ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Friday, 1 March 2013

ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் Appointment பெறும் வசதி


இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை UIDAI(Unique Identification Authority of India) என்ற அமைப்பின் மூலம் இந்திய அரசு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்த அடையாள அட்டையை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் மட்டும் தான் இந்த அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் தான் ஒரு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.


 மற்றவர்கள் திரும்பி செல்ல வேண்டியது தான். முதலில் செல்பவர்களுக்கே முன்னுரிமை என்பதால் அதிகாலையிலேயே சென்று இதற்க்காக லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய சிரமம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு UIDAI அமைப்பு ஆன்லைனில் Appointment வாங்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. ஆன்லைனில் Appointment வாங்கிவிட்டால் சரியான நேரத்திற்கு சென்று சுலபமாக ஆதர் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம். இதற்க்காக மணிக்கணக்கில் லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.


Appointment ஆன்லைனில் பதிவு செய்ய :
இதற்காக அரசு  ஒரு இணையப்பகுதியை உருவாக்கி உள்ளது. Appointment ஆன்லைனில் பதிவு செய்ய கிளிக் செய்க

தற்பொழுது சோதனை ஓட்டமாக இந்த வசதி குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு(Delhi, Chandigarh, Maharashtra, Haryana, Himachal Pradesh, Punjab)  மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலத்திற்கும் இந்த வசதி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அந்த லிங்கில் சென்று அதில் கேட்கப்படும் முழுவிவரங்களை கொடுத்த பின்னர் Fix Appointment என்பதை அழுத்தினால் உங்களுக்கான நேரம் ஒதுக்கப்படும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.


உங்களுக்கு இது போன்று விண்டோ வரும் இதில் நீங்கள் எப்பொழுது யாரை பார்க்க வேண்டும் என்ற அனைத்து தகவல்களும் இருக்கும். இதை ஒரு Print எடுத்துக்கொண்டு அதனோடு உங்களின் ID Proof மற்றும் Address proof போன்றவைகளை எடுத்து கொண்டு குறிப்பிட்ட அதிகாரியை பார்த்து உங்கள் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம். 

அடையாள சான்றிதழ்கள் என்னென்ன கொண்டு செல்லலாம்:
Id Proof மற்றும் Address Proof க்கு எவைகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் சிலருக்கு குழப்பம் உண்டாகலாம். அவர்கள் கீழே உள்ள பதத்தில் உள்ள சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றினை கொண்டு செல்லலாம். 


ஆன்லைனில் Enrolment Form டவுன்லோட் செய்ய:
தபால் அலுவலகத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்வது தாமதமாகும் என்பர் எண்ணினால் இந்த லிங்கில் சென்று Enrolment Form டவுன்லோட் செய்து வீட்டில் இருந்தே பூர்த்தி செய்து கொண்டு சென்றால் வேலை மேலும் சுலபமாகிவிடும். 

வாங்கிய Appointment Cancel (or) நேரத்தை மாற்றி அமைக்க:
ஒருவேளை நீங்கள் Appointment வாங்கிய நேரத்தில் போக முடியவில்லை என்றால் தயவு செய்து உங்கள் Appointment Cancel செய்து விடுங்கள் அல்லது நேரத்தை மாற்றி கொள்ளுங்கள். அதற்க்கு இந்த லிங்கில் கிளிக் செய்து செல்லுங்கள். 




இதில் உங்களின் மொபைல் எண்ணையும், Token ID கொடுத்து தேவையான பட்டனை அழுத்தி பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும் சந்தேகங்களுக்கு:
உங்களுக்கு இந்த Aadhar அடையாள அட்டையை பற்றி மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் Toll free: 1800-180-1947 மற்றும் Email: appointments@uidai.gov.in இவைகளை தொடர்பு கொண்டு கேட்கலாம். 

Sunday, 10 February 2013

ஐந்தரை லட்சத்தின் அடுத்த நபரா நீங்கள்?

