ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Tuesday 25 March 2014

மாயமான மலேசிய விமானம் மர்மம் நீங்கியது

மாயமான
மலேசிய
விமானம்
இந்திய
பெருங்கடலில்
விழுந்திருக்கும்
என்று மலேசிய
பிரதமர்
நஜீப்
ரசாக்
தெரிவித்துள்ளார்.
இன்னாலில்லாஹி வஇன்ன
இலைஹி ராஜிவூன்...
மேலும்
விமானத்தில்
பயணம்
செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க
வாய்ப்பு இல்லை என்றும் விமானத்தில்
பயணம் செய்த பயணிகளின்
உறவினர்களுக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும்
தெரிவித்துள்ளார். மேலும், கடலில்
விமானம் விழுந்திருக்கலாம்
என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து விமானத்தை தேடும்
பணியை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் மிக முக்கியமான
தினசரி பத்திரிக்கையான "ஸ்டார்"
இன்று வெளியிட்டுள்ள
செய்தித்தாளில் முன்பக்கம்
"ஆர்.ஐ.பி எம்ஹெச்370"
என்று வெளியிட்டுள்ளது.அதன் பின்புறம்
மறைந்த பயணிகளின் பெயர் சிறிய
எழுத்துகளில் அச்சிட்டுள்ளது அந்த
செய்தி பத்திரிக்கை.
நியூ ஸ்ரைட் டைம்ஸ்" என்ற செய்தித்தாள்
முதல் பக்கம் முழுவதையும் கருப்பு நிறத்தில்
அச்சிட்டுள்ளது.மேலும்,அப்பக்கத்தில் "குட் நைட்
எம்ஹெச்370" என்ற வாசகமும் இடம்
பெற்றுள்ளது.அதுதான் மாயமான
மலேசிய விமானத்தில் இருந்து வந்த
கடைசி செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.
மலாய் மற்றும் சீன
மொழி பத்திரிக்கைகளும் முதல்
பக்கத்தை கருப்பு நிற பின்னணியுடன்
வெளியிட்டுள்ளன.
ஆங்கில பத்திரிக்கையான "சன்"
தனது செய்தித்தாளின்
பெயரை கருப்பு நிறத்தில்
வெளியிட்டுள்ளது. ஸ்டார்
செய்தித்தாள் இதைப்பற்றிய
செய்தியில்,"ஒரு நீண்ட நெடிய
காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது"
என்று கூறியுள்ளது.ஆனால்,இந்த நிமிடம்
வரை விமான மாயத்திற்கான தகவலை எந்த
ஊடகமும் வெளியிட இயலவில்லை.
"எம்ஹெச்370 விமானத்திற்கான
தேடுதல் தொடரும்" என்று மலேசிய
அரசு கூறியுள்ளது. எதிர்கட்சியை சேர்ந்த லிம் கிட்
சியாங் தனது டுவிட்டர்
பக்கத்தில்,"பயணிகளின்
குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இது மிகவும்
வருத்தமான செய்தி.
அவர்களுக்கு மட்டும் அல்ல,உலகத்தின்
அனைத்து மக்களையும் இச்செய்தி கண்ணீர்
மழையில் தள்ளி உள்ளது" என்று கூறியுள்ளார்.
மலேசிய விமான பலியானவர்களின்
குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்
நிதி உதவி வழங்க இருப்பதாக மலேசிய
ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும்
நிதிஉதவி வழங்குவ தாகவும்
தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து வெளியாகும்
டெய்லி டெலிகிராப் என்ற
செய்தித்தாள் காணாமல் போன
மலேசிய விமானம் குறித்து மலேசிய
அதிகாரிகள் அளித்த அறிக்கைகள்
முரண்பாடாக உள்ளது. விமானி குறித்த
விசாரணையை திசை திருப்புகிறது.
மலேசிய அதிகாரிகள் மிகக்குறைவான
தகவல்கலையே வெளியிட்டு உள்ளனர்.விமானம்
குறித்து விசாரணைநடத்தியவர்களிம் எந்த
தகவலியும் அவர்கள் சரிபார்க்கவில்லை
தற்போது இயந்திர கோளாறு காரணமாக
விமானம் வெடித்திருக்கலாம்
அல்லது தீ பற்றி இருக்கலாம் எனற
கோணத்தில் திருப்புகிறது. என அந்த
பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து பத்திரிகள் ஏற்கனவே அரசியல்
காரணங்களுக்காக தலைமை பைலட்
ஷா விமானத்தை கடத்தி இருக்கும் சாத்திய
கூறுகள் உள்ளதாக
செய்தி வெளியிட்டு இருந்தன .தலைமை பைலட்
அரசியலில் ஆர்வமாக இருந்தார் எனரும்
எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமின்
ஆதரவாளராக இருந்து உள்ளார் எனவும்
தெரிவித்து இருந்தன.
நொறுங்கிய விமானம் கடலுக்குள் 20
ஆயிரம் அடி ஆழத்தில்
கிடப்பது தெரியவந்தது. கடலுக்குள் விழுந்த
விமானத் தில்
இருந்து தொடர்ந்து சமிக்ஞைகள்
(சிக்னல்) வந்து கொண்டிருப்பதாக
இங்கிலாந்தின் இன்மர்சாட் நிறுவனம்
அறிவித்துள்ளது. இதன் மூலம் அதன் தகவல்
தொடர்பு கருவிகளில்
ஒன்று செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
கடலில் மூழ்கி கிடக்கும் விமானத்தின்
கருப்பு பெட்டியை மீட்கும் நடவடிக் கையில்
அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்
பட உள்ளனர்.
மேலும்  அவர் கூறியதாவது,
இந்த செய்தி நிச்சயம்
ஏற்றுக் கொள்ள முடியாத
ஒரு துயரமாக இருக்கும் என்பதை நாங்கள்
அறிவோம். எனவே ஊடகங்கள் அவர்களின்
உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ள
வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அன்பு சகோதரர்களே !...இது மாதிரியான
சந்தர்ப்பங்களிலும் ,
நமது ஒவ்வொரு தொழுகையின்
போதும் கீழ்காணும் இந்த
துஆவை அல்லாஹ்விடத்தில் கேட்டுக்
கொள்வோம் ....
" வாழும்போதும் திடீரென வரும்
ஆபத்துக்களிலிருந்தும் , நோய்களிலிருந்தும் ,
பிரச்சினைகளிலிருந்தும் சோதனைகளிலிருந்தும் அது போல
இறக்கும் போதும் ஏற்படும் சோதனைகளிலிருந்தும்
யா அல்லாஹ் நீ
எங்களை பாதுகாப்பாயாக !...
நீயே எங்களுக்கு பாதுகாவலன் .

Tuesday 18 March 2014

Quran

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ِ
2:1    الم
2:1. அலிஃப், லாம், மீம்.
2:2   ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ
2:2. இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
2:3   الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
2:3. (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
2:4   وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ
2:4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
2:5   أُولَٰئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
2:5. இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
2:6   إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ
2:6. நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.
2:7   خَتَمَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ ۖ وَعَلَىٰ أَبْصَارِهِمْ غِشَاوَةٌ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
2:7. அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.
2:8   وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ
2:8. இன்னும் மனிதர்களில் "நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்" என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.
2:9   يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ
2:9. (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.
2:10   فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ
2:10. அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.
2:11   وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ
2:11. "பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்" என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் "நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்" என்று அவர்கள் சொல்கிறார்கள்.
2:12   أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَٰكِن لَّا يَشْعُرُونَ
2:12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
2:13   وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ ۗ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَٰكِن لَّا يَعْلَمُونَ
2:13. (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், "மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?" என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
2:14   وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَىٰ شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ
2:14. இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, "நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்" எனக் கூறுகிறார்கள்.
2:15   اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ
2:15. அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.
2:16   أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَارَتُهُمْ وَمَا كَانُوا مُهْتَدِينَ
2:16. இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்

Monday 17 March 2014

உங்கள் வேட்பாளர்களை உங்களுக்குப்பிடிக்கவில்லையா?

ஒரு தொகுதியில் போட்டியிடும்
அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும்
முறையான 'நோட்டா' முறை, பாராளுமன்ற
தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக
இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.
நோட்டா ( None of the Above – NOTA ; புதிதாக
வாக்கு ) அனைவருக்கும் எதிரான வாக்கு
என்று பொருள். இந்திய அரசியல்
அமைப்புச்சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான
உரிமையே இந்த நோட்டா பட்டன் என்பதாகும்.
தான் எந்த ஒரு வேட்பாளருக்கும்
வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும்
இந்த பட்டனை அழுத்துவதின் மூலம் அந்த
தொகுதியில் நிற்கும்
வேட்பாளரை தான் வெறுக்கிறேன்
என்று அர்த்தம் கொள்ளப்படும்.
இச்சட்டம் உச்ச நீதிமன்றம் செப்டம்பர்
27 ஆம் தேதி அளித்த தீர்ப்பின்படி இப்பட்டன்
வாக்கு எந்திரத்தில் பொருத்தப்பட
உள்ளதாக தேர்தல் அலுவலகம்
தெரிவித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதும்
சமூக ஆர்வலர்கள் அயராமல்
போராடியதற்கான வெற்றி இப்போது உச்ச
நீதிமன்றத் தீர்ப்பாகக் கிடைத்திருக்கிறது.
எல்லா வேட்பாளர்களையும்
நிராகரிப்பதற்கான உரிமை மக்களுக்கு உண்டு;
அதை ரகசியமாகத் தெரிவிக்கும் வசதியும்
அவர்கள் உரிமை என்று தெளிவாகச்
சொல்லிவிட்டது நீதிமன்றம்.
இதை வர விடாமல், அரசு மட்டத்திலும்
நீதிமன்றத்திலும் இழுத்தடித்த கட்சிகள்
எல்லாம் இப்போது இதை வரவேற்பதாகப்
பாவனை செய்கின்றன. முன்னர்
வேட்பாளர்கள் சொத்துக்
கணக்கு தெரிவிக்க வேண்டும் என்ற
விதியைத் தேர்தல் ஆணையம்
கொண்டுவந்தபோது, எல்லாக்
கட்சிகளும் அதை எதிர்த்தன. ஆனால், அந்த
விதியும் உச்ச நீதிமன்ற உத்தரவால்தான்
நடைமுறைக்கு வந்தது.
நோட்டை நீட்டி, என் ஓட்டை வாங்க முயற்சிக்கும்
வேட்பாளர்களுக்கெல்லாம் நான்
நோட்டா' போடலாம். ஆக, 'நோட்டா' மக்கள்
கையில் கிட்டியிருக்கும் தோட்டா.
நிராகரிப்பு ஓட்டுகள் இதர வேட்பாளர்களின்
ஓட்டுகளைவிட அதிகமாக இருந்தால்,
மறு தேர்தலுக்குத்தான் உத்தரவிட வேண்டும்.
அந்தத் தேர்தலில், முந்தைய நிராகரிக்கப்பட்ட
வேட்பாளர்கள் மறுபடியும் நிற்கத் தகுதி
இல்லை. அவர்கள் நிராகரிக்கப்பட்டவர்கள்.
உங்களது தொகுதி
வேட்பாளர்களை உங்களுக்கு
பிடிக்கவில்லையெனில்… நீங்கள் ஓட்டுப்
போட போகாமலோ அல்லது அங்குப் போய்
உங்களது ஓட்டை செல்லாமலோ
ஆக்குவதென்பதைவிட
உங்களது பொன்னான
எதிர்ப்பை பதிவு செய்யும்
வசதிக்குதான் இந்த நோட்டா!!
உங்கள் வேட்பாளர்களை உங்களுக்குப்
பிடிக்கவில்லையா????? உங்கள்
வாக்கை 'நோட்டா' (NOTA)வில்
பதிவு செய்யுங்கள்.
1) If you are not satisfied with any candidates
2) if you think the present system not working in
welfare of public
3) if you think all politicians are making false
promise
4) if you find any political party field corrupt and
criminal recorded candidates.
5) if you dont have any faith any party
THEN DONT LOOSE YOUR HEART.AFTER 6
DECADES THE GOVT AND EC HAVE GIVEN A REAL
FREEDOM AND GOOD OPPORTUNITY TO SHOW
YOUR DISAPPROVAL BY CASTING YOUR VOTE FOR
NOTA@ LAST BUTTON IN EVM.
Please dont compromise your valuable vote for
others.
ஓட்டுப் பதிவில் சமீபக் காலத்தில்
இடம் பெற்றுள்ள 'நோட்டா – NOTA'
ஓர் வரபிரசாதம்!

Sunday 16 March 2014

மலேசிய விமானமும் - மீடியாவும்

மலேசிய
தலைநகர்
கோலாலம்பூரில்
இருந்து சீன
தலைநகர்
பெய்ஜிங்குக்கு புறப்பட்ட
விமானம்
கடந்த
7–
ந்தேதி மாயமாகிவிட்டது.
அதில் இருந்த 239 பயணிகள் கதி என்ன
என்று தெரிய வில்லை.மாயமான
விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என
கருதி 14 நாடுகளை சேர்ந்த 58 விமானங்கள், 43
கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஆனால் மாயமாகி 9 நாட்களாகியும்
விமானம் பற்றிய தகவல்
தெரியவில்லை.தென் சீன கடல்
பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடைக்க
வில்லை. எனவே, அது இந்திய பெருங்கடலில்
அந்தமான் நிகோபர் பகுதியில்
விழுந்திருக்கலாம் என
சந்தேகிக்கப் படுகிறது.
எனவே, தேடும் பணியில்
இந்தியா உதவியை மலேசியா நாடியது.
அதை தொடர்ந்து இந்திய கடற்படை 6
போர்க்கப்பல்கள் மற்றும் 4 விமானங்கள் மூலம்
அந்தமான் கடலில் தேடும் பணியில்
ஈடுபட்டுள்ளது.
என்ன நிலை என்பது புதிராக இருக்க, அனைத்து  மீடியாக்களும் நிமிடத்திற்கு  ஒருமுறை பல கதைகளை வெளியிட்ட  வண்ணம்  உள்ளன.

Friday 14 March 2014

Friday Post


Wednesday 12 March 2014

...::: The Holy Quran :::... - And if Allah had willed, He could have made


> ....:: 42. Ash-Shura (Council, Consultation) - Makkah ::....
>  
>
>
> Walaw shaa Allahu lajaAAalahum ommatan wahidatan walakin yudkhilu ma
n yashao fee rahmatihi waalththalimoona ma lahum min waliyyin wala naseerin
>  
> [42 : 8]
> ...
> TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)
>
> அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அனைவரையுமே (ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே சமூகத்தினராக்கி இருப்பான். (எனினும், அவர்கள் அனைவருடைய நடத்தையும் ஒரேவிதமாக இருக்கவில்லை.) ஆகவே, தான் விரும்பிய நன்மை செய்தவர்களையே தன் அருளில் புகுத்துகின்றான். அநியாயக்காரர் (களைத் தப்பான வழியில் விட்டுவிட்டான். அவர்)களை (அந்நாளில்) பாதுகாப்பவர்களும் இல்லை; உதவி செய்பவர்களும் இல்லை.
> MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur
>
> അല്ലാഹു ഉദ്ദേശിച്ചിരുന്നെങ്കില്‍ അവരെ (മനുഷ്യരെ) യെല്ലാം അവന്‍ ഒരേ സമുദായമാക്കുമായിരുന്നു. പക്ഷെ, താന്‍ ഉദ്ദേശിക്കുന്നവരെ തന്‍റെ കാരുണ്യത്തില്‍ അവന്‍ പ്രവേശിപ്പിക്കുന്നു. അക്രമികളാരോ അവര്‍ക്ക് യാതൊരു രക്ഷാധികാരിയും സഹായിയുമില്ല.
>
> ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan
>
> And if Allah had willed, He could have made them one nation, but He admits whom He wills to His Mercy. And the Zalimun (polytheists and wrong-doers, etc.) will have neither a Wali (protector) nor a helper.
>
> HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur Rahman Nadwi
>
> यदि अल्लाह चाहता तो उन्हें एक ही समुदाय बना देता, किन्तु वह जिसे चाहता है अपनी दयालुता में दाख़िल करता है। रहे ज़ालिम, तो उनका न तो कोई निकटवर्ती मित्र है और न कोई (दूर का) सहायक
>
> URDU | Translation By :Dr. Col Muhammad Ayub
>
>  
>
>

Monday 10 March 2014

தமிழக தேர்தல் பிரச்சாரத்தை நீங்களே பாருங்கள்.

மோடியின்  சாதனை:
டாடா நானோவின் மொத்த
முதலீடே ரூ2900 கோடிதான்,
ஆனால்
மோடி வழங்கிய சலுகை ரூ9570 கோடி
20 ஆண்டுகளில் தவனை முறையில்
அடைத்தால் போதும்
அதுவும் ஒரு வருடத்திற்கு வட்டி
நூறு ரூபாய்க்கு
10 பைசா மட்டுமே,
20 வருடத்துக்கு
வாட்வரி,
சுங்கவரி,
கலால்வரி,
விற்பனைவரி,
சேவைவரி,
மின்சாரவரி,
10ஆண்டு கார்பரேட்வரி கூட கிடையாது
போதாததுக்கு
இந்த ஆலைக்கு நான்கு வழிச்சாலையையும்
100 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம்
ஈனவிலைக்கு வாங்கி
செய்துகொடுத்தவன்
மோடி,
மக்கள் வரிப்பணத்தில்.
அடுத்து அதானி குழுமம் நிறுவனத்துக்கு
ரூ 7500கோடிகள்
மதிப்புள்ள அரசாங்க இடத்தை
வெறும் ரூ160
கோடிக்கு விற்று அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய
அயோக்கியன் மோடி,
ஆனால் அந்த இடத்தை வாங்கியவன்
விற்று பல்லாயிரம் கோடி சாம்பாதித்துவிட்ட டான்
இதுவும் 2ஜி போன்ற ஊழல் தான்,
இந்த ஊழல் சிஏஜியே
மூலம் கண்டுபிடிக்கப்பட்டு
240,08 கோடிகளை
அபராதமாக கட்டச் சொல்லி கோர்ட்
ஆணையிட்டது,
ஆனால் மோடி தலையிட்டு 80கோடிகள் வாங்கிக்
கொண்டு விடுவித்துவிட்டார்,
அடுத்து எஸ்ஸார் குழுமத்துக்கு விவசாயிகளின்
நிலத்தை ஈனவிலைக்கு வாங்கி கொடுக்கமறுத்து போராடிய
விவசாயிகளை தடியடி நடத்தி
7,24,687,சதுரமீட்டர்
நிலங்களை
ஆக்கிரமித்தார்கள்,
இதிலும் குஜராத் அரசுக்கு
ரூ238,50 கோடிகள் நட்டம்,
இதேமாதிரி எல&டி நிறுவனத்துக்கு மோடி வழங்கியதில்
மாநில அரசுக்கு
ரூ 128,71 கோடிகள் நட்டம்,
இவங்களுக்கு பரோடாலா வேற நிலம்
கொடுத்திருக்கிறார் மோடி
இன்னும் ஏராளம்.
இதுக்கு பதில் சொல்லுங்கள்
குஜராத்துல தான் அதிகமான அந்நிய
முதலீட்டார்கள் தொழில்
செய்கிறார்கள்
இது தான்
அதன் பின்னனி
வாய்மை தான் வெல்லும்
பொய்மை அழிந்தே தீரும்.
இதில் தமிழக தேர்தல் பிரச்சாரத்தை நீங்களே  பாருங்கள்.
தகவல்: modineverwins.blogspot.com

குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

****************************
> பொதுவாக ஒரு குழந்தை தாயின் கருவறையில் (கர்ப்பப்பையில் - Womb) 40 வாரங்கள் இருத்தல் வேண்டும். இதற்குக் குறைவாக அதாவது 37 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகளை குறைமாதக் குழந்தைகள் என்கிறோம்.
>
> நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களுக்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் குறை மாதக்குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை.
>
> அதிலும் 28 வாரங்களில் அதாவது 7 மாதங்களில் ஒரு குழந்தை பிறக்குமானால், அந்தக் குழந்தை 1 கிலோவிற்கும் குறைவானதாகவே இருக்கும்.
>
> ஒருபெண் கர்ப்பம் தரித்த 2 அல்லது 3 மாதங்களிலேயே ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, குழந்தை பிறக்கும் உத்தேச தேதியை மகப்பேறு மருத்துவர்கள் கணிப்பார்கள். 
>
> அதாவது, மாதவிடாய் கடைசியாக எந்த தேதியில் ஏற்பட்டதோ அந்த நாளில் இருந்து 40 வாரங்கள் என்று கணக்கிடுவார்கள்.
>
> முழு அளவில் வளர்ச்சியடைந்து பிறக்கும் குழந்தைகள் குறைந்தது இரண்டரை கிலோ எடை இருத்தல் அவசியம். இந்த எடைக்குக் குறைவாக இருந்தாலே குறைமாதமாக எடுத்துக் கொள்ளலாம். சில நேரங்களில், முழு வளர்ச்சியடைந்த குழந்தைகளும் இரண்டரை கிலோவிற்கு குறைவான எடையுடன் பிறக்க நேரிடும். எனவே கருவுற்ற பெண்ணின் கடைசி மாதவிடாய் தேதி மூலமான கணக்கீடே குழந்தையின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும்.
>
> குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
>
> நுரையீரல் மூலம் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது சாதாரணமான ஒன்றாகும். குறைமாத குழந்தைகளுக்கு நுரையீரல் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பதால், ஆக்ஸிஜன் தெரபி தேவைப்படும். சில குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் எனப்படும் உயிர்காக்கும் கருவி அவசியமாகும்.
>
> குறைமாதத்தில் பிறக்கும் சில குழந்தைகளுக்கு இதய நோயும் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உண்டு.
>
> ஒரு கிலோவிற்கும் குறைந்த எடையுடன் பிறக்கும் சில குழந்தைகளுக்கு மூளை நரம்புகளில் இரத்தக்கசிவு இருக்கக்கூடும். அதுபோன்ற குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை தேவைப்படலாம். 
>
> வேறுசில குழந்தைகளுக்கு மாறுகண் போன்ற பார்வை ஏற்படலாம். ஆனால், குழந்தைகள் வளர, வளர அவை சரியாகி விடும்.
>
> பெண்களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தாலும், தாய்க்கு நீண்ட கால நோய்களான இதய பாதிப்பு, சிறு நீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோய் இருந்தாலும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் இருந்தாலும், உடலில் எடை மற்றும் உயரம் குறைவாக இருந்தாலும், கர்ப்ப காலங்களில் அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டாலும், அதிக வேலை மற்றும் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களாலும் குறைமாதக் குழந்தைகள் பிறக்கின்றன.
>
> ஒரே பிரசவத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் போதும் இது போன்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. ஆயிரம் கிராமிற்கு குறைவாக பிறக்கும் குழந்தைகள், 27 முதல் 28 வாரங்களில் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்க இங்குபேட்டர், வென்டிலேட்டர் மற்றும் சர்பக்டென்ட் சிகிச்சைகளைப் பயன்படுத்தி உயிர் பிழைக்க வைக்க முடியும்.
>
> இந்தக்கருவிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை. குழந்தை பிறந்தவுடனேயே தாய்ப்பால் அருந்த முழுத் தகுதி அடைகிறது. ஒருவேளை சிசேரியன் செய்த தாய்க்கு, தாய்ப்பால் உடனடியாக கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் எவ்வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
>
> கர்ப்பகாலத்தின் தொடக்கத்திலே கர்ப்பிணிகளை பரிசோதிக்கும் டாக்டர்கள் அவர்களது கர்ப்பத்தின் தன்மைக் கேற்ப ஹை ரிஸ்க் பிரக்னென்சி, லோ ரிஸ்க் பிரக்னென்சி என்று இருவகையாகப் பிரித்து, அதற்கு தக்கபடி மருந்து மற்றும் உணவுகளை பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், வயது அதிகம், கர்ப்பத்தில் பாரம்ப ரியமாகவே நெருக்கடியை சந்திப்பவர்கள் 'உயர் பாதிப்பு கொண்டோர்' பட்டியலில் இடம்பெறுகிறார்கள். 
>
> இவர்களுக்குத்தான் பெரும்பாலும் குறைப்பிரசவ குழந்தைகள் பிறக்கின்றன. முழுவளர்ச்சிக் காலத்தை எட்டாமல், குறைப் பிரசவமாக குழந்தைகள் பிறக்க என்ன காரணம், திருமணமாகி 5-10 வருடங்கள் வரை தாய்மை அடையாத பெண்கள் அதன் பிறகு நவீன முறையிலான குழந்தையின்மைக்கான சிகிச்சைக்கு வருகிறார்கள். அப்போது அவர்கள் வயது கிட்டத்தட்ட 35 ஆகிவிடுகிறது.
>
> அதன் பிறகு ஐ.வி.எப். போன்ற நவீன குழந்தையின்மை சிகிச்சை முறைகளில் கர்ப்பமாகும் பெண்களுக்கு குறைப்பிரசவ வாய்ப்பு அதிகம். அதில் ஏற்படும் 'ரிஸ்க்'கை தவிர்ப்பதற்காக சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது. 
>
> வேலை மனஅழுத்தம்……. 
>
> தற்போது பெரும்பாலான பெண்கள் அலுவலகப் பணியாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கர்ப்பக்காலத்திலும் ஒன்பது மாதம் வரை வேலைக்கு செல்கிறார்கள். பாதுகாப்பாக சென்று, வேலையை ரசித்து, அமைதியாக செய்தால் பாதிப்பு இல்லை. ஆனால் இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் கர்ப்பிணிகள் வேலையில் அமைதியை இழந்து, மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். 
>
> பஸ்களிலும், ஆட்டோக்களிலும் பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொள்கிறார்கள். மாடிப்படி ஏறி இறங்குகிறார்கள். முறையான உணவுப் பழக்கத்தையும் கையாளுவதில்லை. இதுவும் குறைப்பிரசவத்திற்கு காரணம். 
>
> கர்ப்பகால செக்ஸ்….. 
>
> பொதுவாக கர்ப்பகாலத்தில் செக்ஸ் தவிர்க்கப்படவேண்டியதில்லை. ஆனால் கர்ப்பிணியின் நிலையை உணர்ந்து, வயிற்றுக்கு பாதிப்பு ஏற்படாத அளவுக்கு சவுகரியமான 'பொஷிஷனில்' மேற்கொள்ளவேண்டும். ரத்தப்போக்கு இருந்தாலும், செக்சை தவிர்க்க வேண்டும். கர்ப்பகாலத்தில் 'பொறுப்பற்ற' முறையில் மேற்கொள்ளப்படும் செக்ஸ் செயல்பாடும் குறைப் பிரசவத்திற்கு காரணமாகும். 
>
> பயணம் தவிர்க்க……. 
>
> கர்ப்பகாலத்தில் தூர பயணத்தை தவிர்க்கவேண்டும். அதிக எடையை தூக்கக்கூடிய வேலை மற்றும் எடையை தூக்கக்கூடிய உடற்பயிற்சி செய்யாமல் இருக்க வேண்டும். மாடிப்படி ஏறி இறங்குவதை தவிர்க்க வேண்டும். உடல் இயக்கமே இல்லாமல் எப்போ தும் படுத்தே கிடப்பதையும் தவிர்க்கவேண்டும். 
>
> சத்துக் குறைபாடு…….. 
>
> பெண்களிடம் இருக்கும் சத்துக்குறைபாடும், குறைப் பிரசவத்திற்கான காரணமாகிறது. 150 செ.மீ.க்கு குறைவான உய ரமும், 50 கிலோவிற்கு குறைவான எடையும் கொண்ட கர்ப்பிணிகள் குறைப் பிரசவ குழந்தைகளை பெற்றெடுக்கும் சூழ்நிலை அதிகம். எதிர்காலத்தில் குறைப்பிரசவ குழந்தைகளை பெற்றெடுத்துவிடக்கூடாது என்று கருதும் பெண்கள் இப்போதே ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். தேவையான உடற்பயிற்சிகள் செய்து உடலுக்கு வலு ஏற்றிக்கொள்ளவும் வேண்டும். 
>
> சர்க்கரை நோயாளிகள்…. 
>
> சர்க்கரை நோய் கொண்ட கர்ப் பிணிகள் கர்ப்பகாலத்தில் மிக கவனமாக இருக்கவேண்டும். சரியான பராமரிப்பு, உணவு பழக்கம், மருந்துகளை சாப்பிட்டு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கா விட்டால் குறைப் பிரசவமாகிவிடும். சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு கொண்ட கர்ப்பிணிகளும் உடலை கவனமாக பராமரிக்கவேண்டும். 
>
> அவர்கள் அரிசி, கிழங்கு வகை உணவுகளை கர்ப்பகாலத்தில் வெகுவாக குறைப்பது நல்லது. பலாப்பழம், மாம்பழம் தவிர்க்கவேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுவது நல்லது. உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும் குறைப்பிரசவம் தோன்றும். அதனால் கர்ப்பிணிகள் நிறைய தண்ணீர் பருகவேண்டும். மனதையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டும். 
>
> எல்லாவற்றையும் சொல்லுங்கள்…….. 
>
> சரியான டாக்டரை தேர்ந்தெடுத்து, கர்ப்பமான தொடக்கத்தில் இருந்தே அவரிடம் பரிசோதனைக்கு செல்லுங்கள். எல்லாவற்றையும் அவரிடம் கூறுங்கள். காலந்தவறாது ஆலோசனைகளை பெற்று, பின் பற்றுங்கள். குறைப் பிரசவத்தை தடுக்க நவீன மருத்துவ முறைகள் நன்றாக கைகொடுக்கின்றன. அதை முழுமையாக பயன்படுத்தி, நிறை மாதத்தில் ஆரோக்கிய குழந்தைகளை பெற்றெடுப்பதற்கு தாய்மார்கள் முன்வரவேண்டும். 
>
> குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் தாய்ப்பாலை தானாக உறிஞ்சி பருகும் வரை டியூப் மூலமாக பால் கொடுத்தல் வேண்டும்.
>
> நாள் ஒன்றுக்கு எட்டு முதல் பத்து முறை தாய்ப்பாலை கொடுப்பதால் மார்பகப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறந்த குழந்தைகள், பாலை மட்டும் குடிக்காமல், காற்றையும் சேர்த்துக் குடிப்பதால் வாந்தி ஏற்படுகிறது. அதிக பாலை அருந்துவதாலும், அருந்திய பால் உணவுப் பாதையில் இருந்து மீண்டும் வாய்வழியே திரும்புவதாலும் வாந்தி ஏற்படுகிறது. 
>
> இதனால் பயப்படத் தேவையில்லை, குழந்தைகளின் எடை குறையாது. ஆனால், தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால் மருத்துவரை அணுகி உணவுப் பாதை அடைப்பு மற்றும் மூளைக் காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
>
> பிறந்த குழந்தைகள் தினமும் ஐந்து முறைக்கு மேல் மலம் கழிக்கும். சில குழந்தைகள் பால் குடித்தவுடன் மலம் கழிக்கும். ஒரு சில குழந்தைகள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மலம் கழிக்கும். இவை அனைத்தும் இயற்கையான செயலே. 
>
> அதே நேரத்தில் தொடர்ச்சியாக 72 மணி நேரம் மலம் கழிக்கவில்லை என்றால், மருத்துவரின் அறிவுரைப்படி தைராய்டு பிரச்னை மற்றும் மலக்குடலில் சுருக்கம் போன்ற பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிந்து சிகிச்சை தர வேண்டும். 
>
> இதேபோல் குறைமாதக் குழந்தைகள் வளர்ந்து வரும் போது, அந்தக் குழந்தைகளின் பாதிப்புகளும் பெரும்பாலும் சரியாகி விடுவது இயல்பு.
>
> உலகில் ஒவ்வோர் ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் கிட்டத்தட்ட 15 மில்லியன் குழந்தைகள் குறைமாதத்தில் பிறப்பதாக அனைத்துலக அறிக்கை ஒன்று கூறுகிறது.
>
> பச்சிளம் குழந்தைகள் இறப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது குறைமாதப் பிரசவமே என்று அந்த அறிக்கை கூறுகிறது.
>
> 2010ம் ஆண்டில் உலகில் 135 மில்லியன் குழந்தைகள் பிறந்ததாகவும் அந்தக் குழந்தைகளில் 15 மில்லியன் குழந்தைகள் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் என்றும் அந்தக் குழந்தைகளில் 1.1 மில்லியன் குழந்தைகள் இறந்து விட்டதாகவும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறியது.
>
>
> ALAVUDEEN

Sunday 9 March 2014

குர் ஆனை எளிய முறையில் புரிந்து கொள்வதற்க்காக




அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

தாங்கள், குர் ஆனை எளிய முறையில் புரிந்து கொள்வதற்க்காக, எங்களுடைய வகுப்பில் இணைந்ததால் இந்த மின்னஞ்சல் உங்களுக்கு வருகிறது.

புதிய தகவல்கள், செய்திகள், குர் ஆன் தொடர்புடைய குறிப்புகள் இவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்க்காக நாங்கள் ஒரு ‘தகவல் கடித’ பட்டியலைத் தயார் செய்து கொண்டிருக்கிறோம். தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை (email id) அந்தப் பட்டியலில் சேர்க்க உங்கள் அனுமதியைக் கோருகிறோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்றில் ஒன்றை நீங்கள் செய்யலாம்

1.இந்த பட்டியலில் உங்கள் பெயர் இணைக்கப்பட வேண்டுமென்றால், நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. தங்களின் அனுமதி கிடைத்ததாய் கருத்தில் கொண்டு தங்களை இந்தப்பட்டியலில் இணைத்துக் கொள்கிறோம்., அதனால் இன்ஷா அல்லாஹ் நீங்கள் அதிகமாக பயனடைவீர்கள்.

2.உங்களுடைய ஈமெயில் ஐடி, அல்லது பெயரில் மாற்றம் இருந்தால் அதைப் பதிவு செய்யவும்.

3. இந்த பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற வேண்டாம் என நீங்கள் நினைத்தால், உங்கள் பெயரை நீக்கவும்.

ஆதரவளியுங்கள்

உங்களில் சிலருக்கு இலவச குர் ஆன் வகுப்பு மற்றும் வளங்கள் வழங்க யாரோ ஒருவருடைய ‘ஸதகா’ உதவியது. நீங்கள் நிச்சயமாக ‘பெறுபவராக’ இல்லாமல், எங்களுடன் இணைந்து ‘வழங்குபவராக’ இருப்பதை அதிகம் விரும்புவீர்கள். அதனால், இப்பணியைத் தொடரவும், விரிவாக்கவும் உங்களுடைய நன்கொடைகள் மூலம் ஆதரவளியுங்கள்.

And who is better in speech than he who

41. Fussilat (Explained in Detail) - Makkah ::.

Description: http://www.tamiltafsir.com/NewsLetter/images/audio1.gif
Waman ahsanu qawlan mimman daAAa ila Allahi waAAamila salihan waqala innanee mina almuslimeena
[41 : 33]
... 
TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களைஅழைத்து(த் தானும்)நற்செயல்களைச் செய்து 
"நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குமுற்றிலும் வழிப்பட்டவர்களில் ஒருவன்என்றும் கூறுகின்றாரோ,
அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்?
MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur

അല്ലാഹുവിങ്കലേക്ക് ക്ഷണിക്കുകയും സല്‍കര്‍മ്മംപ്രവര്‍ത്തിക്കുകയും തീര്‍ച്ചയായും ഞാന്‍ 
മുസ്ലിംകളുടെകൂട്ടത്തിലാകുന്നു എന്ന് പറയുകയും ചെയ്തവനെക്കാള്‍ വിശിഷ്ടമായവാക്ക് പറയുന്ന മറ്റാരുണ്ട്‌
ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan

And who is better in speech than he who [says: "My Lord is Allah (believes in His Oneness)," and then stands straight (acts upon His Order), 
[and] invites (men) to Allah's (Islamic Monotheism), and does righteous deeds, and says: "I am one of the Muslims." 

HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur Rahman Nadwi

और उस व्यक्ति से बात में अच्छा कौन हो सकता है जो अल्लाह की ओर बुलाए और अच्छे कर्म करेऔर कहे, "निस्संदेह मैं मुस्लिम (आज्ञाकारीहूँ?" 
URDU | Translation By :Dr. Col Muhammad Ayub


Thanks:

The Holy Quran



..:: 41. Fussilat (Explained in Detail) - Makkah ::....







La yasamu alinsanu min duAAai alkhayri wain massahu alshsharru fayaoosun qanootun
Description:  http://www.tamiltafsir.com/NewsLetter/images/audio1.gif[41 : 49]

... 
TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)

(பிரார்த்தனை செய்துநன்மையைக் கேட்பதில் மனிதன்(ஒருபொழுதும்சடைவதில்லை.
எனினும்அவனை யாதொரு தீங்குஅணுகும் சமயத்தில் அவன் மனமுடைந்து நம்பிக்கையிழந்துவிடுகின்றான். 
MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur

നന്‍മയ്ക്ക് വേണ്ടി പ്രാര്‍ത്ഥിക്കുന്നതില്‍ മനുഷ്യന് മടുപ്പ് തോന്നുന്നില്ല.തിന്‍മ അവനെ ബാധിച്ചാലോ അവന്‍ 
മനം മടുത്തവനുംനിരാശനുമായിത്തീരുന്നു
ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan

Man (the disbeliever) does not get tired of asking good (things from Allah), 
but if an evil touches him, then he gives up all hope and is lost in despair. 
HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur Rahman Nadwi

मनुष्य भलाई माँगने से नहीं उकताताकिन्तु यदि उसे कोई तकलीफ़ छू जाती है तो वह निराशहोकर आस छोड़ बैठता है 
URDU | Translation By :Dr. Col Muhammad Ayub

Tharjuma Post :::... - Sahih Al Bukhari





Friday 7 March 2014

Quran



IN ALLAH ALONE BELIEVERS PUT THEIR TRUST

[Quran - 64:13] “Allah! There is no god but He: And in Allah (Alone), therefore, let the believers put their trust.


The Prophet (Peace Be Upon Him) has said :

[Bukhari, Book #93, Hadith #534] “Narrated Ibn 'Abbas: Whenever the Prophet offered his Tahajjud prayer, he would say, "O Allah, our Lord! All the praises are for You; You are the Keeper (Establisher or the One Who looks after) of the Heavens and the Earth. All the Praises are for You; You are the Light of the Heavens and the Earth and whatever is therein. You are the Truth, and Your saying is the Truth, and Your promise is the Truth, and the meeting with You is the Truth, and Paradise is the Truth, and the (Hell) Fire is the Truth. O Allah! I surrender myself to You, and believe in You, and I put my trust in You (solely depend upon). And to You I complain of my opponents and with Your Evidence I argue. So please forgive the sins which I have done in the past or I will do in the future, and also those (sins) which I did in secret or in public, and that which You know better than I. None has the right to be worshipped but You."

Thursday 6 March 2014

வண்ணங்களை கண்களால் புசியுங்கள் நாக்கினால் ருசிக்காதீர் - மருத்துவர்.கு.சிவராமன்

'கலர்கலராகக் கனவுகள் மட்டும் இருந்தால் பத்தாது; உணவும் இருக்க வேண்டும்’ என்கிறது உணவு அறிவியல். சில மணங்களை மனம் ரசிப்பதற்கு, மூளைக்குச் சில வண்ணங்கள் தேவைப்படு கின்றனவாம். ஆதலால், உணவில் வண்ணம் தீட்டும் வணிகம், ஒரு வருடத்துக்குக் கிட்டத்தட்ட 2,200 மில்லியன் டாலருக்கு நடக்கிறது!

ஹோட்டலில் செக்கச்செவேலென இருக்கும் தந்தூரி சிக்கனையும் சில்லி சிக்கனையும் சாப்பிட்டுவிட்டு கையை, சமையல் பாத்திரம் கழுவுவதுபோல் எலுமிச்சைச் சாறு, சோப்புத் தண்ணீர் எல்லாம் விட்டுக் கழுவிய பின்னரும் கையில் இளஞ்சிவப்பாக ஒட்டியிருப்பது, கோழியில் இருந்தோ, குழம்பில் போட்ட மிளகாய் வற்றலில் இருந்தோ வந்தது கிடையாது. உங்கள் கண்களைக் கவர அதில் தூவிய 'ரெட் டை 40’ எனும் 'ஆசோ டை’யின் எச்சமாக இருக்கலாம்.


பெட்ரோலில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த ரசாயன நிறமி வகைகள்தாம் பஞ்சு மிட்டாய், கேசரி, தந்தூரி சிக்கன்களிலும் பெருவாரியாகச் சேர்க்கப்படுகின்றன. சிக்கனும், பஞ்சுமிட்டாயும், கேசரியும் ரத்தச் சிவப்பாக இருந்தால்தான் பிடிக்கும் என்றால், ஒருவேளை ரத்தம் வற்றும் புற்றுநோயும் கூடவே வரலாம் என்கிறது இன்றைய ஆய்வுகள்.

பல நாடுகள் அந்த நிறமிகளைத் தடையும் செய்திருக்கின்றன. இப்படிச் செயற்கையாக இல்லாமல், எத்தனை நிறங்கள் இயற்கை உணவில் இருக்கின்றன என உற்றுப்பார்த்தால் ஆச்சரியம்!

தாவரம் தன் வளர்சிதை மாற்றத்தில் சேமித்துவைக்கும் பொருள்தாம் இந்தத் தாவர நிறமிகள். 'பாலிபீனால்கள் குழுமம்’ என்று தாவரவியலாளரால் அழைக்கப்படும் சத்துகளில்தான், இந்த நிறமிகளைத் தரும் சத்துகள் அனைத்தும் அடங்கும். இவை, தாவரம் தன்னை அல்ட்ரா வயலெட் கதிர்களில் இருந்தும், அழிச்சாட்டியம் செய்யும் சில கிருமிகளில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ள உருவாக்கிக்கொண்டவை.

மனிதன் அதனைச் சாப்பிடும்போது, அதையும் தாண்டி, சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு முதலான தொற்றா நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் தாக்காதபடி உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் தருவதில் பெரும் பயன் தருகிறது!

'ஓ... அப்போ இந்த பாலிபீனால் மாத்திரை எங்கே கிடைக்கும்?’ என்று உடனே இணையத்தில் தேட வேண்டாம்.

பால் சேர்க்காத ஒரு கப் தேநீரில் (100-150 மி.கி.) எளிதில் கிடைக்கும். க்ரீன் டீயில் இந்தச் சத்து கூடுதல். 100 கிராம் கறுப்புப் பன்னீர் திராட்சையோ, கருநீல நாவல் பழமோ, சிவந்த ஆப்பிளோ, பப்பாளியோ, மாதுளையோ, உங்களுக்கு (200-300 மி.கி.) பாலிபீனாலைத் தரக்கூடும். இந்தப் பழங்கள் மிகவும் கனிவதற்கு முன்பு, கொஞ்சம் இளங்காயாக இருந்தால் பீனாலிக் அமிலங்கள் சற்று அதிக அளவில் கிடைக்கும். அதிகம் பழுத்திடாத இளங்கொய்யாவை சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதும், 'வாழை இளம் பிஞ்சொழிய கனியருந்தல் செய்யோம்!’ என, சித்த மருத்துவ நோயணுகா விதி பாடியதும் இதனால்தான்.

அதே சமயம் ஆன்தோசயனின் எனும் நிறமிச் சத்துகளோ, நன்கு பழுக்கும்போது பழத்தோலில் உருவாகிறது. ஆதலால் மாதுளை, பப்பாளி, தக்காளி, மாம்பழம் ஆகியவற்றை நன்கு கனிந்த பின்னர் சாப்பிடுவது சிறந்தது. வெறும் வயிற்றில் வேறு உணவு இல்லாத வேளையில் பழங்கள் உள்ளே சென்றால்தான் மருத்துவப் பயன்தரும் அதன் நிறமிச்சத்துகள் முழுமையாக உட்கிரகிக்கப்படும். டெசர்ட் என்ற பெயரில் பழத்தை கடைசி பெஞ்சில் உட்காரவைப்பது முட்டாள்தனம்!

அதே சமயம் இந்த பாலினால்களை சமைப்பதில், சேமிப்பதில் கவனம் இல்லாவிட்டால் அதன் பயனை இழக்கக்கூடும். சிறிய வெங்காயம், தக்காளி, முள்ளங்கி, ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா எனும் புளிச்சகீரை ஆகிய காய்கறிகளிலும், சதகுப்பை முதலான பல மூலிகைகளிலும் உள்ள 'குயிர்செட்டின்’ எனும் சத்துதான், நம் ரத்த நாளத்தில் கொழுப்புப் படியாமல் இருக்க உதவும் முக்கியமான பாலிபீனால் சத்து. ஆனால், வெங்காயத்தையும் தக்காளியையும் சமைக்காமல் சாலட் ஆக சாப்பிடும்போதுதான் முழுப் பயன் கிடைக்கும். வெங்காயத்தை வேக வைக்கும்போது 80 சதவிகிதமும், வறுக்கும்போது 30 சதவிகிதமும் பாலிபீனால்கள் காணாமல்போகும்.

கூடவே இந்த பாலிபீனால்கள் உடலில் உட்கிரகிக்கப்பட, நம் சிறுகுடல், பெருங்குடல் பகுதியில் லோக்டோபேசிலஸ் முதலான புரோபயாடிக்ஸ் இருப்பது நல்லதாம். அது இயல்பாகக் கிடைப்பது மோரில் மட்டுமே. ஆக, சின்ன வெங்காயத்தின் பயன் முழுமையாக வேண்டுமானால், வெங்காயத் தயிர் பச்சடியோ, வெங்காயம் தொட்டுக்கொண்டு மோர் சோறாகவோ, மோர் சேர்த்த கம்பங்கூழாகவோ சாப்பிடுவது சாலச் சிறந்தது.

வெங்காய பக்கோடா, சுவை தரலாம்; ஆனால் சுகம் தராது. அதேபோல் வெங்காயத்தின் வெளி வட்டத்தில்தான் அந்தச் சத்து அதிகம். சுத்தம் பார்க்கிறேன் பேர்வழி என வெளிப்பக்கம் பூராவும் உரித்து உரித்து, உள்ளே உள்ள வெள்ளை வெங்காயத்தை மட்டும் சாப்பிடுவது புத்திசாலித்தனம் அல்ல.

இப்படி இயற்கையாக நிறமும் கொடுத்து, உடலுக்கு உரமும் தரும் பொருள்கள் ஏராளமாக இருக்கும்போது, 'முந்தானைப் பக்கம் சிவப்பு கலர் பார்டரும், கொசுவத்தில் லைட் ஷேடும் வர்ற மாதிரி கொடுங்க’ என்று கேட்பதுபோல, நாம் சாப்பிடும் கேக்கில் மூணு அடுக்கு வண்ணம், பிஸ்கட் பார்டர் ஒரு வண்ணம், உள்ளே க்ரீம் இரண்டு வண்ணம், குளிர்பானத்தில் புது வண்ணம் எனச் சாப்பிடுவது, கொஞ்சமாக பெட்ரோலும் தாரும் குடிப்பதற்குச் சமம்.


நன்றி:http://nervazhii.blogspot.com/2014/02/blog-post_27.html

"பெரும் பாவங்கள்"

இறை நிராகரிப்பை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள், மிகப்பெரும் பாவங்கள், மகா நாசத்தை ஏற்படுத்தும் பாவங்கள்
1. அல்லாஹ்வுக்கு இணைவைப்பது.
(பாவங்களில் மிகப்பெரிய பாவம் அல்லாஹ்விற்கு இணைவைப்பதாகும் - புகாரி, முஸ்லிம்)
2. தொழுகையை விடுவது.
(முஃமினுக்கும், ஷிர்க் மற்றும் குஃப்ருக்கும் இடையில் தொழுகையை விடுவது தவிர வேறொன்றும் இல்லை. அதாவது தொழுகையை விட்டவன் காஃபிராகி விடுவான் - முஸ்லிம்)
3. பெற்றோருக்கு மாறு செய்வது.
4. பொய் சாட்சி சொல்வது.
5. கொலை செய்வது.
(மிகப்பெரும் பாவங்களாவன: அல்லாஹ் விற்கு இணைவைப்பது, பெற்றோருக்கு மாறு செய்வது, பொய் சாட்சி சொல்வது, கொலை செய்வது - முஸ்லிம்)
6. பெற்றோரை ஏசுவது, சபிப்பது.
(மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம் ''அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்'' என்று கேட்கப்பட்டது. அதற்கு ''ஒருவர் மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர் இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் - புகாரி, முஸ்லிம்)
7. சூனியம் செய்வது.
8. வட்டி வாங்கி உண்பது.
9. அனாதையின் சொத்தை உண்பது.
10. போரில் புறமுதுகுக் காட்டி ஓடுவது.
11. ஒழுக்கமுள்ள இறை நம்பிக்கைக் கொண்ட அப்பாவி பெண்கள்மீது பழி சுமத்துவது.
(மகா நாசத்தை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைவிட்டும் விலகிக் கொள்ளுங்கள். அவை: அல்லாஹ்விற்கு இணைவைப்பது, சூனியம் செய்வது, அல்லாஹ் புனிதமாக்கிய உயிரைக் கொல்வது, வட்டி வாங்கி உண்பது, அனாதையின் சொத்தை பயன்படுத்துவது, போரில் புறமுதுகுக் காட்டுவது, ஒழுக்கமான இறை நம்பிக்கைக் கொண்ட அப்பாவி பெண்கள்மீது பழி சுமத்துவது- புகாரி, முஸ்லிம்)

Tuesday 4 March 2014

பெருவெடிப்பு கொள்கை

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? அல்குர்ஆன் 21:30

இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்து என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்திய நூல்கள் கூறுகின்றன.

திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. வானம் பூமி எல்லாம் ஓரே பொருளாக இருந்தன. அவற்றை நாம் தான் பிரித்துப் பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்த பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும்.

எனவே திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.

சூரியனும் கோள்களும்

(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்- நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள் பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான் இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான் (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன- அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். அல்குர்ஆன் 13:2

'நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்- பகலை இரவில் புகுத்துகிறான்- இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்' என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன- அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன். அல்குர்ஆன் 31:29

அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்- பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்- இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன- அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்- அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. அல்குர்ஆன் 35:13

இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது- இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது- இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. அல்குர்ஆன் 36:38-40

அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்- அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்- இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்- சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது- (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்- மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 39:
சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லா கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்அன் கூறுகிறது.

பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான். பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான். உருண்டையாக இருக்கிற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான். பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான்.

இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது- சூரியனையும் சுற்றுகிறது- தன்னைத்தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.

பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.

ஆக சூரியன் சூழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல- ஓடிக் கொண்டே இருக்கின்றது- அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால், நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.

இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது.

இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்தையல்ல- கடவளின் வார்த்தை என்பதை தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்று.



குர்ஆனில் விஞ்ஞானம்
தொகுப்பு. குலசை சுல்தான்

Monday 3 March 2014

வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு அமோக வரவேற்பு

வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 2 மாதத்தில் விண்ணப்பித்த 8 ஆயிரம் பேரில் இரண்டாயிரம் பேருக்கு காய்கறித் தோட்ட இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.


இன்று நானும் என் பங்குக்கு இரண்டு கிட் அண்ணா நகர் டிப்போவில் வாங்கினேன். அங்கு தோட்டக்கலை அதிகாரியாக முகம்மது நசிர் என்பவர் இருக்கிறார். எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசி நமது சந்தேகங்களுக்கு அழகிய முறையில் விளக்கம் அளிக்கிறார்..மேலும் விபரம் வேண்டுவோர் அவரை 9841155808 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளவும்.

Sunday 2 March 2014

Today's Ahadith Feb 27, 2014


BismillahirRahmanirRahim

As'salaamu Aalaikum WaRahamtullahi WaBarakatuhu,
 
“Rabbi Zidni Ilma - My Lord! Increase me in knowledge”

O you who believe! Let not your properties or your children divert you from the remembrance of Allah. And whosoever does that, then they are the losers.
And spend (in charity) of that with which We have provided you before death comes to one of you, and he says: "My Lord! If only You would give me respite for a little while (i.e. return to the worldly life), then I should give Sadaqah (i.e. Zakat) of my wealth, and be among the righteous [i.e. perform Hajj (pilgrimage to Makkah) and other good deeds].
And Allah grants respite to none when his appointed time (death) comes. And Allah is All-Aware of what you do.
{Holy Qur’an Surat: 63 Al-Munafiqoon Verses# 9-10-11}
Narrated Mujahid:

Ibn Umar (Radi Allahu anhu) said, "Allah's messenger (SalAllahu alaihi wasallam) took hold of my shoulder and said, 'Be in this world as if you were a stranger or a traveler.'" (The sub-narrator added): Ibn Umar used to say, "If you survive till the evening, do not expect to be alive in the morning, and if you survive till the morning, do not expect to be alive in the evening, and take from your health for your sickness, and (take) from your life for your death."
 
Sahih Al-Bukhari 8:425
 
 

Then, there has succeeded them a posterity who have given up As-Salat (the prayers) [i.e. made their Salat (prayers) to be lost, either by not offering them or by not offering them perfectly or by not offering them in their proper fixed times] and have followed lusts. So they will be thrown in Hell.
{Holy Qur’an Surat: 19 Maryam Verse# 59}
Men whom neither trade nor sale (business) diverts from the Remembrance of Allah (with heart and tongue), nor from performing As-Salat (Iqamat-as-Salat), nor from giving the Zakat. They fear a Day when hearts and eyes will be overturned (out of the horror of the torment of the Day of Resurrection).
{Holy Qur’an Surat: 24 An-Noor Verse# 37}


Hadith - 2

Narrated Abu Huraira (Radi Allahu anhu):
I heard Prophet (SalAllahu alaihi wasallam) saying, “If there was a river at the door of anyone of you and he took a bath in it five times a day, would you notice any dirt on him?" They said."Not a trace of dirt would be left". The Prophet (SalAllahu alaihi wasallam) added, “That is the example of the five Salat with which Allah blots out (annuls) evil deeds."

Sahih Al-Bukhari 1:506

Urgently Required : IT Security Engineer*



*An IT company in Riyadh requires urgently an experienced Security
Engineer with experience in Firewalls.*

*Good package for the right candidate.*

*Only locally available candidates in Saudi Arabia with valid transferable
Iqama need apply.*

*Please send your CV to **jobsinsaudi999@gmail.com
<jobsinsaudi999@gmail.com>*

குர்ஆனில் பேசும் எறும்புகள்!

நபி சுலைமானிடம் பேசிய எறும்பு..
இறுதியாக அவர்கள் (எறும்புகள் நிறைந்த) எறும்புப் புற்றின் அருகே வந்தபோது, ‘எறும்புகளே! உங்கள் குடியிருப்புக்களுக்குள் நுழையுங்கள்! சுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக்கூடாது என்று ஓரு எறும்பு கூறியது. (அல்குர்ஆன்:27:18)
அது சொல்வதைக் கேட்டு சுலைமான் புன்னகை சிந்தி சிரித்தார் (அல்குர்ஆன்: 27:19) என்று அருள்மறை கூறுகிறது
எறும்பு பேசியது:
அல்லாஹ்வின் அற்புத மறையாம் அல் குர்ஆன் ‘எறும்புகள் பேசியதாகவும்,அது
கேட்டு பறவைகள், உயிரினங்களின் மொழிகளைத் தெரிந்த இறைதூதர் சுலைமான்(அலை)
அவர்கள் சிரித்ததாகவும்’ இங்கே கூறப்படுகிறது.
அல்லாஹ் தனது படைப்புகளில் அற்பமான எறும்புகள்; பேசியதையும், அதற்கொரு
முக்கியத்துவம் அளித்தும் தனது வேதத்திருமறை யில் குறிப்பிடுவதாயின் அந்த
அரிய படைப்பில் நிச்சயம் பல அதிசயங்கள் அமைந்திருக்கும் என ஆய்வு செய்தபோது
நமக்குத் தெரியாத பல உண்மைகள் தெரியவருகின்றன. இப்போது நாம் அதுபற்றி
விரிவாகக் காண்போம்.
எறும்பும் அதன் வகைகளும்
எறும்பு ஒருகுழுவாக வாழும் ஒரு பூச்சியனமாகும். அது உலகின் எல்லாப்
பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. அண்மையில் இதுபற்றி ஆய்வு செய்த
அறிவியலார் ‘உலகில் 11,880 வகையான எறும்பினங்கள் உள்ளதாகக் கண்டு
பிடித்துள்ளனர். அமெரிக்க விஞ்ஞானி ஒருவர், இவை 90,000 க்கும் மேலிருக்கும்
எனக்கூறுகிறார்.இவற்றில் பெரும்பாலானவை வெப்பமுள்ள நாடுகளில் தான்
வாழ்கின்றன.
பாதை மாறாது திரும்பும் அதிசயம்
நாம் ஒரு பதிய ஊருக்கோ நாட்டிற்கோ செல்லும் போது பாதைகளையும் இடங்களையும் தெரிந்து கொள்ள வரைபடமோ,வழிகாட்டியோ தேவப்படுகிறது.
அது போல இரை தேடச் செல்லும் உயிரினங்கள் பலமைல் தூரம் சென்று விட்டு
தமது வசிப்பிடங்களுக்கு எப்படி திரும்பி வந்து சேருகின்றன என்பதை ஆராயும்
போது நமக்கெல்லாம் வியப்பாக உள்ளன.ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒவ்வொரு
புதுமையான ஏற்பாட்டையும் அறிவையும் அதனுள் அதைப் படைத்த நாயன்
அமைத்துள்ளான். இங்கே அவன், எறும்புக்கு என்ன ஏற்பாட்டைச் செய்துள்ளான்
எனபதைப் பார்ப்போம்.
துனீசியா நாட்டின் மத்திய தரைக் கடல் பகுதியில் வாழும் ஒருவகை கறுப்பு
இன எறும்புகள் (Black Aunts) பாலைவனத்தில் கூடுகள் அமைத்து வாழந்து
வருகின்றன.
காலையில் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்கெல்லாம் வெப்பநிலை எழுபது
டிகிரி சென்டி கிரேடு வரை உயரும் அந்த வெப்பநிலையில் உள்ள பகல் வேளையில்
தனக்குத் தேவையான இரையைத்தேடி வீட்டைவிட்டு வெளியேறுகிறது.
அடிக்கடி நின்றும் திரும்பியும் வேகமாக ஊர்ந்து செல்லும் எறும்பு தனது
கூட்டிலிருந்து 200 மீட்டர் (655 அடி) பரப்பளவுக்கு வளைந்தும் நெளிந்தும்
ஊர்ந்து வெகுதூரம் வரை சென்று விடுகின்றன. பாதைகளை அறிவதற்கு அடையாளமாக
அங்கே ஆறு,குளம்,குட்டை,ஏரி,மரம்,கட்டடம் என எதுவுமே இல்லை. அது தேடிய
பருப்பொருட்களை சுமந்து கொண்டு என எந்தவகை அடையாளங்களும் இல்லாத
பாலைவனத்தில் எப்படி துல்லியமாக தன் வசிப்பிடத்தைக் கண்டுபிடித்து வருகிறது
என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
எறும்புகளின் நீளம்,உயரம்,பருமன்,எடை இவைகளை கருத்தில் கொண்டு,அவைகள்
பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டு மனித ஆற்றலோடு ஒப்பிடும்; போது அதே
பாலைவனத்தில் 35 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் வரை ஒரு மனிதன் பயணிப்பதற்கு
சமமாகும். மனிதனால் நடைமுறையில் சாத்தியமே இல்லாத இந்த அற்புதச் செயலை
சாதாரண எறும்புகள் வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனவே! இது எப்படி என
சிந்தித்தாலே தலை சுற்றுகிறது
நன்றி: குலசை சுல்தான்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR