தபோது அலுவலக
வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியது, ஒரு
பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தது
போன்ற காரணங்களைக் கூறி சஸ்பெண்ட்
செய்தது.
சஸ்பெண்ட்...