ண்களுக்கு, நுரையீரல், வயிறு, கல்லீரல், உணவுக்குழாய், ப்ராஸ்டேட் புற்றுநோயாலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு மற்றும் கர்ப்பப்பைப் புற்றுநோயாலும் அதிக அளவில் உயிர் இழப்பு நேரிடுகிறது. புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்து வதால் ஏற்படும் புற்றுநோயால் 42 சதவிகித ஆண்களுக்கும், 18 சதவிகித பெண்களுக்கும் உயிர் இழப்பு ஏற்படுகிறது.
இப்போது எல்லாம் சினிமா பார்க்க தியேட்டருக்குப் போனால், முதல் காட்சியே குலை நடுங்கவைக்கிறது. புகையிலையின் அபாயத்தைப் பொளேரென விளக்கும் வகையில் சிலருடைய புற்றுநோய்ப் பாதிப்புத் துயரங்கள் விளம்பரப் படமாகத் திரையில் விரிகிறது. அதிர்ச்சியில் உறைகிறது நெஞ்சம்.
புற்றுநோய் குறித்து உங்களை மேலும் அச்சப்படுத்துவதற்காக அல்ல இந்தக் கட்டுரை. புற்றுநோய் குறித்த அபாயத்தை முழுக்க உணர்ந்து, நம்மை நாமே நெறிப்படுத்திக்கொள்வதற்கான வழிவகையை உருவாக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.






100-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள் உள்ளன. உடலில் நகம் மற்றும் முடியைத் தவிர்த்து எங்கு வேண்டுமானாலும் புற்றுநோய் ஏற்படலாம்.
 இந்தியாவில் 2010-ம் ஆண்டில் மட்டும் 5,55,000 பேர் புற்றுநோயால் உயிரை இழந்து இருக்கிறார்கள். உலக அளவில் 76 லட்சம் பேர். இதில் 70 சதவிகித உயிர் இழப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுபவராக இருந்தால், 70 சதவிகிதம் வாழ்க்கைமுறையோடு தொடர்புடைய புற்றுநோயைத் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். சத்தான சரிவிகித உணவு, உடற்பயிற்சி, புகையிலைப் பொருட்களைத் தவிர்த்தல் போன்றவற்றை மேற்கொண்டாலே புற்றுநோய் பாதிப்பைத் தவிர்க்க முடியும்.
புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைப்பதற்கான 10 வழிகள் குறித்து டாக்டர் டி.ராஜா பேசுகிறார்.
புற்றுநோய்: நம்முடைய உடலில் உள்ள சில திசுக்கள், வழக்கத்துக்கு மாறாக வளர்ச்சி அடைந்து கட்டுப்பாடுகள் இன்றி பல்கிப்பெருகுவதுடன், மற்ற நல்ல திசுக்களைத் தாக்குவதையே புற்றுநோய் என்கிறோம். புற்றுநோய் பாதிக்கப்பட்ட செல்லானது ரத்தம் மற்றும் நிணநீர் வழியே உடலின் எந்த ஒரு பகுதிக்கும் செல்லும் தன்மைகொண்டது.
புற்றுநோய்க்கு என்ன காரணம்?
உங்கள் உடல் செல்லில் உள்ள டிஎன்ஏ குறியீட்டில் ஏற்படும் மாற்றமே புற்றுநோயைத் தொடங்கிவைக்கிறது. இந்த டிஎன்ஏ குறியீடுகள்தான் உங்கள் திசு எப்படி வளர வேண்டும், எப்படிப் பெருக வேண்டும், எவ்வளவு வேகத்தில் இது நடக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது. இந்த டிஎன்ஏ குறியீடு மாற்றமானது பிறவியிலேயே, வைரஸ் தொற்று காரணமாகவோ, புற ஊதாகதிர், பூச்சி மருந்து போன்ற சுற்றுச்சூழல் மாறுபாடு காரணமாகவோ ஏற்படலாம்.
அறிகுறிகள்
எந்த இடத்தில் புற்றுநோய் செல் வளரத்தொடங்குகிறதோ அதைப் பொருத்தே அறிகுறிகள் இருக்கும். பொதுவாக, சோர்வு, தோலுக்கு அடியில் வீக்கம், வலி, உடல் எடையில் மாற்றம், சருமத்தின் நிறம் மாற்றம், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் பிரச்னை, நீடித்த இருமல், விழுங்குதலில் பிரச்னை, உணவு செரிமானத்தில் பிரச்னை, அதிகப்படியான உடல் மற்றும் மூட்டு வலி போன்றவை பொதுவான அறிகுறிகள்.







நோய் கண்டறியும் முறைகள்
வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற உதவியாக இருக்கும். சருமத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் உள்ளிட்ட சிலவற்றைக்கொண்டு புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை மருத்துவர்கள் தெரிந்துகொள்வர். இதுதவிர ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள் மூலம் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை உறுதிபடுத்தலாம். சிடி, எம்.ஆர்.ஐ, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனை மூலம் புற்றுநோய் பாதிப்பு எங்கு உள்ளது என்பதைக் கண்டறிய முடியும்.
புற்றுநோயை எப்படித் தவிர்ப்பது?
ஊட்டச் சத்துக்கள் நிறைந்த காய்கறி, பழங்கள், ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி, புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பது ஆகியன முதற்கட்டப் புற்றுநோய்த் தவிர்ப்பு முறைகள். உடல் எடையைப் பராமரித்தல், அவ்வப்போது புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளைச் செய்துகொள்வது, புறஊதாக் கதிர்வீச்சை முடிந்தவரை தவிர்ப்பது போன்றவை புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும். ரசாயனப் பூச்சி மருந்துகள் இல்லாத, ஆரோக்கியமான இயற்கை உணவுகளையே எடுத்துக்கொள்ளுங்கள்.
சிகிச்சை முறைகள்
அறுவைசிகிச்சை, கீமோதெரப்பி, கதிர்வீச்சுத் தெரப்பி, இம்யூனோதெரப்பி போன்றவையே புற்றுநோய்க்கான சிகிச்சைமுறைகள். எதிர்காலத்தில் செல்களில் மரபியல் மாற்றங்கள் செய்து புற்றுநோயைக் குணமாக்கும் சிகிச்சை முக்கியத்துவத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சைபர் நைஃப்
புற்றுநோயாளிக்கு முதலில் சி.டி. ஸ்கேன் செய்யப்பட்டு புற்றுநோய்க் கட்டியின் அளவு, வடிவம், இடம் போன்றவை துல்லியமாகக் கண்டறியப்படும். இந்தத் தகவல்கள் அனைத்தும் சைபர் நைஃப் என்ற கருவியில் பதிவுசெய்யப்படும். சைபர் நைஃப் கருவியானது நோயாளியைச் சுற்றிப் பல இடங்களில் இருந்து கதிரியக்கத்தைச் செலுத்தி புற்றுநோய்க் கட்டியை மட்டும் தாக்கி அழிக்கும். இதனால் மற்ற நல்ல திசுக்கள் தாக்கப்படுவது குறைக்கப்படும். இந்த சிகிச்சை முறை மூலம் மூளை, கல்லீரல், சிறுநீரகம், ப்ராஸ்டேட் சுரப்பி, நுரையீரல், முதுகுத் தண்டுவடப் புற்றுநோய்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியும்.
செலக்டிவ் ரேடியேஷன் தெரப்பி
கல்லீரல் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையில் நோயாளியின் தொடையில் உள்ள நல்லரத்தக் குழாயில் துளை போடப்படும். இதன் வழியாகக் கல்லீரல் புற்றுநோய்த் திசுக்களைத் தாக்க லட்சக்கணக்கான எஸ்.ஐ.ஆர். ஸ்பியர்ஸ் என்ற பந்து போன்ற அமைப்பு செலுத்தப்படும். இந்த ஸ்பியர்ஸ் 'ஈட்ரியம் 90’ என்ற கதிர்வீச்சைக் கொண்டது. இது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதியைத் தாக்க ஆரம்பிக்கும். புற்றுநோயின் டி.என்.ஏ. அழிக்கப்படும். பழைய கதிர்வீச்சு முறைகளைக்காட்டிலும் 40 மடங்கு அதிகக் கதிர்வீச்சுத் தாக்குதல் இதில் அளிக்கப்படுகிறது.
ஏதோ ஓர் ஈர்ப்பில் போதைக்கு ஆளாகிவிடும் நாம், உயிர் மீதான ஈர்ப்பில் நல்ல பாதைக்கு மாறிக்கொள்ளலாமே!

Saturday, 29 December 2012

இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம்


கல்கி அவதாரம் பற்றிய ஓர் ஆய்வு


Who is Kalki?  Is Kalki Already Came?
அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்கள் அனைவரின் கருத்தை அறிய விரும்புகிறேன்.

இன்று ஒரு தகவல்

கல்கி அவதாரம் பற்றிய தகவல் !!!! (Must read )
இந்துக்களின் வேதங்களில் மிக பிரபலமாக அறியப்படும் "கல்கி அவதாரம்" குறித்து -அவர் பூமியில் குழப்பங்களும்,கொடுமைகளும் மலிந்து காணப்படும் பொழுது தர்மத்தை நிலைநாட்ட அவதரிப்பார் எனவும் நம்பபடுகிறது.இனி அவர் பூமியில் பிறக்க போவதில்லை.,ஆம்! அவர் ஏற்கனவே பிறந்து விட்டார் ... யார் அவர் ?ஓர் ஆய்வு பார்வை ., 
எப்போது வருவார் கல்கி அவதார்...

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.
இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.
 
ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டிஎன்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது,தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.
பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால்,இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால்,ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர்,முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.
ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ஜஸீரத்துல் அரப்என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.
ஹிந்து  நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால்,இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.
ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக,இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது,உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும்,வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.
கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன.. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.
6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.
மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும்,அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மிஃராஜ்இரவில், ‘புராக்வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.
அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும்,இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.
மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம்,குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்..

இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள்,பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

மேலும் சில குறிப்புகள்:

1. இன்று இறைவனின் வேதம் ஒன்று மனிதனின் கரம் படாமல் இருக்குமானால் அது திருகுரான் மட்டுமே, மற்ற அனைத்து வேதங்களும் மனிதனால் திருத்தி மாற்றி அமைக்க பட்டுள்ளன. உதாரணமாக பைபிள்இந்து வேதங்கள், ...திருகுரான் மட்டுமே உலக மக்களை பார்த்து பேசுகிறது. இந்த திருகுரான் உலக மக்களின் இறைவனால் கடைசி வேதமாக அருளப்பட்டது. இதற்கு முன் பைபிள் மற்றும் பல வேதங்கள் இறைவனால் அருளப்பட்டது. இந்த திருகுரான் தான் இறைவனிடம் இருந்து வந்த கடைசி வேதம்.

2. மற்ற வேதங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு அருளப்பட்டது. ஆனால் திருகுரான் மட்டுமே உலக மக்களுக்காக அனைத்துநாட்டுக்கும் இறைவனால் கடைசி வேதமாக அருளப்பட்டது

3. மற்ற வேதங்கள் அருளப்பட்ட மூல மொழி இன்று நடை முறையில் இல்லை. ஆனால் திருகுரான் அருளப்பட்ட மூல மொழி அரபி மொழி இன்று நடை முறையில் உள்ளது

4. மற்ற வேதங்களின்  முதல் பிரதி (First Copy/First Print) பாதுகாக்க படவில்லை. ஆனால் திருகுரான் முதல் பிரதி பாதுகாக்கபட்டுள்ளது. ஆதலால் தான் மனிதனின் கரம் படாமல் இருக்கிறது. முதல் பிரதி பாதுகாப்பாக இருப்பதால் யாராலும் மாற்ற முடியாது

5. மற்ற வேதங்களில் பல வேறுபாடுகளைமுரண்பாடுகளை  காண முடியும். ஆனால் திருகுரானில் ஒரே ஒரு  வேறுபாடுகளையோ முரண்பாடுகளையோ  கூட காண முடியாது

6. மற்ற வேதங்கள் முழுவதையும் யாரும் மனனம் செய்யவில்லை. ஆனால் திருகுரானை அன்று முதல் இன்று வரை வாழையடிவாளையாக மனனம் செய்து பாதுகாத்து வந்துள்ளார்கள் 

7. மனிதன் இன்று face பண்ணும் மிக பிரச்சனைகளுக்கு  திருகுரான் தீர்வாக உள்ளது. உதாரணமாக தற்கொலை, மது அருந்துதல், வட்டி, வரதட்சனை, பெண் சிசு கொலை, கற்பழிப்பு, விபச்சாரம், ..etc 
இவை அனைத்திற்கும் இன்று இஸ்லாம் தீர்வை தருகிறது,,,,,,,,,,,,,,,,,,,


Please see this below 7 min vedio clip in youtube

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR