ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Saturday 19 July 2014

35 Ways to Respect your Parents.


May Allah give us sense of ability to follow these guidelines. Aameen.

1. Put away your phone in their presence.

2. Pay attention to what they are saying.

3. Accept their opinions.

4. Engage in their conversations.

5. Look at them with respect.

6. Always praise them.

7. Share good news with them.

8. Avoid sharing bad news with them.

9. Speak well of their friends and loved ones to them.

10. Keep in remembrance the good things they did.

11. If they repeat a story, listen like it's the first time they tell it.

12. Don't bring up painful memories from the past.

13. Avoid side conversations in their presence.

14. Sit respectfully around them.

15. Don't belittle/criticize their opinions and thoughts.

16. Avoid cutting them off when they speak.

17. Respect their age.

18. Avoid hitting/disciplining their grandchildren around them.

19. Accept their advice and direction.

20. Give them the power of leadership when they are present.

21. Avoid raising your voice at them.

22. Avoid walking in front or ahead of them.

23. Avoid eating before them.

24. Avoid glaring at them.

25. Fill them with pride even when they don't think they deserve it.

26. Avoid putting your feet up in front of them or sitting with your back to them.

27. Don't speak ill of them to the point where others speak ill of them too.

28. Keep them in your prayers always possible.

29. Avoid seeming bored or tired of them in their presence.

30. Avoid laughing at their faults/mistakes.

31. Do a task before they ask you to.

32. Continuously visit them.

33. Choose your words carefully when speaking with them.

34. Call them by names they like.

35. Make them your priority above anything.

Parents are treasure on this land and sooner than you think, that treasure will be buried. Appreciate your parents while you still can.
Today lets make loads of duas for our beloved parents, alive or deceased.
If U love UR parents please forward this dua!

Ya Allah ease the burdens of our beloved parents, آمِيْن يَارَبَّ الْعَالَمِينْ

Ya Allah remove their burdens due to debt, آمِيْن يَارَبَّ الْعَالَمِينْ

Ya Allah ease their pain, آمِيْن يَارَبَّ الْعَالَمِينْ

Ya Allah give shifa for the diseases they're suffering from, آمِيْن يَارَبَّ الْعَالَمِينْ

Ya Allah never make them dependent on anyone besides YOU until their last breath, آمِيْن يَارَبَّ الْعَالَمِينْ .
We should respect and honour our parents.

Never hurt them, part of the reason of all the troubles they're undergoing is due to us.

Their debts are due to fulfilling our needs,

their poor health is due to their efforts in giving us the best.

Their every breath is a sacrifice made for their children...

Ya Allah bless our parents with happiness.

Make a promise that u would at least do one thing today which will make UR parents happy.
Plz forward this atleast if you dont have time to read!
It is an Amana that we pray for our parents

Allahumma irhamhumaa kamaa rabbayaanaa sagheeraa.
(Oh, Allah, have mercy upon them as they have raised me from the cradle)
May Allah bless our parents with good health, wealth, deen and blessings.
Aameen
��Pass this dua so that as much as parents get this beautiful dua.
One parent can take care of seven children, pity that seven children together cannot take care of one parent.
May Allah bless our parents for those whose parents have passed on may اَللَّه سُبْحَانَهُ وَتعالي grant them all marhooms the highest stages in jannah!!!
إن شَاءَ أللَّهُ
آمــــين
From Feroz/Sharjah

Monday 14 July 2014

Small introduction about Palestine


ஜெர்மனியில் ஹிட்லர்
யூதர்களை கொன்றொழித்த
போது அங்கிருந்து தப்பியவர்கள்
முதலில் பலஸ்தீனில் குடியேறினார்கள்..

..பலஸ்தீன மக்களும்
அவர்களை அரவனைத்தார்கள்...பின்னர்
அம்மக்கள் அங்கு சொத்து வாங்கினர்
அதற்கும் பலஸ்தீன அரசு சம்மதம்
தெரிவித்தது...

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட
யூதர்கள் மற்ற நாடுகளில் இருந்த யூத
உறவினர்களையும்
பலஸ்தீனுக்கு அழைத்தனர் ..

.அவர்களும்
ஒவ்வொருவராக பலஸ்தீனில் சட்ட
விரோதமாக குடியேறினார்கள் ...
பின்னர் யூதர்கள் பெரும்பான்மையாக
வசித்த பலஸ்தீனின் சில பகுதிகளில்
முஸ்லிம்களைக்
கொன்று குவித்தனர்...அமெரிக்கா அந்த
யூதர்களுக்கு ஆயுதமும் ,பணமும்
வழங்கி உதவி செய்தது...

இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட
யூதர்கள் பலஸ்தீனின் பெரும்பாலான
பகுதிகளை ஆக்கிரமித்து ‪#‎இஸ்ரேல்என்ற‬
தனி நாடு பிரகடனப்படுத்தி
னர்...

அமெரிக்க கைக்கூலி ஐ.நா வும்
வாய்மூடி மௌனம் காத்தது...அதன்ப
ிறகு முதல்முறையாக உலக
வரைபடத்தில் இஸ்ரேல் என்ற
நாடு சேர்க்கப்பட்டது ...

இவ்வாறு முழுக்க முழுக்க
சூழ்ச்சியாலும் ,நயவஞ்சகத்தாலும்
முஸ்லிம்களிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட
்ட நாடு தான் "இஸ்ரேல் "..
அது முதல்
இன்று வரை ஒவ்வொரு நாளும்
அப்பாவி பலஸ்தீன மக்களை யூத
பயங்கரவாத ராணுவம்
கொன்று குவிக்கிறது ...

ஆனால் மற்ற முஸ்லிம் நாடுகள்
வேடிக்கை பார்க்கிறது...இ
து தொடர்கதையாகி விட்டது ...

வேடிக்கை பார்ப்பதோடு அல்லாமல்
அந்நாட்டு தயாரிப்புகளை அதிகமாக
வாங்குவதன் மூலம் அவர்கள் முஸ்லிம்கள்
மீது தொடுக்கும்
தாக்குதல்களை ஊக்கப்படுத்துகி
றது ...இவ்வாறு இஸ்ரேலுக்கு மறைமுகமாக
ஒத்துழைப்பதில்
"சவூதி அரேபியா "முக்கிய
பங்காற்றுகிறது ...

ஆனால் இந்திய மக்கள் மனம் பொறுக்காமல்
முகநூலில் பதிவிடுவது மட்டும் தான்
மிச்சம் ...அதற்காக நாம் போரிட
முடியாது...இருந்தாலும்
பொருளாதார ரீதியாக
இஸ்ரேலை தனிமைப்படுத்தி வெற்றி காண
வேண்டும் ...

இஸ்ரேலிய ,அமெரிக்க
பொருட்களை புறக்கணிக்க
வேண்டும் ...அதை செய்யாமல்
இங்கே பதிவு போடுவது மட்டும்
தீர்வைத் தராது....

தகவல் நன்றி:
Engr Sulthan

Sunday 13 July 2014

Saturday 12 July 2014

நம்முடைய போராட்ட களம் இஸ்ரேலுக்கு எதிராக ஏன் இப்படி அமைய கூடாது?

அன்பான சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

கடந்த சிலதினங்களாக நமது பாலஸ்தீன் மக்களை குறிப்பாக ஒன்றும் அறியாத இளம் தளிர்களை யூதபயங்கரவாதிகள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்கின்றார்கள்.இச்செய்திகளை முகநூல் வாயிலாக சகோதரர்கள் அனுப்பும் புகைப்படங்களில் பார்க்கும்போது கண்களில் கண்ணீர் ஆறாய் வருவதை எம்மால் தடுக்கமுடியவில்லை.யூதபயங்கரவாதிகளின் திமிர் அடங்கவும்.நமது சொந்தங்கள் சிறப்பாக ரமலானின் நோன்புகளை நோற்கவும் இன்ஷா அல்லாஹ் இன்று இஃப்தார் நேரத்தில் அதிகம் துவா செய்யுங்கள்.அல்லாஹ் நமது துவாகளை ஏற்றுக்கொண்டு யூத இஸ்ரேல்களுக்கு தகுந்த தண்டனையினை வழங்குவானாக !

அல்லாஹ்விடம் கையேந்துவோம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எங்கள் இறைவா எங்கள் கண்களில் கண்ணீரோடு உன்னிடம் கையேந்துகிரோம் ஒன்ரும் அரியாத இந்த பிஞ்சு குழந்தைகளின் இந்த நிலைமைக்கு யார் காரணமோ அவர்களை நீ பார்த்து கொள் யா ரஹ்மானே!

எங்கள் இறைவா எங்களுக்கு என்றுமே நீயே உதவி செய்பவன் உன்னை தவிர உதவி செய்ய யாரும் இல்லாதவர்கள் நாங்கள் ஆகவே உன்னிடமே கையேந்துகிரோம் இந்த அநியாயகார பாவிகளை நீ பார்த்துகொள் ரப்பே!

மரணித்த சிறுவர்களுக்கு மருமையில் நற்பேறு அருள்வாய் ரஹ்மானே!

மரணித்தவர்களின் பெற்ரோர்களுக்கு நீ சாந்தி அருள்வாய் ரஹ்மானே!

காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கு யா ரப்பே!

எங்கள் குழந்தைகளையும்,பெண்களையும்,முதியோர்களையும் கொன்ரு குவிக்கும் இந்த அனியாயக்காரர்களிடம் இருந்து இந்த சமுதாயத்தை காப்பாற்று யா அல்லாஹ்!

இது போன்ற சூழ் நிலையில் எங்கள் ஈமானை அதிகபடுத்து யாஅல்லாஹ்!

ஒரு மூமினாக அன்றி எங்களை மரணிக்க செய்து விடாதே யாரப்பே..!

நம்முடைய போராட்ட களம்
இஸ்ரேலுக்கு எதிராக ஏன் இப்படி அமைய
கூடாது?

நம் வசிக்கும் தெருவில் கண்டன
பதாகைகள் நம்முடைய வீடுகளில்
கருப்பு கொடி ஏற்றுதல்
இணைய தளத்தை சரியாக
பயன்படுத்தி நம்முடைய சொந்த
கண்டனங்களை united nation (ஐ
நா சபைக்கும்)human rights organisation (மனித
உரிமைகள் ஆணையம்,ஜெனிவா)g
overnment of isrel (இஸ்ரேல் அரசு)மின்னஞ்சல்
மூலம் பதிவு செய்யலாமே!
மேற்கண்ட மூன்று அமைப்புகளுக்கும்
உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கண்டன
கையொப்பம் பெற்று அந்த
பிரதியை கணினியில் ஸ்கேன்
செய்து அதையும் மின்னஞ்சல்
அனுப்பலாமே,அந்த அசலை பதிவு தபால்
மூலம் மூன்று அமைப்பிற்கும் அனுப்பலாமே!
பின்னால் இருந்து ஒரு குரல்
வருகிறது இதையெல்லாம்
துடைத்து தூக்கி எறிவார்கள் என்று!
முயற்சி செய்து பாருங்கள் பலன்
இறைவன் நாடினால் உண்டு.
அடுத்த கட்டமாக தாங்கள் இருக்கும்
பகுதியில் உள்ள நீதிமன்றங்களில்
வழக்கு தொடருங்கள் உங்கள்
விண்ணப்பம் நீதிமன்றம்
ஏற்று கொண்டால்
அதை தொடர்ந்து வழக்காக
மாற்றி வழக்கை தொடருங்கள்
இல்லையேல் உங்கள் கண்டனம்
நீதிமன்றத்தில் கதவை தட்டியுள்ளது அதற்கும்
ஒரு மதிப்பு உண்டு.
யார் யாரெல்லாம்
செய்யலாம் உணர்வுள்ள அனைவரும்
செய்யலாம் செலவு 200 - 500
இந்திய ரூபாய் ஆகும் குறைந்தது 500இல்
இருந்து 1000 மின்னஞ்சல் மற்றும்
கையொப்ப கடிதம்
சென்றடைந்தாலே யோசிப்பார்கள்.
சரி நான் இந்தியாவில்
இல்லை வெளிநாட்டில் இருக்கிறேன்
என்றால் அங்கும் இதே போல்
செய்யலாம்
சரி மின்னஞ்சல் தபால் முகவரி எளிது google
search போய் இந்த அமைப்புகளின் இணைய
தளத்தில் எடுக்கலாம்.நானும்
தேடி பதிவிடுகிறேன் முடிந்தவர்கள்
தேடி பதிவிடுங்கள்.
அல்லாஹ் இந்த சிறு முயற்சிக்கு பலன்
அளிப்பான்.
For general procurement issues, please contact
theProcurement Division: pd@un.orgDetailed
information on Debriefing and ProcurementChallenges
can be found on the FAQ on Debriefingand
Procurement Challenges page.For procurement
challenges against contractawards, please contact
the Secretariat of the AwardReview Board at: Award
Review Board- Guidelinesand Complaint Form.For
complaints to be reported to the Office ofInternal
Oversight Services , please contact theInvestigation
Unit through the OIOS Hotline at:investigatio
nsOIOS@un.org or visit their website .For all ethical
issues please contact the EthicsOffice Helpline: +1
(917) 367-9858 or Email:ethicsoffice@un.org

அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்


7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர்

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள், தவறு செய்தவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)
பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று, தான் செய்த பாவத்தை நினைத்து கவலைப்பட்டு அதற்காக கண்ணீர் வடிப்பது.
இங்கு உண்மையான தவ்பாவின் நிபந்தனைகளை ஞாபகமூட்டுவது பொருத்தமாக இருக்கும், அவைகள் பின்வருமாறு.
ஏற்றுக் கொள்ளப்படும் தவ்பாவின் நிபந்தனைகள்
பிழை பொறுப்பு தேடுபவரிடம் இருக்க வேண்டிய நிபந்தனைகள்,
1. உள்ளத் தூய்மையுடன் பிழை பொறுப்பு தேடவேண்டும்.
2. செய்த பாவங்களை முற்றாக விட்டுவிட வேண்டும்.
3. அதற்காக கவலைப்பட வேண்டும்.
4. இனிமேல் அத்தவறை செய்யமாட்டேன் என அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்க வேண்டும்.
5. மரணத்திற்கு முன் பாவமன்னிப்பை செய்ய வேண்டும், மரண நேரத்தில் செய்யப்படும் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். (இவைகள் அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கான நிபந்தனைகளாகும்)
6. அடியார்களுக்கு செய்த தவறாயின், அவர்களிடம் மன்னுப்புக் கேட்க வேண்டும், அது ஒரு பொருளாக இருந்தால் உரியவரிடம் திருப்பி கொடுத்திட வேண்டும்.
இவைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பிழைபொறுப்பின் நிபந்தனைகளாகும்.
நாம் செய்த பாவங்களை நினைத்து, அழுது புலம்பி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பதால் நம்மை நரகமே தீண்டாது.
அல்லாஹ்வின் பயத்தால் அழுத கண், அல்லாஹ்வின் பாதையில் விழித்திருந்து பாதுகாத்த கண் (இவ்விரு கண்களையும்) நரகம் தீண்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
நபி (ஸல்) அவர்களும் முன் சென்ற நல்லவர்களும் அல்லாஹ்வின் பயத்தால் அதிகம் அழக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
நாம் செய்த பாவங்களை நினைத்து, அல்லாஹ்விடம் அழுவோமாக!
அன்புள்ள சகோதர சகோதரிகளே! மேல் கூறப்பட்ட ஏழு கூட்டத்தவர்களின் பண்புகளை நாமும் பெற்றவர்களாகவே வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று முடிவெடுங்கள். அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். அதற்கு முடியாத பட்சத்தில் ஒரு கூட்டத்திலாவது நம்மை நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வாய்ப்பளிப்பானாக..!

போர் நடக்கும் தினத்தில் புறமுதுகு காட்டுதல்


பூமியில் குழப்பங்கள் தீர்க்கப்படுவதற்காகவும், இறைவனு டைய மார்க்கம் நிலை நாட்டப்படுவதற்காகவும் முஸ்லிம்கள் தங்கள் உடைமைகளையும், உயிர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இறைவனும் இறைத்தூதரும் காட்டிய முறைப்படி இறைமறுப்பாளர்களுடன் அறப்போர் புரிய அழைக்கப்பட்டால் அதில் கலந்து கொள்வது முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமையாகும். அப்படி அழைக்கப்படும் போது தன் உயிர், தன் பொருளாதாரம் தான் மேலானது,

இந்த அறப்போரில் கலந்து கொண்டால் அவை அழிந்து விடுமோ என்ற அச்சத்தோடு ஒரு முஸ்லிம் அதில் கலந்து கொள்ளவில்லையாயின், அவன் செய்யும் அச்செயல் அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
''பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தை களையும், பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் என்ன? (அவர்களோ) எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்¥ரை விட்டும் எங்களை வெளியேற்றுவாயாக் எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக! இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.'' (அல்குர்ஆன் 4:75)
''என் சமூகத்தாரே! உங்களுக்கு அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டித் திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நட்டமடைந்தவர்களாகத் திரும்புவீர்கள்.'' அல்குர்ஆன் 5:21
அல்லாஹ்வுடைய பாதையில் போராடுதல் என்றால் கண்களில் காணும் இறைமறுப்பாளர்களை எல்லாம் வெட்டி வீழ்த்துவது என்று அர்த்தமல்ல் இஸ்லாத்தைத் தெளிவாக எடுத்துக் கூறியும் அவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற காரணத்திற்காகக் கண்ட இடத்தில் வெட்ட வேண்டும் என்ற அர்த்தமும் அல்ல. இஸ்லாமிய மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்வதைத் தடை செய்து குழப்பம் விளைவித்தாலோ அல்லது முஸ்லிம்களின் உடமைகளுக்கும் உயிர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தினாலோதான் அதை எதிர்த்துப் போராட வேண்டும்.
அக்கிரமம் ஒன்றும் நடக்காமல் இருக்கும் போது போரிடுவது குற்றம். அவ்வாறே அக்கிரமம் நடந்து கொண்டிருக்கும் போது போரிடாமல் இருப்பதும் குற்றம். அந்தப் போரையும் இஸ்லாமிய அரசு தான் நடத்த வேண்டுமே தவிர, தன்னிச்சையாக எவரும் செயல்படக் கூடாது. அப்படி எவரேனும் தன்னிச்சையாகச் செயல்பட்டால் அது அறப்போர், ஜிஹாத், புனிதப் போர் என்று ஒரு போதும் அழைக்கப்படாது. மரண தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும்.
''உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.'' (அல்குர்ஆன் 2:190)
எவருடனும் அநியாயமான முறையில் இஸ்லாம் ஒரு போதும் போரிடப் பணிக்கவில்லை. தற்காப்பு நடவடிக்கையாகவும், தேசியப் பாதுகாப்பு நடவடிக்கையாகவும்தான் இஸ்லாம் போரிடப் பணிக்கிறது. தற்காப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு நடவடிக்கைகள் வேண்டாம் என்று எந்த ஓர் அறிவாளியும் கூறமாட்டான்.
இறைவன் காட்டித்தந்துள்ள இந்த முறைப்படி போராட அழைக்கும் போது ஒரு முஸ்லிம் அதில் கலந்து கொள்ள மறுத்தால், அவன் மிகவும் இழிவானவன்; நயவஞ்சகன் (முனாஃபிக்) என்ற நிலைக்கு தள்ளப்படுகிறான்.
மூஸா(அலை) அவர்கள் தம் சமூகத்தாரை அல்லாஹ்வின் பாதையில் போரிட அழைத்த போது, அவர்கள் கூறியதையும் அதனால் அவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனையையும் திருக்குர்ஆனில் நாம் தெளிவாகக் காண்கிறோம்.
மூஸாவே! மெய்யாகவே, அந்த இடத்தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின் நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம் என்று கூறினார்கள்.
(இறைவனை) அஞ்சிக் கொண்டிருந்தோர்க்கு மத்தியில் இருந்த அந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடை யைப் பொழிந்தான். அவர்கள், (மற்றவர்களை நோக்கி) அவர்களை எதிர்த்து வாயில்வரை நுழையுங்கள்; அதுவரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்களாவீர்கள்; நீங்கள் மூஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள் என்று கூறினார்கள்.
அதற்கவர்கள் ''மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை ஒரு போதும் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம் நீரும் உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் புரியுங்கள், நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.'' என்று கூறினார்கள்.
''என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது; எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்தச் சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!.'' என்று மூஸா கூறினார்.
(அதற்கு அல்லாஹ்) ''அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாக தடுக்கப்பட்டு விட்டது; (அதுவரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை) வார்கள்;. ஆகவே நீர் இத்தீயக் கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்'' என்று கூறினான். (அல்குர்ஆன் 5:22-26)
அல்லாஹ்வின் பாதையில் போராட மூஸா(அலை) அவர்கள் அழைத்ததற்குச் செவிமடுக்காததால் அவர்கள் தீயவர்கள் என்று தீர்ப்பு கூறப்பட்டு இறைவன் கொடுத்த அருட்கொடைகளில் நின்றும் தடுக்கப்பட்டவர்கள். எவ்வளவுதான் அருளும் வளமும் வாழ்வில் பெற்றிருந்தாலும் கூட நியாயத்தை நிலைநிறுத்தும் வகையில் நடத்தப்படும் அறப்போரை விட்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டால் அனைத்தும் அழிந்து விடும்; இறுதியில் திக்கற்ற நிலையில் தான் மனிதன் இருப்பான்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காலத்தில் கஅபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள், ஹிலால் இப்னு உமையா(ரலி) அவர்கள் இன்னும் மிராரா இப்னு ரபீஃ அல் ஆமிரி(ரலி) அவர்கள் ஆகிய மூன்று நபித்தோழர்கள் மார்க்கம் அனுமதித்த காரணங்கள் ஏதும் இல்லாமல் போரில் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் இவ்வாறு செய்த காரணத்தினால் உண்மையான இறை நம்பிக்கையாளர்களாக இருந்தும் கூட இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தம் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களை மன்னிக்க இயலவில்லை.
யுத்தத்தில் கலந்து கொள்ளாத முனாஃபிக் (நயவஞ்சகர்)கள் எல்லாம் பொய்யான காரணத்தைக் கூறி நபி(ஸல்) அவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்கள். ஆனால் இம்மூன்று நபித்தோழர்களும் பொய்யான காரணங்களைக் கூற விரும்பவில்லை. நபி(ஸல்) அவர்கள் அம்மூன்று நபித்தோழர்கள் மீதும் இரக்கம் கொண்டார்கள். இருப்பினும் கூட இறைவனுடைய அனுமதி இல்லாமல் தாங்களாக மன்னிப்பு வழங்க முடியவில்லை. முஸ்லிம்கள் யாரும் அவர்களுடன் பேசக்கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்ததால் யாரும் அவர்களுடன் பேசவுமில்லை.

இவ்வாறாக ஐம்பது நாட்கள் கழிந்து விட்டன. அதற்குப் பின்பு தான் அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டதாக வஹீ மூலம் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தான். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் அழுது கொண்டே இருந்தேன் என்று கஅபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இச்சம்பவம் புகாரி எனும் ஹதீஸ் நூலில் மிகத் தெளிவாக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
''(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும்,(அல்லாஹ் மன்னித்து விட்டான்) பூமி இவ்வளவு விசாலமானதாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வது கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனை விட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லை என்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அல்லாஹ் அவர்களை மன்னிப்பவனாகவும் மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.'' (அல்குர்ஆன் 9:118)

நபித்தோழர்களுக்கே இந்நிலை என்றால் அப்பெரும் பாவத்தைத் பிறர் செய்து விட்டால் அவர்களுடைய நிலை என்னவாகும் என்பதைச் சிந்திக்க வேண்டும். சத்தியம் வெல்ல வேண்டும், அசத்தியம் அழிய வேண்டும். அதற்காக ஒரு முஸ்லிம் தன் உயிரையே தியாகம் செய்ய முன்வர வேண்டும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR