ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Thursday 11 December 2014

திசை மாறும் தூண்கள்...!

                                     திசை மாறும் தூண்கள்...!
                                                                                   சகோதரி. ஆயிஷா பேகம்                                                                        
ஆரம்பத்தில்..! இப்படி எல்லாம் கூட நாட்டில் நடக்குமா..! நடக்குதா..? என கேட்ட செய்திகள் எல்லாம்இப்போது மிக சர்வ சாதரணமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது! நாமும் ஒவ்வொன்றையும் கேள்விப்படும் போது இது என்ன புதுசா நடக்குதா என்ன..? என்று மனதை சமாதானப் படுத்த பழகி விட்டோம்.
நம் மனம் எல்லா அக்கிரமங்களையும் தாங்கி கொள்ளும் சக்தி படைத்ததாகி விட்டது. தினசரி புதிது புதிதாக குற்றங்களை பார்ப்பதும் கேள்விபடுவதுமே அதற்கு காரணம், அதிகளவு குற்றம் நடத்துபவர்களில் பின்னணியை பார்த்தால் பெற்றோர்கள் நன்கு படித்தவர்களாகவும், நல்ல செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது சற்று அதிர்ச்சியான ஒன்றாக உள்ளது.
முன்பு உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் நடந்த சம்பவங்கள் எல்லாம் இப்போது தன் கோர கைகளை விரித்துக் கொண்டே வந்து நம் ஊரின் மையத்தில் வந்து நிற்கிறது.! அது நம் வீட்டு கதவை தட்டுவதற்கு முன் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது.
சரி, இது போல நடக்க என்ன காரணம்? யார் காரணம்? என பார்த்தால் குற்றம் சுமக்க வேண்டியவர்களில் முதல் குற்றவாளி பெற்றோர்களாகத் தான் இருக்கிறார்கள்! ஒரு பிள்ளையை நல்ல முறையில் வளர்த்து எடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தாய் தான்! தந்தை என்பவர் பொருளாதார தேவைக்காக பெருமளவு நேரம் வெளியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
சிறு வயதில் இருந்தே தாய், தந்தையின் பாசத்திற்கு ஏங்கும் பிள்ளை அந்த பாசம் கிடைக்காத போதுஒரு கட்டத்தில் தனக்கென ஒரு உலகத்தை நிர்ணயபடுத்திக் கொண்டு அந்த உலகத்தில் உலா வரத்தொடங்குகிறது!அதில் இப்போது தாய்க்கும், தந்தைக்கும் அவ்வளவு முக்கியத்துவம் இல்லை! இவை எல்லாமே வெளியில் தெரியாத அவர்களின் பால் உள்ளே நடக்கும் உளவியல் மாற்றங்கள்! ]
திசை மாறும் தூண்கள்...!
நம் வாழ்க்கையில் நமக்கு கிடைத்த மிக பெரிய வரம் இளமை பருவம். ஆண், பெண் என இரு தரப்பினருக்குமே எவ்வளவு ஒரு அழகான, ஆக்கபூர்வமான பருவம். ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு இளைஞர்களின் ஆற்றலும் அறிவும், துணிவும், துடிப்பும் அவர்களின் எழுச்சியும்மிக பெரும் சக்தி என்றால் அது மிகையில்லை. ஒரு சமுதாயத்தில் எந்த ஒரு சமூக மாற்றமும் இளைஞர்களின் பங்களிப்பு இல்லாமல் நடை பெற்றதில்லை. தன் வயதின் முழுசக்தியையும் திறமையையும் வெளிப்படுத்தும் பருவம் இளமை பருவம்!
ஆனால் தன் சக்தியை, தன் தேவையை, தன் பொறுப்பை, சரியாக இளைஞர்கள் உணர்ந்திருக்கின்றார்களா என்றால் பெருமளவு இல்லை என தான் தோன்றுகிறது. இப்போது சமூகத்தில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணம் இளைஞர்களாக தான் இருக்கிறார்கள். தன் தவறான நடவடிக்கையின் காரணத்தால் குற்றங்களை செய்து விட்டு தன் வாழ்வின் முக்கியமான பெரும்பகுதியை சிறை வாழ்க்கையில் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்!
நாம் அனைவருமே சமீபத்தில் நடந்த இரு நிகழ்வுகளை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. தான் கற்பிக்கும் பள்ளியில் தன் மாணவனால் ஒரு ஆசிரியை பள்ளி வளாகத்தில் கொல்லப் பட்டதும், ஒரு பெண் நம்பிக்கையோடு நண்பனாக பழகியவர்களாலே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் ஆன இரு நிகழ்வுகள் தான் அவை.! சமூகத்தில் மீது அக்கறையும், பொறுப்பும் கொண்ட ஒவ்வொருவரையும் அதிர்ச்சியும், கவலையும் கொள்ள வைத்த சம்பவங்கள் இவைஎன்றே சொல்லலாம்.
இவை மட்டும் அல்லாது பள்ளிப் பருவ காதல், பள்ளிப் பருவ கர்ப்பம்,பள்ளிப் பருவ குடிப்பழக்கம், வகுப்பிலேயே சக தோழியை மோசமாக படம் எடுத்து அனைவருக்கும் அனுப்பி வைப்பது, தன் ஆசிரியையை படம் எடுத்து இணையத்தில் தவறான முறையில் பதிவு செய்வது, பெற்ற மகனே தன் சொந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆள் அனுப்பி திருட வைத்தது, தங்கையாக நினைக்கக் கூடிய நண்பனின் மனைவியை அழைத்துக் கொண்டு ஓடுவது என்று இப்படி இன்னும் நிறைய விசயங்கள்.
ஆரம்பத்தில்... இப்படி எல்லாம் கூட நாட்டில் நடக்குமா! நடக்குதா..? என கேட்ட செய்திகள் எல்லாம் இப்போது மிக சர்வ சாதரணமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நாமும் ஒவ்வொன்றையும் கேள்விப்படும் போது இது என்ன புதுசா நடக்குதா என்ன..? என்று மனதை சமாதானப் படுத்த பழகி விட்டோம்! நம் மனம் எல்லா அக்கிரமங்களையும் தாங்கி கொள்ளும் சக்தி படைத்ததாகி விட்டது. தினசரி புதிது புதிதாக குற்றங்களை பார்ப்பதும் கேள்விபடுவதுமே அதற்கு காரணம்..! அதிகளவு குற்றம் நடத்துபவர்களில் பின்னணியை பார்த்தால் பெற்றோர்கள் நன்கு படித்தவர்களாகவும்,நல்ல செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது சற்று அதிர்ச்சியான ஒன்றாக உள்ளது.
முன்பு உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் நடந்த சம்பவங்கள் எல்லாம் இப்போது தன் கோர கைகளை விரித்துக் கொண்டே வந்து நம் ஊரின் மையத்தில் வந்து நிற்கிறது. அது நம் வீட்டு கதவை தட்டுவதற்கு முன் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது..! சரி, இது போல நடக்க என்ன காரணம்? யார் காரணம்? என பார்த்தால் குற்றம் சுமக்க வேண்டியவர்களில் முதல் குற்றவாளி பெற்றோர்களாகத் தான் இருக்கிறார்கள்! ஒரு பிள்ளையை நல்ல முறையில் வளர்த்து எடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தாய் தான்! தந்தை என்பவர்பொருளாதார தேவைக்காக பெருமளவு நேரம் வெளியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்
இப்போது அநேக வீடுகளில் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் தான்! இரண்டு என்பது கூட இப்போது குறைந்து ஒன்று என்பது தான் அதிகளவில் இருக்கிறது! காரணம் வேலைக்குப் போவதால் கவனிக்க ஆள் இல்லை என்பது! பிள்ளையை யார் பார்த்துக் கொள்வது..? வீட்டில் சரியான வழிகாட்டுதலோடுபெரியவர்கள் இருந்தால் சரி, இல்லை என்றால் என்ன செய்வது..? வேறு வழி அதற்கென்றே இருக்கும் ஹோம்களே கதி! சிறு வயதில் இருந்தே தாய், தந்தையின் பாசத்திற்கு ஏங்கும் பிள்ளை அந்த பாசம் கிடைக்காத போது ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு உலகத்தை நிர்ணயபடுத்திக் கொண்டு அந்த உலகத்தில் உலா வரத்தொடங்குகிறது!அதில் இப்போது தாய்க்கும், தந்தைக்கும் அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. இவை எல்லாமே வெளியில் தெரியாத அவர்களின் பால் உள்ளே நடக்கும் உளவியல் மாற்றங்கள்!
பணம் இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம் என்ற மனநிலை இப்போது அதிகளவு காணப்படுகிறது! உலகத்திலேயே தன் மகன் தான் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும்! அனைவரும் பெருமையாக சொல்ல வேண்டும் என்பதற்காக பணத்தை எல்லா இடத்திலும் வாரி இறைக்கும் பெற்றோர் அதிகம்! நல்ல வசதியையும்,நல்ல படிப்பையும் கொடுக்க நினைக்கும் பெற்றோர் மறந்தது தன் மகனை சமுதாயத்திற்கு ஏற்ற நல்ல மனிதனாக வளர்க்க வேண்டும் என்பதை!
பிள்ளைகள் கேட்கும் எல்லா நவீன பொருள்களையும் வாங்கி கொடுக்கும் பெற்றோர் அவர்கள் அதை நல்ல முறையில் பயன் படுத்துகிறார்களா என கவனிக்காமல் விடுவது தான் அவர்கள் செய்யும் தவறு. பருவ வயதில் அது ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டும் இருவருக்கும் உடலில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்கள் குறித்தான சரியான வழிகாட்டுதல் தேவை..! கண்டிப்பா இப்போது தான் அவர்களின் மீது கூடுதல் அக்கறையும் கவனமும் தேவை.
ஆனால் பெற்றோருக்கு அவர்களோடு மனம் விட்டு பேச நேரம் இருப்பதில்லை. பெரும்பாலான பெற்றோருக்கு நம் பிள்ளையின் நண்பர்கள் யார் எனத் தெரியாது. அவர்கள் எப்படிப் பட்ட நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியாது. பிள்ளைகளும் இப்போது பெற்றோரை எதிர்பார்பதில்லை. அவர்களுக்கு இப்போது தேவை பணமும் அவர்கள் விரும்பும் நண்பர்களும் தான். இந்த மாதிரி வளர்ந்த பிள்ளைகளின் பார்வையில் பெற்றோர்கள் என்பவர்கள் தன் தேவைக்காக பணம் கொடுப்பவர்கள் மட்டும் தான்!
குற்றங்களின் காரண கர்த்தாவில் இப்போது இணையமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையில்லை! இணையத்தில் அதற்கென்று தனியாகத் தேடித் போக வேண்டாம் நாம் வேறு ஒன்றைத் தேடி எழுத்தை தட்டினாலே வன்முறை குறித்தான விசயங்களும் ஆபாச படங்களும், ஆபாச பதிவுகளும் வந்து கொட்டுகிறது. இதில் தனிமை என்பது நல்ல தெளிவாய் இருக்கும் மனிதர்களையே சற்று நிலை தடுமாறச் செய்யும் விஷயம்! இதில் எளிதில் உணர்ச்சி வசப்படும் டீன் ஏஜ்ஜில் இருக்கும் பிள்ளைகள் தனிமையில் இதைப் பார்த்தால் என்ன ஆகும்...?
இயல்பாகவே எதிர்பாலினர் குறித்தான தேடுதலும், சிந்தனையும், அதிகம் இருக்கும் பருவம் இது! சரியான வழிகாட்டுதலோடும், தன்னம்பிக்கையோடும் வளர்க்கப் படும் பிள்ளைகளுக்கு இது ஒரு பொருட்டாக இருப்பதில்லை. அவர்களுக்குத் தெரியும் நம் இலக்கு எது என்றும், எதை நோக்கி நாம் போக வேண்டும் என்பதும்! இந்த மாதிரி விசயங்களில் மாட்டிக் கொண்டால் நம் எதிர்காலம் பாழாகி விடும் என்பதால், அவர்கள் தன் நட்பு வட்டத்தையும் கவனமாக தேர்தெடுத்துக் கொள்கிறார்கள். பொதுவாக நட்பு வட்டம் என்பது எப்போதும் நமது சரி தவறுகளை திருத்தி அதை உரிமையாக எடுத்துச் சொல்லக் கூடியதாக இருக்க வேண்டும். தெளிவான மன நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு இயல்பாக தன் வயதிர்க்குண்டான மனத் தடுமாற்றங்களை மிக எளிதாக கடந்து விட முடிகிறது.
ஆனால் சிறு வயதில் இருந்தே சரியான வழிகாட்டுதலோடு வளராத பிள்ளைகளின் மனம் அதை நோக்கியே போகும். தப்பைத் தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் தனிமையில் தன் இஷ்டத்திற்கு வளரும் பிள்ளைகளுக்கு, தப்பான விசயங்களை ஆரம்பத்தில் பார்க்கும் போது இருக்கும் கொஞ்ச நஞ்ச குற்ற உணர்ச்சியும் ஒரு கட்டத்தில் போய் விடுகிறது. எது சரி எது தவறு என்பதைத் தாண்டி தன் ஆசைகளையும் தேவைகளையும் எவ் விதத்திலும் நிறைவேற்ற கொள்ள துணிந்து விடுகிறார்கள் என்பதே உண்மை...! இது தான் மன வக்கிரத்தின் வெளி தெரியாத உச்சக்கட்டம்! இவை தான் இந்த மாதிரி குற்றங்கள் நடப்பதற்கு முக்கிய காரணம்.
சரி வேலைக்கு எல்லாருமா போறாங்க வீட்டில் அம்மா இருக்கும் பிள்ளைகளும் தானே தப்பு பண்ணுது என்று கேட்டால்...? உண்மை தான்.மறுக்க முடியாது. ஆனால் கூர்ந்து கவனித்தால் அந்தப் பிள்ளை அதிக செல்லத்தால் தன் அறியாமை அம்மாவால் தன் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கிறது. தன் தந்தையின் அருகாமை இல்லாமல் இருக்கிறது.
இதற்கான தீர்வாக சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு ஊட்டப்படும் அழுத்தமான இறைநம்பிக்கை தான் சரியான ஒன்றாக இருக்கும். சிறு வயதாக இருக்கும் போதே அவர்களுக்கு மார்க்க சம்பந்தமான விசயங்களை கதை சொல்வது போல சொல்லி, நன்மை செய்தால் என்ன கிடைக்கும் என்பதையும், அடுத்தவர்களுக்கு தீமை செய்தால் என்ன கிடைக்கும் என்பதையும், இந்த உலகத்தில் நேர்மையாகவும் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் நடக்க வேண்டியதன் அவசியத்தையும் தெளிவாக புகட்டி விட வேண்டும்.
சக மனிதர்களுக்கு நாம் செய்யும் நம்பிக்கை துரோகம், மோசடி, பொய் பித்தலாட்டம், ஏமாற்றுதல் போன் இன்ன பிற தவறான செயல்களை இறைவன் விரும்புவதில்லை என்பதையும் அவன் அது குறித்து கடுமையாக கோவப்படுவான் என்பதும் அவர்களின் மனதில் அழுத்தம் திருத்தமாக சிறு வயதில் இருந்தே பதிவு செய்ய பட வேண்டும்.
நாம் அனைவருமே பொறுப்பாளிகள் ஆவோம். நாம் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பை பற்றி மறுமையில் விசாரிக்கப் படுவோம். அதற்கு சரியான காரணம் சொல்லப்பட வேண்டும். அதில் இருந்து ஒருவரும் தப்ப முடியாது. சரியான முறையில் வளர்க்க படாத பிள்ளைகள் நாளை நமக்கு மிக பெரிய துன்பத்தை தர தயாராக இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு' என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்" (அல்-குர்ஆன் 8:28)
சகோதரி. ஆயிஷா பேகம்.

ஆக்ராவில் 57 முஸ்லிம் குடும்பங்கள் இந்து மதத்தினருக்கு மாறினார்களா?


சங்பரிவார் அமைப்பினரின்
பித்தலாட்டம் அம்பலம்
ஆக்ராவில் 57 முஸ்லிம்
குடும்பத்தினர்
இந்து மதத்தை தழுவினர்
என்று நேற்று பரபரப்பாக தேசிய
ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
தர்ம ஜாக்ரான் மஞ்ச் மற்றும் பஜ்ரங் தளம்
ஆகிய சங் அமைப்புகள் நடத்திய
நிகழ்வில் இந்த முஸ்லிம்
குடும்பத்தினர் இந;து மதத்தைத்
தாமே முன்வந்து இந்து மதத்தைத்
தழுவியதாக இந்த செய்திகள்
வெளியாகின.
இந்த செய்தி தவறானது என்றும்
தாங்கள்
முஸ்லிம்களாகவே வாழ்வதாக இந்த 57
குடும்பத்தினரும் அளித்துள்ள
பேட்டி இந்துஸ்தான் டைம்ஸ் டைம்ஸ்
ஆப் இந்திய முதலிய
செய்தித்தாள்களில்
இன்று செய்திகள்
வெளியியாகியுள்ளன. ரேசன்
அட்டை வாங்கி தருகிறோம் என்றும்
ஆதார் அட்டை வாங்கித் தருகிறோம்
என்று காவிகள் தங்களை அந்த
நிகழ்விற்கு அழைத்துச் சென்றதாக
அவர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள்
தொடர்ந்து முஸ்லிம்களாகவே இருப்பதாகவும்
கட்டாயப்படுத்தி தங்களை இந்த
நிகழ்விற்கு காவிகள் அழைத்துச்
சென்றதாக
குப்பை சேகரித்து வாழ்க்கை நடத்தும்
இந்த ஏழை முஸ்லிம்கள்
தெரிவித்துள்ளனர்.
பொய்மையை மூலதனமாக
கொண்டு செயல்படும்
சங்பரிவாரின்
இந்த பொய் பித்தலாட்டம்
ஆச்சரியப்படக்
கூடியது இல்லை. முஸ்லிம்களும்
கிறிஸ்த்தவர்களும் பண
ஆசை காட்டி மதமாற்றம்
செய்து வருகின்றனர்
என்று பேசி வரும் சங்பரிவாரின்
திருக்த்தாளம் ஆக்ராவில்
அம்பலமாகியுள்ளது.
ஏழை முஸ்லிம்களை ஏமாற்ற
அது எடுத்த
முயற்சி பிசுபிசுத்துள்ளது.

ஏழை' என்ற அட்டை தருவதாக கூறி கட்டாய மதமாற்றம் -ஹிந்துத்துவா வெறி செயல்

ஏழை' என்ற அட்டை தருவதாக கூறி மதமாற்றம்
செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு!
மாநிலங்களவையில்
இன்று இப்பிரச்னையை எழுப்பி பேசிய பகுஜன்
சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி,
ஆக்ராவில் உள்ள ஏழை முஸ்லிம்
மக்களை வலுக்கட்டாயமாக
இந்து மதத்துக்கு மாற்றும்
நடவடிக்கைகளை அங்குள்ள ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பின் கிளை அமைப்பான பஜ்ரங் தளம்
மேற்கொண்டு வருவதாக குற்றம்
சாட்டினார்.
"மதமாற்றம் செய்துகொள்ள
ஏழை மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்ற
னர். இதேபோல அலிகாரிலும்
கிறிஸ்தவர்களை இந்து மதத்துக்கு வலுக்கட்டாயமாக
மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டில் மிகப்
பெரிய மத மோதல்களும் கலவரங்கள்
ஏற்படும். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசுக்கு உள்ளது. இதற்குத் தக்க பதிலை பிரதமர்
அளிக்க வேண்டும்" என்று மேலும் கூறினார்.
இந்நிலையில் மாயாவதியின்
கருத்தை காங்கிரஸ், திரிணமூல்,
சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும் ஆதரித்து,
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று அவையில் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
இந்த விவகாரத்தில் தலையிட்டு, பிரதமர் பதில்
அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்
ஆனந்த் ஷர்மாவும் வலியுறுத்திய நிலையில்,
குறுக்கிட்டு பேசிய சிறுபான்மையின
விவகாரங்களுக்கான முக்தர் அபாஸ் நக்வி,
இந்த மதமாற்ற விவகாரத்தில்
ஆர்.எஸ்.எஸ்.-க்
கு தொடர்பு இருப்பதாக கூறப்படும்
குற்றச்சாட்டை மறுத்தார்.
"எனக்கு தெரியவந்துள்ள
தகவலின்படி இந்த
பிரச்னை தொடர்பாக முதல் தகவல்
அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில
அரசால் உரிய
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை மாநில
அரசு சம்பந்தப்பட்டது. மாநில அரசுதான்
அதனை பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதில் மத்திய அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை"
என்று அவர் மேலும் கூறினார்.
இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம்
ஆக்ரா மாவட்டத்தில் உள்ள 57 இஸ்லாமிய
குடும்பங்கள் இந்து மதத்திற்கு மாறியதாக
கடந்த திங்கட்கிழமையன்று ஆர்.எஸ்.எஸ்.
தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால்
தங்களுக்கு வறுமை கோட்டிற்கு கீழ்
வாழுபவர்களுக்கான பிபிஎல் ( BPL ) ( ஏழை)
அட்டை தருவதாக கூறி பஜ்ரங்
தளத்தை சேர்ந்தவர்கள் அழைத்துச்
சென்றதாகவும், கட்டாயப்படுத்தப் பட்டு தாங்கள் மதமாற்றம்
செய்யப்பட்டதாகவும் 57 இஸ்லாமிய
குடும்பங்களை சேர்ந்தவர்கள்
தெரிவித்துள்ளனர்.

Wednesday 10 December 2014

டிசம்பர் 6 மதுரை வெடிகுண்டு மிரட்டல் : இந்துத்துவா காவி தீவிரவாதி சரண்யா கைது....!!

மதுரை காவல்துறை ஆணையர்
அலுவலகத்துக்கு வெடிகுண்டு
மிரட்டல் விடுத்த இளம்பெண்
சரண்யாவை காவல்துறையினர்
கைது செய்துள்ளனர்.
கடந்த 6ம் தேதி பாபர்
மசூதி இடிப்பு தினத்தன்று,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அருகே உள்ள காவல்துறை ஆணையர்
அலுவலகத்திற்கு பெண் ஒருவர்
போன் செய்து இன்னும்
சற்று நேரத்தில் போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில்
வெடிகுண்டு வெடிக்கும் எனக்
கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இதையடுத்து,
வெடிகுண்டு நிபுணர்கள்,
மோப்பநாய் உதவியுடன் அலுவலகத்தில்
தீவிர சோதனை மேற்கொண்டனர்.
நீண்ட சோதனைக்கு பின்னர் வெறும்
புரளி என தெரியவந்தது.
இதுதொடர்பாக, போலீசார்
மேற்கொண்ட விசாரணையில்,
போனில் மிரட்டல் விடுத்தவர்
மதுரை மேட்டுக்கார தெருவைச் சேர்ந்த
சரண்யா என தெரியவந்தது.
இவர் மீது வழக்குப்பதிவு செய்த
காவல்துறையினர்
அவரை கைது செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
மனைவியான
அன்னை ஆயிஷா அவர்களின்
பெயரை பயன்படுத்தி நடமாடும்
வெடிகுண்டு ஆயிஷா அங்கு
நடமாடுகிறாள்,
இங்கு நடமாடுகிறாள் என்று முதல்
பக்கம் முதல் கடைசி பக்கம் வரை பக்கம்
பக்கமாக செய்தி வெளியிட்ட
ஊடகம்
இந்துத்துவா காவி பெண்
தீவிரவாதி சரண்யாவை பற்றி
உள்பக்கத்தில் கூட
செய்தி வெளியிட
மறுப்பது ஏனோ ?
நடமாடும் வெடிகுண்டு ஆயிஷா
தமிழகத்தின் பல இடங்களில்
நடமாடுகிறாள்
என்று அவதூறு கூறி வெளியில்
சென்ற முஸ்லிம்
பெண்களை சந்தேக கண்
கொண்டு பார்த்த
கொடூரத்தை முஸ்லிம்கள்
மறந்துவிட முடியாது...
அன்று நம் மீது சுமத்தப்பட்ட
கறையை துடைக்க எவ்வித மீடியாவும்
இல்லை...
இன்று தான் முகநூல் என்ற
மீடியா கிடைத்திருக்கிறது.
(அதிகப்படியாக Share
செய்யவும்...)
நன்றி : இந்நேரம

Sunday 7 December 2014

பாபரி மஸ்ஜித் உண்மை வரலாறு

கி.பி.1526 - முதல் பாணிபட் போர்
டெல்லிக்கு அருகே (இன்றைய
ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும்
அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹிம்
லோடிக்கும் இடையே நடந்தது.
லோடி கொல்லப்பட்டு பாபர்
வெற்றி பெறுகிறார். இந்தியாவின்
வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப்
பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
கி.பி.1528 - பாபரின்
தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார்.
அங்கு முழுமை அடையாமல் கிடந்த
பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின்
பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம்
லோடி டெல்லியை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல்
நாட்டப்பட்டிருந்தது.
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித்
நிலம் தொடர்பான
சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது
கி.பி.1855 - பாபர் பள்ளிவாசலின்
ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என
கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால்
ஆக்கிரமிக்கப்படுகிறது.
கி.பி.1857 - முதல் இந்திய சுதந்திரப் போராட்டம்
கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம்
பகதூர்ஷாவின் தலைமையில் நடக்கிறது.
இந்துக்களும் முஸ்லிம்களும் சீக்கியர்களும்
ஓரணியில்
திரண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள்.
நிலைகுலைந்த ஆங்கிலேயர்கள்
அப்போராட்டத்தை ஒடுக்கினாலும்,
இனி தாங்கள்
தொடர்ந்து இந்தியாவை ஆளவேண்டுமெனில்
இந்துக்கள் முஸ்லிம்களுக்கிடையே குரோதத்தை -
பிரித்தாளும்
கொள்கையை வளர்த்தெடுக்க
வேண்டுமென்று சதித்திட்டம் போடுகிறார்கள்.
அதற்கு அவர்கள் உடனடியாக
எடுத்துக்கொண்ட ஆயுதம்தான்
அயோத்தி - பாபர் பள்ளிவாசல்
தொடர்பான வரலாற்றுத் திரிபுகள்.
அதேவருடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட
பாபர் மசூதி நிலத்தில் "ராம் சபுத்ரா' எனும்
பூஜை செய்யும்
திண்ணை உருவாக்கப்பட்டு பிரச்சினை தீவிரமடைகிறது.
கி.பி.1859 - ஆக்கிரமிக்கப்பட்ட இப்பகுதிக்கும்,
பாபர் பள்ளிவாசலுக்கும் இடையில்
ஒரு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருதரப்பினரும்
வழிபாடு நடத்திட ஆங்கிலேய நிர்வாகம்
ஏற்பாடு செய்கிறது. இதுதான்
பிற்காலத்தில் நிகழ்ந்திட்ட
துயரங்களுக்கு முன்னோட்டமாகும்.
கி.பி.1931 - அயோத்தியில் வகுப்புக் கலவரம்
நடக்கிறது. அப்போது பாபர் பள்ளிவாசலின்
உண்மைகளைக் கூறும்
கல்வெட்டு திட்டமிட்டு பெயர்த்தெடுக்கப்படுகிறது.
கி.பி.1947 - இந்தியா விடுதலைப் பெறுகிறது.
கி.பி.1949 - மே மாதம் 22-23 தேதிகளின்
நள்ளிரவில் பள்ளிவாசலின்
கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு மிம்பரில்
ராமர் சிலைகள் வைக்கப்படுகிறது.
அதுவரை இஷா தொழுகை நடத்திவிட்டு சுப்ஹு தொழுகைக்கு மீண்டும்
பள்ளிக்கு வந்த முஸ்லிம்கள்
அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார்
தெரிவிக்கிறார்கள். புகார்
பதிவு செய்யப்படுகிறது.
அன்றைய பிரதமர் நேருவுக்கு தகவல்
தெரிந்து உடனடியாக சிலைகளை அகற்றச்
சொல்கிறார். அன்றைய
உள்துறை அமைச்சரான சர்ச்சைக்குரிய
வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை.
அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும்
பிரச்சினையின் தீவிரத்தை உணரவில்லை.
அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார்,
பிரதமர் நேருவின்
உத்தரவை பொருட்படுத்தாமல்,
பள்ளிவாசலை இழுத்துப் பூட்டி அதை "சர்ச்சைக்குரிய
பகுதி'' என அறிவிக்கிறார்.
கி.பி.1949 - இருதரப்பும் நீதிமன்றத்தில்
வழக்கு தொடுக்கிறார்கள்.
கி.பி.1959 - நிர்மோகி அகோரா என்கிற துறவியர்
அமைப்பு, அது எங்களுக்குச்
சொந்தமான இடம் என்று வழக்கில்
தங்களையும் இணைத்துக் கொள்கிறது.
கி.பி.1961 - சன்னி வக்பு வாரியம்,
இது தங்களுக்குச் சொந்தமான
இடம் என்று நீதிமன்றத்தில்
வழக்கு தொடுக்கிறது.
கி.பி.1984 - அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில்
இராமர் கோயில் கட்டுவோம் என விசுவ
ஹிந்து பரிஷத்
அறிவித்து பதற்றத்தை உருவாக்குகிறது.
கி.பி.1986 - பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக்
குழுவை முஸ்லிம்கள்
தொடங்குகின்றனர். அதே வருடம்
அன்றைய காங்கிரஸ் பிரதமர் ராஜீவ்
காந்தி ஆட்சியில், பள்ளிவாசலுக்குள்
வைக்கப்பட்ட சட்டவிரோத சிலையை பூஜை செய்ய
பைசாபாத் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
கி.பி.1989 - விசுவ ஹிந்து பரிஷத் சார்பில்,
பள்ளிவாசலுக்கு அருகில் அடிக்கல்
நாட்டப்பட்டு பிரச்சினை தீவிரப்படுத்தப்படுகிறது.
கி.பி.1990 - முலாயம்சிங் யாதவ்
உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக
இருந்தபோது வன்முறையாளர்கள்
பள்ளிவாசலுக்கு அருகே சேதத்தை ஏற்படுத்துகிறார்கள்.
துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டம் கலைக்கப்படுகிறது.
உடனடியாக அத்வானி, குஜராத்தில்
சோமநாதபுரம் ஆலயத்தி-ருந்து அயோத்தி வரை ரத
யாத்திரையை நடத்தி நாடெங்கிலும்
பீதியை உண்டாக்குகிறார். ஆனால்
அவரது ரத யாத்திரை பீகார் மாநிலத்துக்குள்
நுழைந்தபோது அன்றைய முதல்வர் லாலு பிரசாத்
யாதவ்,
அத்வானியை துணிச்சலோடு கைது செய்கிறார்.
அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள்
இதனால் மத்தியில் ஆட்சியை இழக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 6 - நாடெங்கிலும்
திரட்டப்பட்ட மதவெறி பிடித்த,
நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வன்முறைக் கூட்டம்
பாபர் மஸ்ஜிதை இடிக்கிறது.
நாடெங்கிலும் மதக்கலவரங்கள்
நடந்து அப்பாவி மக்கள்
கொல்லப்படுகிறார்கள்.
மீண்டும் அதே இடத்தில் 100 நாட்களுக்குள்
பள்ளிவாசலைக் கட்டித் தருவோம் என அன்றைய
காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ்
அறிவிக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 16 அன்று பாபர் மஸ்ஜித்
இடிப்புக்கு யார் காரணம் என்று கண்டறிய
நீதிபதி லிபர்ஹான் தலைமையில் கமிஷன்
அமைக்கப்படுகிறது.
கி.பி.1993 - சுதந்திரத்திற்கு முன்பு 1947
வரை எவையெல்லாம் யாருடைய
வழிபாட்டுத் தலங்களாக
இருந்தனவோ அவை அப்படியே தொடரும்
என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது.
2002 - பிப்ரவரி மாதம் பாபர் மஸ்ஜித்
நிலத்திற்கு அருகில் பெருமளவில் கூட்டம்
திரட்டப்பட்டு மீண்டும் பத்தாண்டுகளுக்குப்
பிறகு பிரச்சினை தொடங்கப்படுகிறது.
மார்ச் 15 அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர்
மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டும்
பணி தொடங்கும் என விசுவ
ஹிந்து பரிஷத் அறிவிக்கிறது.
2002 - பிப்ரவரி 27 அன்று குஜராத்தில்,
கோத்ரா சம்பவத்தைத்
தொடர்ந்து மதக்கலவரம்
வெடிக்கிறது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட
முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள்.
ஆயிரக்கணக்கானோர் படுகாயம்
அடைகின்றனர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான
முஸ்லிம்களின் சொத்துக்கள்
அழிக்கப்படுகின்றன.
2002 - ஏப்ரல் மாதம் மூன்று நீதிபதிகள்
கொண்ட அலஹாபாத்
உயர்நீதிமன்ற குழு, பாபர் மஸ்ஜித் நிலம்
யாருக்கு சொந்தம் என்ற
விசாரணையைத் தொடங்கியது.
2003 - பாபர் மஸ்ஜித் இடத்தில் கோயில்
இருந்ததா? என்று ஆய்வு செய்ய
தொல்லியல் துறைக்கு நீதிமன்றம்
உத்தரவிட்டது.
2009 - லிபர்ஹான் ஆணையம் 16 வருடங்கள்
விசாரணைக்குப் பிறகு, பாபர் மஸ்ஜித்
இடிப்பில் அத்வானி, அசோக் சிங்கால்,
உமாபாரதி, உள்ளிட்ட 60க்கும்
மேற்பட்டோரை குற்றவாளிகள் என அறிவிக்கிறது.
2010 - செப்டம்பர் 30. 61 வருடங்களாக
நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில்
அலஹாபாத் நீதிமன்றம்,
சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின்
அடிப்படையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது.
சன்னி வக்பு வாரியமும் மற்றவர்களும்
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக்
கொடுக்க இடைக்காலத் தடை விதித்தது.

இந்து மக்களே சிந்தியுங்கள்....!

முகலாயர்கள் இந்தியாவை ஆண்ட
போது இந்துக்களுடன் மிக இணக்கமாக
நடந்து கொண்ட காரணத்தால்
இந்தியாவில் அவர்களால் 800 வருடம்
ஆட்சி செய்ய முடிந்தது.
கண்டிப்பாக அவர்கள் இந்து மக்களை கோபமூட்டும்
விதமாக கோவில்களையோ,
இந்து மக்களையோ அவர்கள் தாக்கி இருக்க
மாட்டார்கள்.
வழிபாட்டு தலங்கள், பெண்கள் , முதியோர் ,
குழந்தைகள் போன்றவற்றை போர் நடைபெரும் போது கூட
ஒரு முஸ்லிம் தாக்குதல் நடத்த கூடாது என
கூறி இருக்கும் போது....
ஆட்சி செய்த முகலாய
மன்னர்களா தன் குடி மக்களின் உயிர்களையும்
உடைமைகளையும், வழிபாட்டு தலங்களையும்
இடித்து இருப்பார்கள்....?
இந்து மக்களே சிந்தியுங்கள்....!

Saturday 6 December 2014

திணறியது தமிழகம்(படங்கள் இணைப்பு)

தமிழகத்தில் சகோதர இயக்கத்தினர் சார்பாக நடைபெற்ற
பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான
மாபெரும் ஆர்ப்பாட்டம்!

10, +2 பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை

10ம் வகுப்பு, +2 பொதுத்
தேர்வுகளுக்கான கால
அட்டவணை வெளியிடப்பட்டது. +2 தேர்வுகள்
2015 மார்ச் 5ம் தேதி தொடங்கும் என
அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளன.
மார்ச் 5ம் தேதி தொடங்கும் +2
பொதுத் தேர்வுகள் மார்ச் 31ம்
தேதி வரை முடிவடைகிறது. மேலும் 10ம்
வகுப்பு பொதுத் தேர்வுகள் 2015 மார்ச்
19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம்
தேதி வரை நடக்கும் என அரசு தேர்வுகள் இயக்கம்
தெரிவித்துள்ளன.
10ம் வகுப்பு தேர்வு அட்டவனை
* மார்ச் 19 : மொழிப்பாடம் முதல்
தாள்
* மார்ச் 20 : மொழிப்பாடம்
இரண்டாம் தாள்
* மார்ச் 25 : ஆங்கிலம் முதல் தாள்
* மார்ச் 26 : ஆங்கிலம் இரண்டாம் தாள்
* மார்ச் 30 : கணிதம்
* ஏப்ரல் 6 : அறிவியல்
* ஏப்ரல் 10 : சமூக அறிவியல்
12ம் வகுப்பு தேர்வு அட்டவனை
* மார்ச் 4 : தமிழ் முதல் தாள்
* மார்ச் 6 : தமிழ் இரண்டாம் தாள்
* மார்ச் 9 : ஆங்கிலம் முதல் தாள்
* மார்ச் 10 : ஆங்கிலம் இரண்டாம் தாள்
* மார்ச் 13 : கலாச்சாரம், தகவல்
தொடர்பு ஆங்கிலம்,
கணினி அறிவியல், உயிரிவேதியல்
* மார்ச் 16 : வணிகவியல், புவியியல்,
மனை அறிவியல்
* மார்ச் 18 : கணிதம், விலங்கியல்,
நுண்ணறி உயிரியல், சத்துணவியல்
* மார்ச் 23 : வேதியியல் மற்றும் கணக்குப்
பதிவியியல்
* மார்ச் 27 : இயற்பியல் மற்றும்
பொருளாதாரம்
* மார்ச் 31 : வணிக கணிதம், உயிரியல்,
வரலாறு, தாவரவியல்.

Wednesday 3 December 2014

ஆஸ்திரேலியாவிலிருந்து_வரும்_மிகவும்_அதிர்ச்சியான_ஒருதகவல்

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளதை யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (business delegation) சென்றுள்ளது.
இன்று மாலை அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தகக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவர் – மோடிஜியின் நெருங்கிய நண்பர்.
குஜராத்தில் பல முதலீடுகளை செய்துள்ள தொழிலதிபர் (அதானி க்ரூப்ஸ் தலைவர் ) கௌதம் அதானி.
இவரது கம்பெனிக்கு ஆஸ்திரேலியாவில் Carmichael (Queensland ) என்கிற இடத்தில் சுரங்க கம்பெனி ஒன்றைத் துவக்க ஆஸ்திரேலிய அரசு இன்று அனுமதி கொடுத்திருக்கிறது.
இந்த அதானி கம்பெனி, ஆஸ்திரேலியாவில் துவங்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு, இந்தியாவின் முன்னணி அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India )
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனாகக் கொடுக்கிறது.
கோடிக்கணக்கான டாலர்களில் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போகிறதே என்கிற அச்சத்தில் கூகுளில் தேடினேன் – ஒரு பில்லியன் அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு என்று -
1 billion US dollars are equal to how many Indian rupees?
அதிர்ச்சியளிக்கிறது கிடைக்கும் பதில் - As of October 2014, $1,000,000,000 = 61,532,000,000 Indian Rupees.
இத்தனை கோடி ரூபாய் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போவது மட்டும் அல்ல -
ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், சுமார் 4000 ஆஸ்திரேலிய சுரங்கத் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதால் – இந்த சுரங்கத்தை கூடிய விரைவில் தோண்ட ஆரம்பிக்க ஆஸ்திரேலிய அரசு ஆர்வம் காட்ட, 2017 -ல் முதல் சுரங்கம் துவக்கப்பட்டு விடும் என்று அதானி சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்ல – நிலக்கரி சுரங்கம் அமையும் இடத்திலிருந்து அது ஏற்றுமதி செய்ய அமையவிருக்கும் துறைமுகம் 400 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால், இந்த நிலக்கரிச்
சுரங்கத்திலிருந்து – துறைமுகம் வரையிலான 400 கி.மீ. தூரத்திற்கு அதானி கம்பெனியே ரெயில் பாதையும் போடப்- போகிறது. இந்த ஷரத்தும் – இன்றைய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
“Make in India” என்று இங்கே இந்தியாவில் மிகப்பெரிய கோஷத்தை உருவாக்கிவிட்டு, ஆஸ்திரேலியா வளம்பெற மிகப்பெரிய அளவில் அங்கு இந்திய முதலீட்டை கொண்டு செல்வதும், அங்குள்ள வேலையிழந்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கொடுப்பதும் ……
எதில் சேர்த்தி …??? ஒன்றுமே புரியவில்லை…. உண்மையாகவே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
மேலும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஸ்டேட் வங்கி - இவ்வளவு பிரம்மாண்டமான அளவு தொகையை எப்படி ஒரு தனிப்பட்ட முதலாளிக்கு / தொழில் நிறுவனத்திற்கு கடனாகக் கொடுக்கிறது….
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்க கம்பெனியான Glencore ( இதற்கு ஆஸ்திரேலியாவிலேயே 13 சுரங்க கம்பெனிகள் உள்ளன ) தற்போது அதன் 8000 ஊழியர்களுக்கு வேலையின்மை/ நஷ்டம் காரணமாக – கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் புதிதாக நிலக்கரிச் சுரங்கங்களைத் தோண்டுவது லாபகரமாக இருக்காது என்று துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் 1 பில்லியன் கோடி டாலர் பணத்தை அங்கு இந்திய முதலீடாகப் போட ஒரு தனிப்பட்ட கௌதம் அதானியை நம்பி State Bank of India கொடுப்பது அறிவுடைமையா …? இந்த கடன் கொடுக்கப்படுவதற்கான காரணம் யார் …???
Kingfisher விஜய் மால்யாவிற்கு கொடுத்தது போல் - இத்தனை கோடி ரூபாயையும் கௌதம் அதானிக்கு தத்தம் செய்தால், நான்கு – ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நஷ்டம் காரணமாக அவர் சுரங்கத்தை மூடினால் – அத்தனை நஷ்டமும் யார் தலையில் வந்து விடியப்போகிறது…..???
முட்டாள் இந்தியன் தலையிலா ….?
இதே வங்கிப் பணத்தைக் கொண்டு, இதே முயற்சிகளை, இந்திய நிலக்கரி சுரங்களில் மேற்கொண்டு, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளாதது ஏன்…..?
ஆமாம் – பிரதமருடன் செல்லும் வர்த்தகக் குழு அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சிப்பதற்காக செல்கிறதா அல்லது இந்திய பணத்தை (அதுவும் அவர்களது சொந்தப்பணம் அல்ல - அரசு வங்கிப் பணம் – இந்த நாட்டு மக்களின் சேமிப்பு) அயல்நாடுகளில் கொண்டு சென்று முதலீடு செய்யவா …?
நன்றி : விமரிசனம் - காவிரிமைந்தன்
நன்றி : இந்நேரம்.காம்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR