ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Sunday 28 September 2014

செவ்வாய்_கிரக சுற்றுவட்டப் பாதையில் #மங்கள்யான்: இந்தியாவின் வெற்றிகரமான சாதனை


இந்தியாவின் “பட்ஜெட்”விண்கலமான மங்கள்யான், இன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில்நுழைந்தது. காலை 7.41மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.கடந்த 2013ல் செப்.,5ல் துவங்கிய 325 நாள் பயணம் நிறைவடைந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்து பல புதிய சாதனைகளையும் அது படைக்கும்.
செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தை நிலை நிறுத்த திரவ இயந்திரம் தொடர்ந்து 24 நிமிடங்கள் இயக்கப்பட்டது. நேற்றைய சோதனையின் மூலம் இரண்டு விஷயங்களை இஸ்ரோ சாதித்துள்ளது. அதாவது என்ஜினும், விண்கலமும் சரியாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
2வது மங்கள்யான் விண்கலத்தை செவ்வாயின் சுற்றுப் பாதைக்கு வெகு அருகே கொண்டு செல்ல முடிந்துள்ளது.பெரிய ராக்கெட் மோட்டார் தவிர, எட்டு சிறிய ரக திரஸ்டர்களும் மங்கள்யானுடன் இணைக்கப்பட்டுள்ளன.
பெரிய ராக்கெட் மோட்டார் செயல்படாமல் போனால், இந்த திரஸ்டர்களை இயக்கி அதன் உதவியுடன், செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் மங்கள்யானை விஞ்ஞானிகள் நிலை நிறுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் நிலை நிறுத்தப்படுவதால் அதன் குறைந்தபட்ச தூரமானது செவ்வாயிலிருந்து 423 கிலோமீட்டர் உயரமாக இருக்கும்.
அதிகபட்ச தூரமானது 80,000 கிலோமீட்டராக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரக சுற்றுப் பாதைக்குள் நுழைந்த முதல் விண்கலம் என்ற பெருமையும் மங்கள்யானுக்கு கிடைகத்துள்ளது.இதை சரியாக செயல்படுத்திய நான்காவது நாடு என்ற பெருமையும் நமக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா ஆகியவைதான் இதை சாதித்துள்ளன.
நேரில் பார்வையிட்டார் பிரதமர் மோடி :மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நிலைநிறுத்தப்படும் நிகழ்ச்சியை இஸ்ரோ விண்வௌி ஆராய்ச்சி மையத்தி்ல் இருந்து நேரடியாக பார்வையிடுட்டார் நரேந்திர மோடி. அவருடன் கர்நாடக முதல்வரும் உடன் இருந்தார்.
பிரதமர் வாழ்த்து : செவ்வாய் சுற்றுவட்டபாதையில் மங்கயான் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட உடன், அதற்காக பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
மங்கள்யான் “ஹீரோ’க்கள்
கடந்த நவ., 5ல், பி.எஸ்.எல்.வி., சி25 ராக்கெட்டில் வைத்து ஏவப்பட்ட மங்கள்யான் – விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இது இந்தியா செவ்வாய்க்கு அனுப்பிய முதல் விண்கலம். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குப் பின்புலமாக இருந்தவர்கள் யார் தெரியுமா:
ராதாகிருஷ்ணன்
இஸ்ரோ தலைவர் மற்றும் இந்திய விண்வெளி துறையின் செயலராக இருக்கிறார். இஸ்ரோவின் அனைத்து விதமான திட்டங்கள், செயல்பாடுகளுக்கு இவரே முதல் பொறுப்பு. இது ஒரு புதுமையான மற்றும் சவாலான பணியாக இருப்பினும், இந்த புதிய விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். கேரளாவின் திருச்சூரை சேர்ந்த இவர் படித்தது எலக்ரிக்கல் இன்ஜினியரிங்.
பெங்களூர் ஐ.ஐ.எம்.,மில் எம்.பி.ஏ., முடித்தார். திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்தார். ஐ.ஐ.டி., காரக்பூரில் 2000ல் பி.எச்டி பட்டம் பெற்றார். 2009 அக்., 31ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றார். 40 வருட விண்வெளி துறை அனுபவம் உடையவர். இஸ்ரோவில் பல்வேறு பணிகளை வகித்துள்ளார்.
அண்ணாதுரை
மங்கள்யான் திட்ட இயக்குநராக இருப்பவர். தமிழகத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை. இவர் 1982ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார். ரிமோட் சென்சிங் தொடர்பான விண்கல ஆராய்ச்சியில் முதன்மை வகிக்கிறார். இவர் இந்த விண்கலத்துக்கான செலவு, விண்கலத்தின் கட்டமைப்பு, அது செல்லும் திசை, செலுத்துவதற்கான நேரம், விண்கலத்துக்கு தேவையான தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கு பொறுப்பு வகித்தார். இவர் ஏற்கனவே இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குநராகவும் இருந்தார்.
இது இந்தியா மற்றொரு கோளுக்கு அனுப்பிய முதல் விண்கலம். எனவே இவை அனைத்தும் புதுமையானது. பூமிக்கும், செவ்வாய்க்கு இடையிலான காலநிலை போன்றவற்றை பலமுறை கணித்து, விண்கலம் ஏவக்கூடிய தருணத்தை குறித்தது இவர் தான்.
ராமகிருஷ்ணன்
இவர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருக்கிறார். மங்கள்யான் விண்கலம் செலுத்தும் பொறுப்புக்குழுவின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் 1972ல் இஸ்ரோவில் சேர்ந்தார். பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மேம்பாட்டு வளர்ச்சியில் இவர் பணி மகத்தானது. ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் மற்றும் ராக்கெட் ஏவுவதற்கான நிலைகள் ஆகியவற்றை கணிப்பது இவரின் பணி. மங்கள்யான் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட் வடிவமைத்தற்கு இவர் தான் பொறுப்பு.
இது குறித்து அவர் கூறியது: செவ்வாய்க்கு நாம் அனுப்பிய விண்கலம், முற்றிலும் நமது உள்நாட்டு உபகரணங்களை வைத்து தயாரித்ததில் பெருமை. இந்த பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவுதற்கான மொத்த நேரம் 48 நிமிடமாக இருந்தது. மற்ற பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவுவதற்கான நேரத்தை விட, இது இருமடங்கு.
எஸ்.கே. சிவக்குமார்
மைசூருவை சேர்ந்த இவர் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக இருக்கிறார். இவர் 1976ல் இஸ்ரோவில் சேர்ந்தார். இந்திய செயற்கைக்கோள் வடிவமைப்பு பணியில், திட்டமிடுதல்; இயக்குதல் போன்றவற்றில் இவரது பணிகள் அதிகம். இஸ்ரோ முதன் முதலாக உள்நாட்டு தயாரிப்பில் வெற்றிகராமாக அனுப்பிய செயற்கைக்கோளின் திட்ட இயக்குநர் இவரே.
மங்கள்யான் வெற்றி குறித்து இவர் கூறியது; “செவ்வாயில் நமது குழந்தை தவழ்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு குழந்தைக்கான ஆப்பரேஷன் போலத் தான் இருந்தது’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
பி.குன்ஹிகிருஷ்ணன்
பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் திட்ட இயக்குநராக ஒன்பதாவது முறையாக பதவி வகிக்கிறார். இவர் 1986ல் இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட 8 பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளின் மிஷன் திட்ட இயக்குநராக இருந்தார். நவ., 5ல் மங்கள்யான் விண்கலம் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., சி25/மார்ஸ் ராக்கெட்டின் திட்ட இயக்குநரும் இவரே. ராக்கெட் ஏவப்பட்டதிலிருந்து, அதிலிருந்து செயற்கைக்கோள் சரியாக பிரிந்து சுற்றுவட்டப்பாதையில் இணையும் வரை நடக்கும் நிகழ்வுகளுக்கு இவரே பொறுப்பு.
மற்ற ராக்கெட்டுகளை இந்த மங்கள்யான் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட் தயாரிப்பு, காலநிலை மற்றும் ஏவுவதற்கான கால நேரம் உள்ளிட்ட விஷயங்கள் இவருக்கு சவாலாக அமைந்தது.
சந்திரடாதன்
இவர் எரிபொருள் ஒழுங்குமுறை அமைப்பின் திட்ட இயக்குநர். 1972ல் இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். இவர் எஸ்.எல்.வி., – ராக்கெட் தயாரிப்பில் முக்கிய பங்காற்றினார். முப்பது ஆண்டுகளாக எஸ்.எல்.வி., – 3, ஏ.எஸ்.எல்.வி., மற்றும் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் தயாரிப்பில் பணியாற்றியுள்ளார்.
ஏ.எஸ்.கிரண்குமார்
செயற்கைக்கோள் அப்ளிகேஷன் மையத்தின் திட்ட இயக்குநராக இருக்கிறார். இவர் 1975ல் இஸ்ரோவில் சேர்ந்தார். எலக்ட்ரோ – ஆப்டிகல் இமேஜிங் சென்சாரின் வடிவமைப்பு மற்றும் வளர்ச்சியில் இவரது பங்கு முக்கியமானது. சந்திராயன் – 1 விண்கலத்திலும் இவரது பணி இருந்தது. ராக்கெட்டின் மூன்றுவிதமான இயங்குதிறனுக்கு (மார்ஸ் கலர் கேமரா, மீத்தேன் சென்சார், தெர்மல் இன்பிராரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர்) இவரே பொறுப்பு.
மங்கள்யான் வெற்றி குறித்து கூறுகையில், “நீண்காடலம் செயல்படும் விண்கலத்தின் முதல் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளோம்’ என்றார்.
எம்.ஒய்.எஸ்.பிரசாத்
சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருக்கிறார். 1975 – 1994 வரை இஸ்ரோவின் லாஞ்ச் வெகிக்கிள் வளர்ச்சி பணியில் பணியாற்றினார். டி-டாம் மற்றும் எஸ்.எல்.வி., – 3 (நாட்டின் முதல் உள்நாட்டு தயாரிப்பு ராக்கெட்) ஆகிய திட்ட பணியில் இவரது பங்கு முக்கியமானது. 1998 – 2005 வரை இஸ்ரோவின் முதன்மை கட்டுப்பாட்டு வசதியின் இயக்குநராக இருந்தார். ராக்கெட்டின் பாதுகாப்பு திறன்களுக்கு இவரே பொறுப்பு.
எஸ்.அருணன்
திருநெல்வேலியை சேர்ந்த மங்கள்யான் திட்டப்பணியின் இயக்குநர். மங்கள்யான் விண்கல வடிவமைப்பு குழுவில் இவரும் ஒருவர்.
மங்கள்யான் விண்கலத்தின் தயாரிப்பில் பல்வேறு சவலான பணிகளை மேற்கொண்டார். 300 நாட்களுக்குப்பின், மீண்டும் இயக்கக்கூடிய வகையில் இந்த மங்கள்யானில் சோலார் மின்திறன் செல்; மற்றும் புதிய நேவிகேஷன் மையம் ஆகியவற்றை வடிவமைத்தார்.
ஆட்டோ கட்டணத்தைவிட குறைவு
மங்கள்யான் விண்கலத்தை தயாரித்தது முதல் ஏவியது வரை ஆன செலவு 454 கோடி ரூபாய். மங்கள்யான் பயணம் செய்த தூரம் 68 கோடி கி.மீ., அதாவது, மங்கள்யான் ஒரு கி.மீ., தூரம் பயணம் செய்ய ஆன செலவு சராசரியாக 6.70 ரூபாய் மட்டுமே. இது ஆட்டோ கட்டணத்தைவிட குறைவு. அவ்வளவு சிக்கனமாக நமது விஞ்ஞானிகள் இதை சாதித்துக் காட்டி உள்ளனர்.
நன்றி.சிந்திங்க

Saturday 27 September 2014

ஜெ . சொத்துக்குவிப்பு வழக்கு:தண்டனை விவரம்

சொத்துக்குவிப்பு வழக்கில்
ஜெயலலிதாவுக்கு 4
ஆண்டு சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய்
அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்
அவருடைய எம்எல்ஏ., பதவியையும் பறிக்க
நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் .தொடர்ந்து ஜெயலலிதா,
பரப்பன அக்ரகாரம் சிறையில்
அடைக்கப்பட்டார்.
ஜெயலலிதா விரும்பினால் தமிழக
சிறைக்கு மாறிக் கொள்ளலாம். இந்த
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா,
சுதாகரன், இளவரசி ஆகியோரும்
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவருக்கும் 4 ஆண்டு சிறைத்
தண்டனையும் தலா 10 கோடி ரூபாய்
அபராதமும் விதிக்கப்பட்டது.

Tuesday 23 September 2014

நேர்மையாக நடந்து கொண்ட முஸ்லீம் மாணவன் லத்தீப்!.


ATM இல் ரூ. 200 எடுக்க
போனவருக்கு ரூ. 26 லட்சம்
வெளியே வந்தது! நேர்மையாக
நடந்து கொண்ட முஸ்லீம்
மாணவன் லத்தீப்!.
ஐதராபாத்;  இளநிலை பட்டப்
படிப்பு படிக்கும் லத்தீப் என்னும்
மாணவன் ஐதராபாத் எஸ்.ஆர். நகரில்
வசிக்கிறார். நேற்று காலை லத்தீப்
தனது நண்பருடன் சேர்ந்து அப்பகுதியில்
இருக்கும்
அரசு வங்கிக்கு சொந்தமான
ஒரு ஏ.டி.எம்.க்கு பணம் எடுக்கச்
சென்றுள்ளார். அவர் எடுக்க நினைத்த
பணம் ரூ. 200 தான். இதற்காக
தனது ஏ.டி.எம் கார்டை இயந்திரத்தில்
செலுத்திய பின்னர், தனது ரகசிய
குறியீட்டு எண்ணை அழுத்தினார்.
அப்போது திடீரென அந்த ஏடிஎம் இயந்திர
பாகங்கள்
திறந்து கொண்டு அந்த
இயந்திரத்திலிருந்த ரூ. 26 லட்சம்
வெளியே கொட்டியதாக
தெரிகிறது.
இதை கண்டு அதிர்ந்த மாணவன் லத்தீப்,
உடனடியாக ஏ.டி.எம் மையத்திலிருந்த இருந்த
கட்டணமில்லா தொலைபேசி எண்ணை
தொடர்பு கொண்டு நடந்த
சம்பவத்தை விவரமாக
தெரிவித்துள்ளார். பின்னர்
தனது நண்பனை பணத்திற்கு காவல்
வைத்து விட்டு அருகிலிருந்த எஸ்.ஆர். நகர்
காவல் நிலையத்திற்கு சென்று புகார்
தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விரைந்து வந்த
வங்கி அதிகாரிகள்,
இயந்திரத்தை சரி செய்தனர். சம்பவம்
நிகழ்ந்த ஏ.டி.எம் மையத்தில்
கண்காணிப்பு கேமராவோ பாதுகாவலரோ
இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கி அதிகாரிகளின் இந்த
அலட்சியத்தை போலீஸார் கண்டித்தனர்.
அதேநேரம் மாணவர் லத்தீப்பின் நேர்மையையும்,
பணத்தை ஒப்படைக்க அவர் எடுத்த
முயற்சிகளையும் போலீஸாரும்,
வங்கி அதிகாரிகள் மற்றும்
பொது மக்கள் வெகுவாக
பாராட்டினர்.

Avoid below list which are bad to health


Sugar
Maida
Drinks - Pepsi. Cok, Sprite, 7up, Fanta, Miranda, ThumsUp
Maggie Noodles
Broiler Chicken
Fast Food - Noodles, Makrooni, Fried Rice
Junk Food - Burger, Pizza, French Fry, Chicken Fry, KFC, McDonald's, Pizza Hut
Cauliflower, Grapes Wash many times with Turmeric and salt mixed warm water
Avoid Polish Twinkle Apples
Long Bangalore Banana

....:: 57 . الحديد Al-Hadid ::....


ARABIC | Translation By :Simplified Uthmani
مَآ أَصَابَ مِن مُّصِيبَةٍ فِى ٱلْأَرْضِ وَلَا فِىٓ أَنفُسِكُمْ إِلَّا فِى كِتَٰبٍ مِّن قَبْلِ أَن نَّبْرَأَهَآ ۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌ
Ma asaba min museebatin fee alardi wala fee anfusikum illa fee kitabin min qabli an nabraaha inna thalika AAala Allahi yaseerun
[57:22]

TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)
[57:22]    (பொதுவாக) பூமியிலோ அல்லது (சொந்தமாக) உங்களுக்கோ ஏற்படக்கூடிய எந்தக் கஷ்டமும், (நஷ்டமும்) அது ஏற்படுவதற்கு முன்னதாகவே (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே!

MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur
[57:22]     ഭൂമിയിലോ നിങ്ങളുടെ ദേഹങ്ങളില്‍ തന്നെയോ യാതൊരു ആപത്തും ബാധിക്കുകയുണ്ടായിട്ടില്ല; അതിനെ നാം ഉണ്ടാക്കുന്നതിന് മുമ്പ് തന്നെ ഒരു രേഖയില്‍ ഉള്‍പെട്ടുകഴിഞ്ഞതായിട്ടല്ലാതെ. തീര്‍ച്ചയായും അത് അല്ലാഹുവെ സംബന്ധിച്ചേടത്തോളം എളുപ്പമുള്ളതാകുന്നു.
ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan
[57:22]     No calamity befalls on the earth or in yourselves but is inscribed in the Book of Decrees (Al-Lauh Al-Mahfuz), before We bring it into existence. Verily, that is easy for Allah.
HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur Rahman Nadwi
[57:22]     जो मुसीबतें भी धरती में आती है और तुम्हारे अपने ऊपर, वह अनिवार्यतः एक किताब में अंकित है, इससे पहले कि हम उसे अस्तित्व में लाएँ - निश्चय ही यह अल्लाह के लिए आसान है -
URDU | Translation By :Dr. Col Muhammad Ayub
     [57:22]جو کوئی مصیبت زمین پر یاخودتم پر پڑتی ہے وہ اس سے پیشتر کہ ہم اسے پیدا کریں کتاب میں لکھی ہوتی ہے بے شک یہ الله کے نزدیک آسان بات ہے

ஆன்ட்டிபயாட்டிக்குகளை செயலிழக்கச் செய்யும் சிக்கன்…

பலருக்கும் பிடித்தமான அசைவ உணவு பிராய்லர் சிக்கன். அது தீவனத்துக்குப் பதிலாக ஆன்ட்டிபயாட்டிக் ஊசி போட்டு வளர்க்கப்படுகிறது.

இந்த சிக்கனை சாப்பிடுவதால் காய்ச்சலுக்கும் மற்ற பிரச்சினைகளுக்கும் நாம் சாப்பிடும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் செயலிழந்து போகலாம் என்பதை அறிவியல், சுற்றுச்சூழல் மையம் நடத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு செல்லும் சாலை வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. இந்த வழியில் வரும் பங்கனப்பள்ளி, 1700-கள் வரை வைரச் சுரங்கங்களுக்குப் புகழ்பெற்ற இடமாக இருந்தது. இங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரங்கள் நிஜாம் ஆண்ட ஹைதராபாத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டன.

1800-களின் இறுதிவரை இங்கே வைரங்கள் வெட்டப்பட்டன. அதேபோலப் பங்கனப்பள்ளி மாம்பழங்களும் கனிகளில் உயர்ந்த இடத்தைப் பெற்றன.

ஆனால், சமீபகாலமாக வியாபாரிகளின் பேராசையால் பங்கனப்பள்ளி மாம்பழங்களின் புகழுக்குப் பங்கம் ஏற்பட்டது. வேகமாகப் பழுக்க வைப்பதற்காகக் கால்சியம் கார்பைடைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்த கால்சியம் கார்பைடு, பழங்களைச் செயற்கையாகப் பழுக்கவைக்கும் வாயுவான எத்திலீனை வெளியிடும்.

இந்த கால்சியம் கார்பைடு, மனித ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிப்பது. ஒருவழியாக அரசாங்கம் விழித்துக்கொண்டு கார்பைடு உபயோகம் குறித்து வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

என்ன வகைப் புரட்சி?

இப்போதெல்லாம், ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்கு வரும் வழியில் வரிசைகட்டி நிற்கும் கோழிப் பண்ணைகளைப் பார்க்கமுடியும். இவை கிராம மக்கள் நடத்தும் கோழிப் பண்ணைகள் அல்ல. பெரிய தொழில் நிறுவனங்களால் நடத்தப்படும் சிக்கன் தொழிற்சாலைகள் இவை. இதைப் போன்ற பண்ணைகளின் வாயிலாகத்தான் கோழி, முட்டைப் புரட்சி இந்தியாவில் ஏற்பட்டது.

பசுமை, வெண்மைப் புரட்சிக்குச் சமமான மாற்றம் இது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் அளிக்கப்படும் சத்துணவுத் திட்டத்தில் முட்டையை அறிமுகப்படுத்தியது, உணவுடன் ஊட்டச்சத்தை வழங்குவதற்கான பாராட்டத்தக்க யோசனை.

ஆனால், அதில் ஒரு ஆபத்தும் உள்ளது. மாம்பழத்தைப் பழுக்கவைக்க கார்பைடைப் பயன்படுத்துவதைப் போல, பாலை அதிகம் சுரக்கவைக்க ஆக்சிடோசின் ஹார்மோனை மாடுகளுக்குச் செலுத்துவதைப் போல, வர்த்தகரீதியாக உற்பத்தி செய்யப்படும் கோழிகளிலும் ஆரோக்கியக் குறைபாடுகள் நிறைய உள்ளன.

அதிர்ச்சி முடிவுகள்

கோழிகள் வேகமாக வளர்வதற்காகவும், முட்டை பொரிக்கும்போது தொற்று நோய்களைத் தடுப்பதற்காகவும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் அவற்றின் உடலில் செலுத்தப்படுகின்றன. பிரபலமான சிக்கன் கம்பெனிகளான வெங்கிஸ், வெட்லைன் இந்தியா, ஸ்கைலாக் ஹேட்சரிஸ் ஆகியவை கோழிகளுக்குக் குறைந்த உணவைத் தந்து அதிக வளர்ச்சியைப் பெறுவதற்காக ஆன்ட்டிபயாட்டிக்குகளைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றன.

சுற்றுச்சூழல் அறிவியல் இதழான டவுன் டு எர்த், இந்தியாவின் வெவ்வேறு சந்தைகளில் விற்கப்படும் கோழி இறைச்சியைத் தனது பரிசோதனைக் கூடத்தில் பரிசோதித்து வெளியிட்டிருக்கும் முடிவுகள் அதிர்ச்சி தருபவை. கோழி ஈரல், தசைகள், சிறுநீரகங்களில் டெட்ராசைக்ளின் (டாக்சிசைக்ளின் போன்றவை), புளூரோகுயினலோன்ஸ், அமினோகிளைகோசைட்ஸ் ஆகியவை படிந்திருக்கின்றன.

ஏன் ஆபத்து?

இந்த மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்வதால் எந்த மருந்தாலும் எதிர்க்க முடியாத பாக்டீரியாக்கள் உருவாகும். இந்த பாக்டீரியாக்கள் உள்ள கோழிகளைச் சாப்பிடும் மனிதர்களுக்கும் இவை நேரடியாகக் கடத்தப்படும். வளர்சிதை மாற்றம் அடையாத பாக்டீரியாக்கள் இறைச்சியில் இருந்தால், வயிற்றில் உள்ள நுண்ணுயிர்களைத் தாக்கும். கோழிப் பண்ணைகளில் பயன்படுத்தப்படும் ஆன்ட்டிபயாடிக்குகள், மனிதப் பயன்பாட்டுக்கான வீரியத்தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பயன்படுத்தப்படாத பாகங்கள்

நாம் வாங்கும் கோழியில் பயன்படுத்தாமல் தூக்கி எறியும் பாகங்கள் என்ன ஆகின்றன? மேலே சொன்ன ஆபத்தான பாக்டீரியாக்கள் அவற்றின் சிறகுகள், எலும்புகளில் இருக்கும். அவை மண், நிலத்தடி நீர், நீர்நிலைகளில் கலக்கும். இதன்மூலம் இந்த பாக்டீரி யாக்கள் சுற்றுச்சூழல் முழுவதும் பரவும் ஆபத்து உருவாகிறது.

பரிந்துரைகள்

கோழிப் பண்ணைத் தொழிலில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்படுத்துவதைத் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்காக டவுன் டு எர்த் இதழில் டாக்டர் சந்திர பூஷன் சில பரிந்துரைகளைத் தந்துள்ளார்.

1. கோழிகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஆன்ட்டிபயாடிக்குகளைத் தடை செய்ய வேண்டும்.

2. கோழித் தீவனத்தில் ஆன்ட்டிபயாட்டிக்குகள் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கக் கூடாது. தொழிற் பாதுகாப்பு கழகத்தின் (பி.எஸ்.ஐ.) ஒழுங்கு விதிகளைக் கடுமையாக்க வேண்டும்.

3. மனிதப் பயன்பாட்டுக்கான ஆன்ட்டிபயாடிக்குகளைக் கோழிகளுக்குப் பயன்படுத்து வதைத் தடுக்க வேண்டும்.

4. ஆன்ட்டிபயாடிக்குகளைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை விலங்கு மருத்துவர் களுக்கு அளிக்க வேண்டும்.

5. கோழிப் பண்ணைகளி லிருந்து சுற்றுச்சூழலுக்குக் கடத்தப்படும் பாக்டீரியாக்கள், ஆன்ட்டிபயாடிக்குகளால் ஏற்படும் மாசுபாட்டின் அடிப்படையில், மாசுபாட்டு அளவீடுகளை மாற்றி அமைக்க வேண்டும்.

6. ஆன்ட்டிபயாடிக்குகளுக்கு மாற்றாகக் கோழிகளின் வளர்ச்சிக்கு உதவும் மூலிகை ஊட்டப்பொருட்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்.

7. மனிதர்கள், விலங்குகள், உணவு சங்கிலித் தொடரில் ஆன்ட்டிபயாடிக்குகளை எதிர்க்கும் மண்டலங்கள் உருவாகியுள்ளனவா என்பதைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த கண்காணிப்பு முறையை உருவாக்க வேண்டும்.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை அரசு விரைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில், நுண்ணுயிர்கள் வேகமாகத் திடீர் மாற்றத்துக்கு உள்ளாகக் கூடியவை. ஒரு நிமிட நேரத்தில் பல தலைமுறை வளர்ச்சியை எட்டிவிடக்கூடியவை இந்த பாக்டீரியாக்கள். அதனால் புதிய புதிய எதிர்ப்புத்தன்மை கொண்ட பாக்டீரியாக்கள் வளர்ந்து பெரும் பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்பு அதிகம்.

அச்சுறுத்தும் கோழிகள்

# இந்தியாவில் பிறந்து ஒரு மாதத்துக்குள் இரண்டு லட்சம் குழந்தைகள் இறந்து போகின்றன. இதில் மூன்றில் ஒரு குழந்தை ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்தியால் (Antibiotic Resistance) இறக்கிறது.

# காசநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களில் 15 சதவீதம் பேருக்கு ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்தி இருக்கிறது.

# இந்த ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்திக்கு நாம் சாப்பிடும் பிராய்லர் கோழிகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று டெல்லி சி.எஸ்.இ. அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

# பிராய்லர் கோழிகளுக்கு ஆண்டிபயாட்டிக் கொடுப்பதன் மூலம் குறைந்த செலவில் அவை வேகமாகவும் கொழுகொழுவென்றும் வளர்கின்றன.

# ஆண்டிபயாட்டிக் கொடுக்கப்பட்ட கோழியைச் சாப்பிடுவதன் மூலம், நம் உடலிலும் ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்தி ஏற்படலாம். அந்த நிலையில் நமக்கு நோய் வந்து ஆண்டிபயாட்டிக் மருந்து உட்கொண்டால், உடல் குணாமாகாமல் போக நேரிடலாம்.

# ஏனென்றால், கோழியைச் சமைத்து சாப்பிட்டாலும்கூட, அதிலிருக்கும் ஆண்டிபயாட்டிக் முற்றிலும் அழிவதில்லை.

# அத்துடன், கோழியின் உடலில் இருக்கும் ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்தி பெற்ற பாக்டீரியா நமது உடலுக்குப் பரவக்கூடும்.

தஞ்சையில் பயங்கரம் - வாய் பேச முடியாத இளம் பெண் 4 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல்களால் கற்பழிப்பு !!!

தஞ்சாவூரில் வாய் பேச முடியாத
முஸ்லிம்
பெண்ணை நான்கு அயோக்கியர்கள்
கற்பழித்து கொடூரமான முறையில்
தாக்கியுள்ளார்கள். இந்த சம்பவம்
தஞ்சை பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர்
அப்துல் அஜீத், இவருடைய மகள் பானு (32)
மாற்றுத்திறனாளி (வாய்பேச
முடியாதவர், மிகவும் ஏழை குடும்பம்)
இவரை நேற்றுமுன்தினம் 4 பேர்
கொண்ட
காமவெறியர்கள் காரில் கடத்திச்
சென்று ஒரத்தநாடு பகுதியில்
வைத்து பலாத்காரம்
செய்துள்ளனர்.
மேலும் அந்த
பெண்ணை சரமாரியாகத்
தாக்கியுள்ளனர். இதில் பானுவின்
உடல்நிலை மிகவும்
மோசமடைந்து மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாற்றுதிரனாளி கற்பழிக்கப்பட்ட
சம்பவம் அப்பகுதியில் பரவியதால்
பொதுமக்கள்
நூற்றுக்கணக்கானோர்
திரண்டு தஞ்சை கீழவாசல்
சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அங்கு வந்த
காவல்துறையினர் உரிய
நடவடிக்கை எடுப்பதாகஉறவினர்களிடம்
உறுதி கூறியதைத்
தொடர்ந்து மறியல்
போராட்டத்தை கை விட்டனர்.
மேலும் இச்சம்பவத்தில் உரிய
நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம்
பானுவின் உறவினர்கள் புகார்
மனுவும் அளித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும்
பரபரப்பு ஏற்பட்டது.

Saturday 13 September 2014

JOB

பஹரினில் ஹமாத் டவுன்  பார்மஸி நிறுவனம் ஒன்றிற்கு 4 பார்மஸிஸ்டுகள் தேவை

தகுதி
4 முதல் 5 வருட முன் அனுபவம், பி பார்ம் அல்லது எம் பார்ம் டிகிரி ஹோல்டர் மாத்திரம்(திருமணமாவர்கள்(கணவன் மனைவி) இருவருமே பார்மஸி டிகிரி ஹோல்டர் என்றால் இருவரின் விபரம் மற்றும் திருமணச்சான்றிதழுடன் இணைத்து அனுப்பவும்,


தகுதியானவர்கள் தொடர்புகொள்ளவேண்டிய எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

8939344192 (saravana.R) Chennai
Mail-id
rajesaravana@yahoo.com
 

Saturday 6 September 2014

Job

URGENTS REQUIREMENTS FOR AL- QAMRA HOLDING GROUP QATARClient Interview Tomorrow On 4th Sep 2014 In Delhi. All Candidates Should Carry All Original Documents With One Set Of Photocopy At The Time Of Interview The Profile Should Match Exactly.The Candidates Should Have Related Degree From The Government Recognized University Or Institute.Experience Should Not Be Less Than 3 Years With The Strong Related Knowledge.Candidates Will Submit Their Documents In The Office For Processing.PLEASE DO NOT SEND SOFT COPIES & COME ON INTERVIEW WITH HARD COPIES 
Job Description-1- Accountants: Need Cvs Of Those Candidates Who Have Worked In Any Reputed Company As An Accountant Knowing New Account Package Software Like Erp/ Sap Not The Tally Only.B.Com From Reputed English Medium Must Speak English Fluently .
Salary -4000- 5000/- Qr2- Hr Manager: Generalist Profile Candidates Like Hr Policy Maker, Performance Appraisal, Training & Development , Manpower Planning, Grievances Handling, Leave Management, Calculation Of All Compensation , Knows To Use Hr Software Etc. Who Is Working In A Company As Hr Executive/ Hr Officer / Hr Manager Rather Than Only Recruitment.
Salary – 4000-5000/-Qr3- Mechanical Engineer: Candidates Should Have The Hvac/ Fire Fighting And Construction Experienced.
Salary – 4000-5000/-Qr4- Facility Operation Manager:Candidates Should Be Of Electrical Background With Strong Management Experience. Candidates With The Logistic Experience Should Also Be Considered.Should Have Experience As Facility Or Operation Manager.Salary – 6000-8000/-Qr
5- Housekeeping Supervisor:Candidates Must Have Strong Experience In Housekeeping Where Managed The Cleaning Process And Related Chemical Knowledge. The Gulf Experience Of Hotels Or Hospitals Can Also Be Considered.The Knowledge Regarding Hygiene May Be Preferred. 
 Salary – 2500/-Qr
 
6- Heavy Driver Gcc
Should Have Valid Gcc Driving License
Salary 2000-2500/- Qr
 
7- Ac Technician –
Salary - 1800-2000/-Qr
 
8- Electrician  -
Salary - 1800-2000/-Qr
 
9- Plumber
Salary - 1800-2000/-Qr
 
10- Fire Alarm Technician
Salary - 1800-2000/-Qr
 
11- Light Driver Gcc 
Salary - 2000-2500/-Qr

With Best Regards, 
G.N.FAROOQUI 

MAXWAY TRADE LINKS
Contact no:00-91-9311004484,9312004484, 9211161312
General Email : infomaxway@gmail.com');" style="color:rgb(17,85,204);" class target=>infomaxway2014@gmail.com
Email for Job Seekers: imaxway1@gmail.com');" style="color:rgb(17,85,204);" class target=>imaxway1@gmail.com,
Skype ID: Imaxway I Facebook I Linkedin I
Add: 28, Khizrabad, Opp. Vidya Bhawan School(Near ADCO Site Center) 
New Friends Colony, New Delhi-25

Thursday 4 September 2014

விநாயகர் ஊர்வலத்தில் பாஜகவினர் வன்முறை

விநாயகர் ஊர்வலத்தில் பாஜகவினர்
வன்முறை வெறியாட்டம் : முஸ்லிம்களின்
கடைகள் வீடுகள் சூறை - முத்துப்பேட்டையில்
பதற்றம்....!!

...:: 67 . الملك Al-Mulk ::....


ARABIC | Translation By :Simplified Uthmani
هُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ ذَلُولًا فَٱمْشُوا۟ فِى مَنَاكِبِهَا وَكُلُوا۟ مِن رِّزْقِهِۦ ۖ وَإِلَيْهِ ٱلنُّشُورُ
Huwa allathee jaAAala lakumu alarda thaloolan faimshoo fee manakibiha wakuloo min rizqihi wailayhi alnnushooru
[67:15]

TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)
[67:15]  அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது. 
MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur
[67:15]     അവനാകുന്നു നിങ്ങള്‍ക്ക് വേണ്ടി ഭൂമിയെ വിധേയമാക്കി തന്നവന്‍. അതിനാല്‍ അതിന്‍റെ ചുമലുകളിലൂടെ നിങ്ങള്‍ നടക്കുകയും അവന്‍റെ ഉപജീവനത്തില്‍ നിന്ന് ഭക്ഷിക്കുകയും ചെയ്തു കൊള്ളുക. അവങ്കലേക്ക് തന്നെയാണ് ഉയിര്‍ത്തെഴുന്നേല്‍പ്‌.
ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan
[67:15]     He it is, Who has made the earth subservient to you (i.e. easy for you to walk, to live and to do agriculture on it, etc.), so walk in the path thereof and eat of His provision, and to Him will be the Resurrection.
HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur Rahman Nadwi
[67:15]     वही तो है जिसने तुम्हारे लिए धरती को वशीभूत किया। अतः तुम उसके (धरती के) कन्धों पर चलो और उसकी रोज़ी में से खाओ, उसी की ओर दोबारा उठकर (जीवित होकर) जाना है
URDU | Translation By :Dr. Col Muhammad Ayub
     [67:15]وہی تو ہے جس نے تمہارے لیے زمین کو نرم کر دیا سو تم اس کے راستوں میں چلو پھر اور الله کے رزق میں سے کھاؤ اور اسی کے پاس پھر کر جانا ہے

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR