ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Thursday 11 December 2014

திசை மாறும் தூண்கள்...!

                                     திசை மாறும் தூண்கள்...!
                                                                                   சகோதரி. ஆயிஷா பேகம்                                                                        
ஆரம்பத்தில்..! இப்படி எல்லாம் கூட நாட்டில் நடக்குமா..! நடக்குதா..? என கேட்ட செய்திகள் எல்லாம்இப்போது மிக சர்வ சாதரணமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது! நாமும் ஒவ்வொன்றையும் கேள்விப்படும் போது இது என்ன புதுசா நடக்குதா என்ன..? என்று மனதை சமாதானப் படுத்த பழகி விட்டோம்.
நம் மனம் எல்லா அக்கிரமங்களையும் தாங்கி கொள்ளும் சக்தி படைத்ததாகி விட்டது. தினசரி புதிது புதிதாக குற்றங்களை பார்ப்பதும் கேள்விபடுவதுமே அதற்கு காரணம், அதிகளவு குற்றம் நடத்துபவர்களில் பின்னணியை பார்த்தால் பெற்றோர்கள் நன்கு படித்தவர்களாகவும், நல்ல செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது சற்று அதிர்ச்சியான ஒன்றாக உள்ளது.
முன்பு உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் நடந்த சம்பவங்கள் எல்லாம் இப்போது தன் கோர கைகளை விரித்துக் கொண்டே வந்து நம் ஊரின் மையத்தில் வந்து நிற்கிறது.! அது நம் வீட்டு கதவை தட்டுவதற்கு முன் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது.
சரி, இது போல நடக்க என்ன காரணம்? யார் காரணம்? என பார்த்தால் குற்றம் சுமக்க வேண்டியவர்களில் முதல் குற்றவாளி பெற்றோர்களாகத் தான் இருக்கிறார்கள்! ஒரு பிள்ளையை நல்ல முறையில் வளர்த்து எடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தாய் தான்! தந்தை என்பவர் பொருளாதார தேவைக்காக பெருமளவு நேரம் வெளியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
சிறு வயதில் இருந்தே தாய், தந்தையின் பாசத்திற்கு ஏங்கும் பிள்ளை அந்த பாசம் கிடைக்காத போதுஒரு கட்டத்தில் தனக்கென ஒரு உலகத்தை நிர்ணயபடுத்திக் கொண்டு அந்த உலகத்தில் உலா வரத்தொடங்குகிறது!அதில் இப்போது தாய்க்கும், தந்தைக்கும் அவ்வளவு முக்கியத்துவம் இல்லை! இவை எல்லாமே வெளியில் தெரியாத அவர்களின் பால் உள்ளே நடக்கும் உளவியல் மாற்றங்கள்! ]
திசை மாறும் தூண்கள்...!
நம் வாழ்க்கையில் நமக்கு கிடைத்த மிக பெரிய வரம் இளமை பருவம். ஆண், பெண் என இரு தரப்பினருக்குமே எவ்வளவு ஒரு அழகான, ஆக்கபூர்வமான பருவம். ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு இளைஞர்களின் ஆற்றலும் அறிவும், துணிவும், துடிப்பும் அவர்களின் எழுச்சியும்மிக பெரும் சக்தி என்றால் அது மிகையில்லை. ஒரு சமுதாயத்தில் எந்த ஒரு சமூக மாற்றமும் இளைஞர்களின் பங்களிப்பு இல்லாமல் நடை பெற்றதில்லை. தன் வயதின் முழுசக்தியையும் திறமையையும் வெளிப்படுத்தும் பருவம் இளமை பருவம்!
ஆனால் தன் சக்தியை, தன் தேவையை, தன் பொறுப்பை, சரியாக இளைஞர்கள் உணர்ந்திருக்கின்றார்களா என்றால் பெருமளவு இல்லை என தான் தோன்றுகிறது. இப்போது சமூகத்தில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணம் இளைஞர்களாக தான் இருக்கிறார்கள். தன் தவறான நடவடிக்கையின் காரணத்தால் குற்றங்களை செய்து விட்டு தன் வாழ்வின் முக்கியமான பெரும்பகுதியை சிறை வாழ்க்கையில் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்!
நாம் அனைவருமே சமீபத்தில் நடந்த இரு நிகழ்வுகளை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. தான் கற்பிக்கும் பள்ளியில் தன் மாணவனால் ஒரு ஆசிரியை பள்ளி வளாகத்தில் கொல்லப் பட்டதும், ஒரு பெண் நம்பிக்கையோடு நண்பனாக பழகியவர்களாலே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் ஆன இரு நிகழ்வுகள் தான் அவை.! சமூகத்தில் மீது அக்கறையும், பொறுப்பும் கொண்ட ஒவ்வொருவரையும் அதிர்ச்சியும், கவலையும் கொள்ள வைத்த சம்பவங்கள் இவைஎன்றே சொல்லலாம்.
இவை மட்டும் அல்லாது பள்ளிப் பருவ காதல், பள்ளிப் பருவ கர்ப்பம்,பள்ளிப் பருவ குடிப்பழக்கம், வகுப்பிலேயே சக தோழியை மோசமாக படம் எடுத்து அனைவருக்கும் அனுப்பி வைப்பது, தன் ஆசிரியையை படம் எடுத்து இணையத்தில் தவறான முறையில் பதிவு செய்வது, பெற்ற மகனே தன் சொந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆள் அனுப்பி திருட வைத்தது, தங்கையாக நினைக்கக் கூடிய நண்பனின் மனைவியை அழைத்துக் கொண்டு ஓடுவது என்று இப்படி இன்னும் நிறைய விசயங்கள்.
ஆரம்பத்தில்... இப்படி எல்லாம் கூட நாட்டில் நடக்குமா! நடக்குதா..? என கேட்ட செய்திகள் எல்லாம் இப்போது மிக சர்வ சாதரணமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நாமும் ஒவ்வொன்றையும் கேள்விப்படும் போது இது என்ன புதுசா நடக்குதா என்ன..? என்று மனதை சமாதானப் படுத்த பழகி விட்டோம்! நம் மனம் எல்லா அக்கிரமங்களையும் தாங்கி கொள்ளும் சக்தி படைத்ததாகி விட்டது. தினசரி புதிது புதிதாக குற்றங்களை பார்ப்பதும் கேள்விபடுவதுமே அதற்கு காரணம்..! அதிகளவு குற்றம் நடத்துபவர்களில் பின்னணியை பார்த்தால் பெற்றோர்கள் நன்கு படித்தவர்களாகவும்,நல்ல செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது சற்று அதிர்ச்சியான ஒன்றாக உள்ளது.
முன்பு உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் நடந்த சம்பவங்கள் எல்லாம் இப்போது தன் கோர கைகளை விரித்துக் கொண்டே வந்து நம் ஊரின் மையத்தில் வந்து நிற்கிறது. அது நம் வீட்டு கதவை தட்டுவதற்கு முன் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது..! சரி, இது போல நடக்க என்ன காரணம்? யார் காரணம்? என பார்த்தால் குற்றம் சுமக்க வேண்டியவர்களில் முதல் குற்றவாளி பெற்றோர்களாகத் தான் இருக்கிறார்கள்! ஒரு பிள்ளையை நல்ல முறையில் வளர்த்து எடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தாய் தான்! தந்தை என்பவர்பொருளாதார தேவைக்காக பெருமளவு நேரம் வெளியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்
இப்போது அநேக வீடுகளில் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் தான்! இரண்டு என்பது கூட இப்போது குறைந்து ஒன்று என்பது தான் அதிகளவில் இருக்கிறது! காரணம் வேலைக்குப் போவதால் கவனிக்க ஆள் இல்லை என்பது! பிள்ளையை யார் பார்த்துக் கொள்வது..? வீட்டில் சரியான வழிகாட்டுதலோடுபெரியவர்கள் இருந்தால் சரி, இல்லை என்றால் என்ன செய்வது..? வேறு வழி அதற்கென்றே இருக்கும் ஹோம்களே கதி! சிறு வயதில் இருந்தே தாய், தந்தையின் பாசத்திற்கு ஏங்கும் பிள்ளை அந்த பாசம் கிடைக்காத போது ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு உலகத்தை நிர்ணயபடுத்திக் கொண்டு அந்த உலகத்தில் உலா வரத்தொடங்குகிறது!அதில் இப்போது தாய்க்கும், தந்தைக்கும் அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. இவை எல்லாமே வெளியில் தெரியாத அவர்களின் பால் உள்ளே நடக்கும் உளவியல் மாற்றங்கள்!
பணம் இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம் என்ற மனநிலை இப்போது அதிகளவு காணப்படுகிறது! உலகத்திலேயே தன் மகன் தான் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும்! அனைவரும் பெருமையாக சொல்ல வேண்டும் என்பதற்காக பணத்தை எல்லா இடத்திலும் வாரி இறைக்கும் பெற்றோர் அதிகம்! நல்ல வசதியையும்,நல்ல படிப்பையும் கொடுக்க நினைக்கும் பெற்றோர் மறந்தது தன் மகனை சமுதாயத்திற்கு ஏற்ற நல்ல மனிதனாக வளர்க்க வேண்டும் என்பதை!
பிள்ளைகள் கேட்கும் எல்லா நவீன பொருள்களையும் வாங்கி கொடுக்கும் பெற்றோர் அவர்கள் அதை நல்ல முறையில் பயன் படுத்துகிறார்களா என கவனிக்காமல் விடுவது தான் அவர்கள் செய்யும் தவறு. பருவ வயதில் அது ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டும் இருவருக்கும் உடலில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்கள் குறித்தான சரியான வழிகாட்டுதல் தேவை..! கண்டிப்பா இப்போது தான் அவர்களின் மீது கூடுதல் அக்கறையும் கவனமும் தேவை.
ஆனால் பெற்றோருக்கு அவர்களோடு மனம் விட்டு பேச நேரம் இருப்பதில்லை. பெரும்பாலான பெற்றோருக்கு நம் பிள்ளையின் நண்பர்கள் யார் எனத் தெரியாது. அவர்கள் எப்படிப் பட்ட நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியாது. பிள்ளைகளும் இப்போது பெற்றோரை எதிர்பார்பதில்லை. அவர்களுக்கு இப்போது தேவை பணமும் அவர்கள் விரும்பும் நண்பர்களும் தான். இந்த மாதிரி வளர்ந்த பிள்ளைகளின் பார்வையில் பெற்றோர்கள் என்பவர்கள் தன் தேவைக்காக பணம் கொடுப்பவர்கள் மட்டும் தான்!
குற்றங்களின் காரண கர்த்தாவில் இப்போது இணையமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையில்லை! இணையத்தில் அதற்கென்று தனியாகத் தேடித் போக வேண்டாம் நாம் வேறு ஒன்றைத் தேடி எழுத்தை தட்டினாலே வன்முறை குறித்தான விசயங்களும் ஆபாச படங்களும், ஆபாச பதிவுகளும் வந்து கொட்டுகிறது. இதில் தனிமை என்பது நல்ல தெளிவாய் இருக்கும் மனிதர்களையே சற்று நிலை தடுமாறச் செய்யும் விஷயம்! இதில் எளிதில் உணர்ச்சி வசப்படும் டீன் ஏஜ்ஜில் இருக்கும் பிள்ளைகள் தனிமையில் இதைப் பார்த்தால் என்ன ஆகும்...?
இயல்பாகவே எதிர்பாலினர் குறித்தான தேடுதலும், சிந்தனையும், அதிகம் இருக்கும் பருவம் இது! சரியான வழிகாட்டுதலோடும், தன்னம்பிக்கையோடும் வளர்க்கப் படும் பிள்ளைகளுக்கு இது ஒரு பொருட்டாக இருப்பதில்லை. அவர்களுக்குத் தெரியும் நம் இலக்கு எது என்றும், எதை நோக்கி நாம் போக வேண்டும் என்பதும்! இந்த மாதிரி விசயங்களில் மாட்டிக் கொண்டால் நம் எதிர்காலம் பாழாகி விடும் என்பதால், அவர்கள் தன் நட்பு வட்டத்தையும் கவனமாக தேர்தெடுத்துக் கொள்கிறார்கள். பொதுவாக நட்பு வட்டம் என்பது எப்போதும் நமது சரி தவறுகளை திருத்தி அதை உரிமையாக எடுத்துச் சொல்லக் கூடியதாக இருக்க வேண்டும். தெளிவான மன நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு இயல்பாக தன் வயதிர்க்குண்டான மனத் தடுமாற்றங்களை மிக எளிதாக கடந்து விட முடிகிறது.
ஆனால் சிறு வயதில் இருந்தே சரியான வழிகாட்டுதலோடு வளராத பிள்ளைகளின் மனம் அதை நோக்கியே போகும். தப்பைத் தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் தனிமையில் தன் இஷ்டத்திற்கு வளரும் பிள்ளைகளுக்கு, தப்பான விசயங்களை ஆரம்பத்தில் பார்க்கும் போது இருக்கும் கொஞ்ச நஞ்ச குற்ற உணர்ச்சியும் ஒரு கட்டத்தில் போய் விடுகிறது. எது சரி எது தவறு என்பதைத் தாண்டி தன் ஆசைகளையும் தேவைகளையும் எவ் விதத்திலும் நிறைவேற்ற கொள்ள துணிந்து விடுகிறார்கள் என்பதே உண்மை...! இது தான் மன வக்கிரத்தின் வெளி தெரியாத உச்சக்கட்டம்! இவை தான் இந்த மாதிரி குற்றங்கள் நடப்பதற்கு முக்கிய காரணம்.
சரி வேலைக்கு எல்லாருமா போறாங்க வீட்டில் அம்மா இருக்கும் பிள்ளைகளும் தானே தப்பு பண்ணுது என்று கேட்டால்...? உண்மை தான்.மறுக்க முடியாது. ஆனால் கூர்ந்து கவனித்தால் அந்தப் பிள்ளை அதிக செல்லத்தால் தன் அறியாமை அம்மாவால் தன் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கிறது. தன் தந்தையின் அருகாமை இல்லாமல் இருக்கிறது.
இதற்கான தீர்வாக சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு ஊட்டப்படும் அழுத்தமான இறைநம்பிக்கை தான் சரியான ஒன்றாக இருக்கும். சிறு வயதாக இருக்கும் போதே அவர்களுக்கு மார்க்க சம்பந்தமான விசயங்களை கதை சொல்வது போல சொல்லி, நன்மை செய்தால் என்ன கிடைக்கும் என்பதையும், அடுத்தவர்களுக்கு தீமை செய்தால் என்ன கிடைக்கும் என்பதையும், இந்த உலகத்தில் நேர்மையாகவும் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் நடக்க வேண்டியதன் அவசியத்தையும் தெளிவாக புகட்டி விட வேண்டும்.
சக மனிதர்களுக்கு நாம் செய்யும் நம்பிக்கை துரோகம், மோசடி, பொய் பித்தலாட்டம், ஏமாற்றுதல் போன் இன்ன பிற தவறான செயல்களை இறைவன் விரும்புவதில்லை என்பதையும் அவன் அது குறித்து கடுமையாக கோவப்படுவான் என்பதும் அவர்களின் மனதில் அழுத்தம் திருத்தமாக சிறு வயதில் இருந்தே பதிவு செய்ய பட வேண்டும்.
நாம் அனைவருமே பொறுப்பாளிகள் ஆவோம். நாம் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பை பற்றி மறுமையில் விசாரிக்கப் படுவோம். அதற்கு சரியான காரணம் சொல்லப்பட வேண்டும். அதில் இருந்து ஒருவரும் தப்ப முடியாது. சரியான முறையில் வளர்க்க படாத பிள்ளைகள் நாளை நமக்கு மிக பெரிய துன்பத்தை தர தயாராக இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு' என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்" (அல்-குர்ஆன் 8:28)
சகோதரி. ஆயிஷா பேகம்.

ஆக்ராவில் 57 முஸ்லிம் குடும்பங்கள் இந்து மதத்தினருக்கு மாறினார்களா?


சங்பரிவார் அமைப்பினரின்
பித்தலாட்டம் அம்பலம்
ஆக்ராவில் 57 முஸ்லிம்
குடும்பத்தினர்
இந்து மதத்தை தழுவினர்
என்று நேற்று பரபரப்பாக தேசிய
ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
தர்ம ஜாக்ரான் மஞ்ச் மற்றும் பஜ்ரங் தளம்
ஆகிய சங் அமைப்புகள் நடத்திய
நிகழ்வில் இந்த முஸ்லிம்
குடும்பத்தினர் இந;து மதத்தைத்
தாமே முன்வந்து இந்து மதத்தைத்
தழுவியதாக இந்த செய்திகள்
வெளியாகின.
இந்த செய்தி தவறானது என்றும்
தாங்கள்
முஸ்லிம்களாகவே வாழ்வதாக இந்த 57
குடும்பத்தினரும் அளித்துள்ள
பேட்டி இந்துஸ்தான் டைம்ஸ் டைம்ஸ்
ஆப் இந்திய முதலிய
செய்தித்தாள்களில்
இன்று செய்திகள்
வெளியியாகியுள்ளன. ரேசன்
அட்டை வாங்கி தருகிறோம் என்றும்
ஆதார் அட்டை வாங்கித் தருகிறோம்
என்று காவிகள் தங்களை அந்த
நிகழ்விற்கு அழைத்துச் சென்றதாக
அவர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள்
தொடர்ந்து முஸ்லிம்களாகவே இருப்பதாகவும்
கட்டாயப்படுத்தி தங்களை இந்த
நிகழ்விற்கு காவிகள் அழைத்துச்
சென்றதாக
குப்பை சேகரித்து வாழ்க்கை நடத்தும்
இந்த ஏழை முஸ்லிம்கள்
தெரிவித்துள்ளனர்.
பொய்மையை மூலதனமாக
கொண்டு செயல்படும்
சங்பரிவாரின்
இந்த பொய் பித்தலாட்டம்
ஆச்சரியப்படக்
கூடியது இல்லை. முஸ்லிம்களும்
கிறிஸ்த்தவர்களும் பண
ஆசை காட்டி மதமாற்றம்
செய்து வருகின்றனர்
என்று பேசி வரும் சங்பரிவாரின்
திருக்த்தாளம் ஆக்ராவில்
அம்பலமாகியுள்ளது.
ஏழை முஸ்லிம்களை ஏமாற்ற
அது எடுத்த
முயற்சி பிசுபிசுத்துள்ளது.

ஏழை' என்ற அட்டை தருவதாக கூறி கட்டாய மதமாற்றம் -ஹிந்துத்துவா வெறி செயல்

ஏழை' என்ற அட்டை தருவதாக கூறி மதமாற்றம்
செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு!
மாநிலங்களவையில்
இன்று இப்பிரச்னையை எழுப்பி பேசிய பகுஜன்
சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி,
ஆக்ராவில் உள்ள ஏழை முஸ்லிம்
மக்களை வலுக்கட்டாயமாக
இந்து மதத்துக்கு மாற்றும்
நடவடிக்கைகளை அங்குள்ள ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பின் கிளை அமைப்பான பஜ்ரங் தளம்
மேற்கொண்டு வருவதாக குற்றம்
சாட்டினார்.
"மதமாற்றம் செய்துகொள்ள
ஏழை மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்ற
னர். இதேபோல அலிகாரிலும்
கிறிஸ்தவர்களை இந்து மதத்துக்கு வலுக்கட்டாயமாக
மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டில் மிகப்
பெரிய மத மோதல்களும் கலவரங்கள்
ஏற்படும். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசுக்கு உள்ளது. இதற்குத் தக்க பதிலை பிரதமர்
அளிக்க வேண்டும்" என்று மேலும் கூறினார்.
இந்நிலையில் மாயாவதியின்
கருத்தை காங்கிரஸ், திரிணமூல்,
சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும் ஆதரித்து,
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று அவையில் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
இந்த விவகாரத்தில் தலையிட்டு, பிரதமர் பதில்
அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்
ஆனந்த் ஷர்மாவும் வலியுறுத்திய நிலையில்,
குறுக்கிட்டு பேசிய சிறுபான்மையின
விவகாரங்களுக்கான முக்தர் அபாஸ் நக்வி,
இந்த மதமாற்ற விவகாரத்தில்
ஆர்.எஸ்.எஸ்.-க்
கு தொடர்பு இருப்பதாக கூறப்படும்
குற்றச்சாட்டை மறுத்தார்.
"எனக்கு தெரியவந்துள்ள
தகவலின்படி இந்த
பிரச்னை தொடர்பாக முதல் தகவல்
அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில
அரசால் உரிய
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை மாநில
அரசு சம்பந்தப்பட்டது. மாநில அரசுதான்
அதனை பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதில் மத்திய அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை"
என்று அவர் மேலும் கூறினார்.
இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம்
ஆக்ரா மாவட்டத்தில் உள்ள 57 இஸ்லாமிய
குடும்பங்கள் இந்து மதத்திற்கு மாறியதாக
கடந்த திங்கட்கிழமையன்று ஆர்.எஸ்.எஸ்.
தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால்
தங்களுக்கு வறுமை கோட்டிற்கு கீழ்
வாழுபவர்களுக்கான பிபிஎல் ( BPL ) ( ஏழை)
அட்டை தருவதாக கூறி பஜ்ரங்
தளத்தை சேர்ந்தவர்கள் அழைத்துச்
சென்றதாகவும், கட்டாயப்படுத்தப் பட்டு தாங்கள் மதமாற்றம்
செய்யப்பட்டதாகவும் 57 இஸ்லாமிய
குடும்பங்களை சேர்ந்தவர்கள்
தெரிவித்துள்ளனர்.

Wednesday 10 December 2014

டிசம்பர் 6 மதுரை வெடிகுண்டு மிரட்டல் : இந்துத்துவா காவி தீவிரவாதி சரண்யா கைது....!!

மதுரை காவல்துறை ஆணையர்
அலுவலகத்துக்கு வெடிகுண்டு
மிரட்டல் விடுத்த இளம்பெண்
சரண்யாவை காவல்துறையினர்
கைது செய்துள்ளனர்.
கடந்த 6ம் தேதி பாபர்
மசூதி இடிப்பு தினத்தன்று,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அருகே உள்ள காவல்துறை ஆணையர்
அலுவலகத்திற்கு பெண் ஒருவர்
போன் செய்து இன்னும்
சற்று நேரத்தில் போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில்
வெடிகுண்டு வெடிக்கும் எனக்
கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இதையடுத்து,
வெடிகுண்டு நிபுணர்கள்,
மோப்பநாய் உதவியுடன் அலுவலகத்தில்
தீவிர சோதனை மேற்கொண்டனர்.
நீண்ட சோதனைக்கு பின்னர் வெறும்
புரளி என தெரியவந்தது.
இதுதொடர்பாக, போலீசார்
மேற்கொண்ட விசாரணையில்,
போனில் மிரட்டல் விடுத்தவர்
மதுரை மேட்டுக்கார தெருவைச் சேர்ந்த
சரண்யா என தெரியவந்தது.
இவர் மீது வழக்குப்பதிவு செய்த
காவல்துறையினர்
அவரை கைது செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
மனைவியான
அன்னை ஆயிஷா அவர்களின்
பெயரை பயன்படுத்தி நடமாடும்
வெடிகுண்டு ஆயிஷா அங்கு
நடமாடுகிறாள்,
இங்கு நடமாடுகிறாள் என்று முதல்
பக்கம் முதல் கடைசி பக்கம் வரை பக்கம்
பக்கமாக செய்தி வெளியிட்ட
ஊடகம்
இந்துத்துவா காவி பெண்
தீவிரவாதி சரண்யாவை பற்றி
உள்பக்கத்தில் கூட
செய்தி வெளியிட
மறுப்பது ஏனோ ?
நடமாடும் வெடிகுண்டு ஆயிஷா
தமிழகத்தின் பல இடங்களில்
நடமாடுகிறாள்
என்று அவதூறு கூறி வெளியில்
சென்ற முஸ்லிம்
பெண்களை சந்தேக கண்
கொண்டு பார்த்த
கொடூரத்தை முஸ்லிம்கள்
மறந்துவிட முடியாது...
அன்று நம் மீது சுமத்தப்பட்ட
கறையை துடைக்க எவ்வித மீடியாவும்
இல்லை...
இன்று தான் முகநூல் என்ற
மீடியா கிடைத்திருக்கிறது.
(அதிகப்படியாக Share
செய்யவும்...)
நன்றி : இந்நேரம

Sunday 7 December 2014

பாபரி மஸ்ஜித் உண்மை வரலாறு

கி.பி.1526 - முதல் பாணிபட் போர்
டெல்லிக்கு அருகே (இன்றைய
ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும்
அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹிம்
லோடிக்கும் இடையே நடந்தது.
லோடி கொல்லப்பட்டு பாபர்
வெற்றி பெறுகிறார். இந்தியாவின்
வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப்
பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
கி.பி.1528 - பாபரின்
தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார்.
அங்கு முழுமை அடையாமல் கிடந்த
பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின்
பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம்
லோடி டெல்லியை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல்
நாட்டப்பட்டிருந்தது.
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித்
நிலம் தொடர்பான
சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது
கி.பி.1855 - பாபர் பள்ளிவாசலின்
ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என
கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால்
ஆக்கிரமிக்கப்படுகிறது.
கி.பி.1857 - முதல் இந்திய சுதந்திரப் போராட்டம்
கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம்
பகதூர்ஷாவின் தலைமையில் நடக்கிறது.
இந்துக்களும் முஸ்லிம்களும் சீக்கியர்களும்
ஓரணியில்
திரண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள்.
நிலைகுலைந்த ஆங்கிலேயர்கள்
அப்போராட்டத்தை ஒடுக்கினாலும்,
இனி தாங்கள்
தொடர்ந்து இந்தியாவை ஆளவேண்டுமெனில்
இந்துக்கள் முஸ்லிம்களுக்கிடையே குரோதத்தை -
பிரித்தாளும்
கொள்கையை வளர்த்தெடுக்க
வேண்டுமென்று சதித்திட்டம் போடுகிறார்கள்.
அதற்கு அவர்கள் உடனடியாக
எடுத்துக்கொண்ட ஆயுதம்தான்
அயோத்தி - பாபர் பள்ளிவாசல்
தொடர்பான வரலாற்றுத் திரிபுகள்.
அதேவருடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட
பாபர் மசூதி நிலத்தில் "ராம் சபுத்ரா' எனும்
பூஜை செய்யும்
திண்ணை உருவாக்கப்பட்டு பிரச்சினை தீவிரமடைகிறது.
கி.பி.1859 - ஆக்கிரமிக்கப்பட்ட இப்பகுதிக்கும்,
பாபர் பள்ளிவாசலுக்கும் இடையில்
ஒரு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருதரப்பினரும்
வழிபாடு நடத்திட ஆங்கிலேய நிர்வாகம்
ஏற்பாடு செய்கிறது. இதுதான்
பிற்காலத்தில் நிகழ்ந்திட்ட
துயரங்களுக்கு முன்னோட்டமாகும்.
கி.பி.1931 - அயோத்தியில் வகுப்புக் கலவரம்
நடக்கிறது. அப்போது பாபர் பள்ளிவாசலின்
உண்மைகளைக் கூறும்
கல்வெட்டு திட்டமிட்டு பெயர்த்தெடுக்கப்படுகிறது.
கி.பி.1947 - இந்தியா விடுதலைப் பெறுகிறது.
கி.பி.1949 - மே மாதம் 22-23 தேதிகளின்
நள்ளிரவில் பள்ளிவாசலின்
கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு மிம்பரில்
ராமர் சிலைகள் வைக்கப்படுகிறது.
அதுவரை இஷா தொழுகை நடத்திவிட்டு சுப்ஹு தொழுகைக்கு மீண்டும்
பள்ளிக்கு வந்த முஸ்லிம்கள்
அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார்
தெரிவிக்கிறார்கள். புகார்
பதிவு செய்யப்படுகிறது.
அன்றைய பிரதமர் நேருவுக்கு தகவல்
தெரிந்து உடனடியாக சிலைகளை அகற்றச்
சொல்கிறார். அன்றைய
உள்துறை அமைச்சரான சர்ச்சைக்குரிய
வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை.
அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும்
பிரச்சினையின் தீவிரத்தை உணரவில்லை.
அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார்,
பிரதமர் நேருவின்
உத்தரவை பொருட்படுத்தாமல்,
பள்ளிவாசலை இழுத்துப் பூட்டி அதை "சர்ச்சைக்குரிய
பகுதி'' என அறிவிக்கிறார்.
கி.பி.1949 - இருதரப்பும் நீதிமன்றத்தில்
வழக்கு தொடுக்கிறார்கள்.
கி.பி.1959 - நிர்மோகி அகோரா என்கிற துறவியர்
அமைப்பு, அது எங்களுக்குச்
சொந்தமான இடம் என்று வழக்கில்
தங்களையும் இணைத்துக் கொள்கிறது.
கி.பி.1961 - சன்னி வக்பு வாரியம்,
இது தங்களுக்குச் சொந்தமான
இடம் என்று நீதிமன்றத்தில்
வழக்கு தொடுக்கிறது.
கி.பி.1984 - அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில்
இராமர் கோயில் கட்டுவோம் என விசுவ
ஹிந்து பரிஷத்
அறிவித்து பதற்றத்தை உருவாக்குகிறது.
கி.பி.1986 - பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக்
குழுவை முஸ்லிம்கள்
தொடங்குகின்றனர். அதே வருடம்
அன்றைய காங்கிரஸ் பிரதமர் ராஜீவ்
காந்தி ஆட்சியில், பள்ளிவாசலுக்குள்
வைக்கப்பட்ட சட்டவிரோத சிலையை பூஜை செய்ய
பைசாபாத் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
கி.பி.1989 - விசுவ ஹிந்து பரிஷத் சார்பில்,
பள்ளிவாசலுக்கு அருகில் அடிக்கல்
நாட்டப்பட்டு பிரச்சினை தீவிரப்படுத்தப்படுகிறது.
கி.பி.1990 - முலாயம்சிங் யாதவ்
உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக
இருந்தபோது வன்முறையாளர்கள்
பள்ளிவாசலுக்கு அருகே சேதத்தை ஏற்படுத்துகிறார்கள்.
துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டம் கலைக்கப்படுகிறது.
உடனடியாக அத்வானி, குஜராத்தில்
சோமநாதபுரம் ஆலயத்தி-ருந்து அயோத்தி வரை ரத
யாத்திரையை நடத்தி நாடெங்கிலும்
பீதியை உண்டாக்குகிறார். ஆனால்
அவரது ரத யாத்திரை பீகார் மாநிலத்துக்குள்
நுழைந்தபோது அன்றைய முதல்வர் லாலு பிரசாத்
யாதவ்,
அத்வானியை துணிச்சலோடு கைது செய்கிறார்.
அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள்
இதனால் மத்தியில் ஆட்சியை இழக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 6 - நாடெங்கிலும்
திரட்டப்பட்ட மதவெறி பிடித்த,
நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வன்முறைக் கூட்டம்
பாபர் மஸ்ஜிதை இடிக்கிறது.
நாடெங்கிலும் மதக்கலவரங்கள்
நடந்து அப்பாவி மக்கள்
கொல்லப்படுகிறார்கள்.
மீண்டும் அதே இடத்தில் 100 நாட்களுக்குள்
பள்ளிவாசலைக் கட்டித் தருவோம் என அன்றைய
காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ்
அறிவிக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 16 அன்று பாபர் மஸ்ஜித்
இடிப்புக்கு யார் காரணம் என்று கண்டறிய
நீதிபதி லிபர்ஹான் தலைமையில் கமிஷன்
அமைக்கப்படுகிறது.
கி.பி.1993 - சுதந்திரத்திற்கு முன்பு 1947
வரை எவையெல்லாம் யாருடைய
வழிபாட்டுத் தலங்களாக
இருந்தனவோ அவை அப்படியே தொடரும்
என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது.
2002 - பிப்ரவரி மாதம் பாபர் மஸ்ஜித்
நிலத்திற்கு அருகில் பெருமளவில் கூட்டம்
திரட்டப்பட்டு மீண்டும் பத்தாண்டுகளுக்குப்
பிறகு பிரச்சினை தொடங்கப்படுகிறது.
மார்ச் 15 அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர்
மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டும்
பணி தொடங்கும் என விசுவ
ஹிந்து பரிஷத் அறிவிக்கிறது.
2002 - பிப்ரவரி 27 அன்று குஜராத்தில்,
கோத்ரா சம்பவத்தைத்
தொடர்ந்து மதக்கலவரம்
வெடிக்கிறது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட
முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள்.
ஆயிரக்கணக்கானோர் படுகாயம்
அடைகின்றனர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான
முஸ்லிம்களின் சொத்துக்கள்
அழிக்கப்படுகின்றன.
2002 - ஏப்ரல் மாதம் மூன்று நீதிபதிகள்
கொண்ட அலஹாபாத்
உயர்நீதிமன்ற குழு, பாபர் மஸ்ஜித் நிலம்
யாருக்கு சொந்தம் என்ற
விசாரணையைத் தொடங்கியது.
2003 - பாபர் மஸ்ஜித் இடத்தில் கோயில்
இருந்ததா? என்று ஆய்வு செய்ய
தொல்லியல் துறைக்கு நீதிமன்றம்
உத்தரவிட்டது.
2009 - லிபர்ஹான் ஆணையம் 16 வருடங்கள்
விசாரணைக்குப் பிறகு, பாபர் மஸ்ஜித்
இடிப்பில் அத்வானி, அசோக் சிங்கால்,
உமாபாரதி, உள்ளிட்ட 60க்கும்
மேற்பட்டோரை குற்றவாளிகள் என அறிவிக்கிறது.
2010 - செப்டம்பர் 30. 61 வருடங்களாக
நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில்
அலஹாபாத் நீதிமன்றம்,
சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின்
அடிப்படையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது.
சன்னி வக்பு வாரியமும் மற்றவர்களும்
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக்
கொடுக்க இடைக்காலத் தடை விதித்தது.

இந்து மக்களே சிந்தியுங்கள்....!

முகலாயர்கள் இந்தியாவை ஆண்ட
போது இந்துக்களுடன் மிக இணக்கமாக
நடந்து கொண்ட காரணத்தால்
இந்தியாவில் அவர்களால் 800 வருடம்
ஆட்சி செய்ய முடிந்தது.
கண்டிப்பாக அவர்கள் இந்து மக்களை கோபமூட்டும்
விதமாக கோவில்களையோ,
இந்து மக்களையோ அவர்கள் தாக்கி இருக்க
மாட்டார்கள்.
வழிபாட்டு தலங்கள், பெண்கள் , முதியோர் ,
குழந்தைகள் போன்றவற்றை போர் நடைபெரும் போது கூட
ஒரு முஸ்லிம் தாக்குதல் நடத்த கூடாது என
கூறி இருக்கும் போது....
ஆட்சி செய்த முகலாய
மன்னர்களா தன் குடி மக்களின் உயிர்களையும்
உடைமைகளையும், வழிபாட்டு தலங்களையும்
இடித்து இருப்பார்கள்....?
இந்து மக்களே சிந்தியுங்கள்....!

Saturday 6 December 2014

திணறியது தமிழகம்(படங்கள் இணைப்பு)

தமிழகத்தில் சகோதர இயக்கத்தினர் சார்பாக நடைபெற்ற
பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான
மாபெரும் ஆர்ப்பாட்டம்!

10, +2 பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை

10ம் வகுப்பு, +2 பொதுத்
தேர்வுகளுக்கான கால
அட்டவணை வெளியிடப்பட்டது. +2 தேர்வுகள்
2015 மார்ச் 5ம் தேதி தொடங்கும் என
அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளன.
மார்ச் 5ம் தேதி தொடங்கும் +2
பொதுத் தேர்வுகள் மார்ச் 31ம்
தேதி வரை முடிவடைகிறது. மேலும் 10ம்
வகுப்பு பொதுத் தேர்வுகள் 2015 மார்ச்
19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம்
தேதி வரை நடக்கும் என அரசு தேர்வுகள் இயக்கம்
தெரிவித்துள்ளன.
10ம் வகுப்பு தேர்வு அட்டவனை
* மார்ச் 19 : மொழிப்பாடம் முதல்
தாள்
* மார்ச் 20 : மொழிப்பாடம்
இரண்டாம் தாள்
* மார்ச் 25 : ஆங்கிலம் முதல் தாள்
* மார்ச் 26 : ஆங்கிலம் இரண்டாம் தாள்
* மார்ச் 30 : கணிதம்
* ஏப்ரல் 6 : அறிவியல்
* ஏப்ரல் 10 : சமூக அறிவியல்
12ம் வகுப்பு தேர்வு அட்டவனை
* மார்ச் 4 : தமிழ் முதல் தாள்
* மார்ச் 6 : தமிழ் இரண்டாம் தாள்
* மார்ச் 9 : ஆங்கிலம் முதல் தாள்
* மார்ச் 10 : ஆங்கிலம் இரண்டாம் தாள்
* மார்ச் 13 : கலாச்சாரம், தகவல்
தொடர்பு ஆங்கிலம்,
கணினி அறிவியல், உயிரிவேதியல்
* மார்ச் 16 : வணிகவியல், புவியியல்,
மனை அறிவியல்
* மார்ச் 18 : கணிதம், விலங்கியல்,
நுண்ணறி உயிரியல், சத்துணவியல்
* மார்ச் 23 : வேதியியல் மற்றும் கணக்குப்
பதிவியியல்
* மார்ச் 27 : இயற்பியல் மற்றும்
பொருளாதாரம்
* மார்ச் 31 : வணிக கணிதம், உயிரியல்,
வரலாறு, தாவரவியல்.

Wednesday 3 December 2014

ஆஸ்திரேலியாவிலிருந்து_வரும்_மிகவும்_அதிர்ச்சியான_ஒருதகவல்

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளதை யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (business delegation) சென்றுள்ளது.
இன்று மாலை அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தகக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவர் – மோடிஜியின் நெருங்கிய நண்பர்.
குஜராத்தில் பல முதலீடுகளை செய்துள்ள தொழிலதிபர் (அதானி க்ரூப்ஸ் தலைவர் ) கௌதம் அதானி.
இவரது கம்பெனிக்கு ஆஸ்திரேலியாவில் Carmichael (Queensland ) என்கிற இடத்தில் சுரங்க கம்பெனி ஒன்றைத் துவக்க ஆஸ்திரேலிய அரசு இன்று அனுமதி கொடுத்திருக்கிறது.
இந்த அதானி கம்பெனி, ஆஸ்திரேலியாவில் துவங்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு, இந்தியாவின் முன்னணி அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India )
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனாகக் கொடுக்கிறது.
கோடிக்கணக்கான டாலர்களில் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போகிறதே என்கிற அச்சத்தில் கூகுளில் தேடினேன் – ஒரு பில்லியன் அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு என்று -
1 billion US dollars are equal to how many Indian rupees?
அதிர்ச்சியளிக்கிறது கிடைக்கும் பதில் - As of October 2014, $1,000,000,000 = 61,532,000,000 Indian Rupees.
இத்தனை கோடி ரூபாய் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போவது மட்டும் அல்ல -
ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், சுமார் 4000 ஆஸ்திரேலிய சுரங்கத் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதால் – இந்த சுரங்கத்தை கூடிய விரைவில் தோண்ட ஆரம்பிக்க ஆஸ்திரேலிய அரசு ஆர்வம் காட்ட, 2017 -ல் முதல் சுரங்கம் துவக்கப்பட்டு விடும் என்று அதானி சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்ல – நிலக்கரி சுரங்கம் அமையும் இடத்திலிருந்து அது ஏற்றுமதி செய்ய அமையவிருக்கும் துறைமுகம் 400 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால், இந்த நிலக்கரிச்
சுரங்கத்திலிருந்து – துறைமுகம் வரையிலான 400 கி.மீ. தூரத்திற்கு அதானி கம்பெனியே ரெயில் பாதையும் போடப்- போகிறது. இந்த ஷரத்தும் – இன்றைய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
“Make in India” என்று இங்கே இந்தியாவில் மிகப்பெரிய கோஷத்தை உருவாக்கிவிட்டு, ஆஸ்திரேலியா வளம்பெற மிகப்பெரிய அளவில் அங்கு இந்திய முதலீட்டை கொண்டு செல்வதும், அங்குள்ள வேலையிழந்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கொடுப்பதும் ……
எதில் சேர்த்தி …??? ஒன்றுமே புரியவில்லை…. உண்மையாகவே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
மேலும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஸ்டேட் வங்கி - இவ்வளவு பிரம்மாண்டமான அளவு தொகையை எப்படி ஒரு தனிப்பட்ட முதலாளிக்கு / தொழில் நிறுவனத்திற்கு கடனாகக் கொடுக்கிறது….
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்க கம்பெனியான Glencore ( இதற்கு ஆஸ்திரேலியாவிலேயே 13 சுரங்க கம்பெனிகள் உள்ளன ) தற்போது அதன் 8000 ஊழியர்களுக்கு வேலையின்மை/ நஷ்டம் காரணமாக – கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் புதிதாக நிலக்கரிச் சுரங்கங்களைத் தோண்டுவது லாபகரமாக இருக்காது என்று துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் 1 பில்லியன் கோடி டாலர் பணத்தை அங்கு இந்திய முதலீடாகப் போட ஒரு தனிப்பட்ட கௌதம் அதானியை நம்பி State Bank of India கொடுப்பது அறிவுடைமையா …? இந்த கடன் கொடுக்கப்படுவதற்கான காரணம் யார் …???
Kingfisher விஜய் மால்யாவிற்கு கொடுத்தது போல் - இத்தனை கோடி ரூபாயையும் கௌதம் அதானிக்கு தத்தம் செய்தால், நான்கு – ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நஷ்டம் காரணமாக அவர் சுரங்கத்தை மூடினால் – அத்தனை நஷ்டமும் யார் தலையில் வந்து விடியப்போகிறது…..???
முட்டாள் இந்தியன் தலையிலா ….?
இதே வங்கிப் பணத்தைக் கொண்டு, இதே முயற்சிகளை, இந்திய நிலக்கரி சுரங்களில் மேற்கொண்டு, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளாதது ஏன்…..?
ஆமாம் – பிரதமருடன் செல்லும் வர்த்தகக் குழு அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சிப்பதற்காக செல்கிறதா அல்லது இந்திய பணத்தை (அதுவும் அவர்களது சொந்தப்பணம் அல்ல - அரசு வங்கிப் பணம் – இந்த நாட்டு மக்களின் சேமிப்பு) அயல்நாடுகளில் கொண்டு சென்று முதலீடு செய்யவா …?
நன்றி : விமரிசனம் - காவிரிமைந்தன்
நன்றி : இந்நேரம்.காம்

Wednesday 12 November 2014

....:: 5 . المائدة Al-Maaida ::....

....:: 5 . المائدة Al-Maaida ::....
ARABIC | Translation By :Simplified Uthmani
إِذْ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱذْكُرْ نِعْمَتِى عَلَيْكَ وَعَلَىٰ وَٰلِدَتِكَ إِذْ أَيَّدتُّكَ بِرُوحِ ٱلْقُدُسِ تُكَلِّمُ ٱلنَّاسَ فِى ٱلْمَهْدِ وَكَهْلًا ۖ وَإِذْ عَلَّمْتُكَ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ ۖ وَإِذْ تَخْلُقُ مِنَ ٱلطِّينِ كَهَيْـَٔةِ ٱلطَّيْرِ بِإِذْنِى فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًۢا بِإِذْنِى ۖ وَتُبْرِئُ ٱلْأَكْمَهَ وَٱلْأَبْرَصَ بِإِذْنِى ۖ وَإِذْ تُخْرِجُ ٱلْمَوْتَىٰ بِإِذْنِى ۖ وَإِذْ كَفَفْتُ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ عَنكَ إِذْ جِئْتَهُم بِٱلْبَيِّنَٰتِ فَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌ
Ith qala Allahu ya AAeesa ibna maryama othkur niAAmatee AAalayka waAAala walidatika ith ayyadtuka biroohi alqudusi tukallimu alnnasa fee almahdi wakahlan waith AAallamtuka alkitaba waalhikmata waalttawrata waalinjeela waith takhluqu mina altteeni kahayati alttayri biithnee fatanfukhu feeha fatakoonu tayran biithnee watubrio alakmaha waalabrasa biithnee waith tukhriju almawta biithnee waith kafaftu banee israeela AAanka ith jitahum bialbayyinati faqala allatheena kafaroo minhum in hatha illa sihrun mubeenun
[5:110]
TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)
[5:110]    பிறகு அல்லாஹ் (ஈஸாவை நோக்கிக்) கூறுவான்: "மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள்மீதும், உங்கள் தாய் மீது (நான் புரிந்து)ள்ள என்னுடைய அருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள். பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு உங்களுக்கு உதவி புரிந்து (உங்கள் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி) நீங்கள் தொட்டிற்குழந்தையாக இருந்த சமயத்திலும் (உங்கள் தீர்க்க தரிசனத்தைப் பற்றி) வாலிபத்திலும் உங்களைப் பேசச் செய்ததையும் (நினைத்துப் பாருங்கள்.) வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் நான் உங்களுக்குக் கற்பித்ததையும் (நினைத்துப் பாருங்கள்.) அன்றி, நீங்கள் என் கட்டளைப்படி களிமண்ணால் பறவையின் உருவத்தைப் போல் செய்து அதில் நீங்கள் ஊதிய சமயத்தில், அது என் கட்டளையைக் கொண்டு பறவையானதையும், பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகி யையும் என் உதவியினால் நீங்கள் சுகமாக்கியதையும் (நினைத்துப் பாருங்கள்.) நீங்கள் என் அருளைக் கொண்டு மரணித்தவர்களை (கல்லறையிலிருந்து உயிர்கொடுத்து) புறப்படச் செய்ததையும் (நினைத்துப் பாருங்கள்.) அன்றி, இஸ்ராயீலின் சந்ததிகளிடம் நீங்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது அவர்களில் நிராகரித்தவர்கள் நிச்சயமாக இது சந்தேகமற்ற சூனியத்தைத் தவிர வேறல்ல என்று கூறிய(துடன் உங்களுக்குத் தீங்கிழைக்க முயற்சித்த) சமயத்தில் அவர்(களுடைய தீங்கு)களிலிருந்து நான் உங்களை தடுத்துக் கொண்டதையும் நினைத்துப் பாருங்கள். 
MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur
[5:110]     (ഈസായോട്‌) അല്ലാഹു പറഞ്ഞ സന്ദര്‍ഭം (ശ്രദ്ധേയമാകുന്നു.) മര്‍യമിന്‍റെ മകനായ ഈസാ! തൊട്ടിലില്‍ വെച്ചും, മദ്ധ്യവയസ്കനായിരിക്കെയും നീ ജനങ്ങളോട് സംസാരിക്കവെ, പരിശുദ്ധാത്മാവ് മുഖേന നിനക്ക് ഞാന്‍ പിന്‍ബലം നല്‍കിയ സന്ദര്‍ഭത്തിലും, ഗ്രന്ഥവും ജ്ഞാനവും തൌറാത്തും ഇന്‍ജീലും നിനക്ക് ഞാന്‍ പഠിപ്പിച്ചുതന്ന സന്ദര്‍ഭത്തിലും, എന്‍റെ അനുമതി പ്രകാരം കളിമണ്ണ് കൊണ്ട് നീ പക്ഷിയുടെ മാതൃകയില്‍ രൂപപ്പെടുത്തുകയും, എന്നിട്ട് നീ അതില്‍ ഊതുമ്പോള്‍ എന്‍റെ അനുമതി പ്രകാരം അത് പക്ഷിയായിത്തീരുകയും ചെയ്യുന്ന സന്ദര്‍ഭത്തിലും, എന്‍റെ അനുമതി പ്രകാരം ജന്‍മനാ കാഴ്ചയില്ലാത്തവനെയും, പാണ്ഡുരോഗിയെയും നീ സുഖപ്പെടുത്തുന്ന സന്ദര്‍ഭത്തിലും, എന്‍റെ അനുമതി പ്രകാരം നീ മരണപ്പെട്ടവരെ പുറത്ത് കൊണ്ട് വരുന്ന സന്ദര്‍ഭത്തിലും, നീ ഇസ്രായീല്‍ സന്തതികളുടെ അടുത്ത് വ്യക്തമായ തെളിവുകളുമായി ചെന്നിട്ട് അവരിലെ സത്യനിഷേധികള്‍ ഇത് പ്രത്യക്ഷമായ മാരണം മാത്രമാകുന്നു. എന്ന് പറഞ്ഞ അവസരത്തില്‍ നിന്നെ അപകടപ്പെടുത്തുന്നതില്‍ നിന്ന് അവരെ ഞാന്‍ തടഞ്ഞ സന്ദര്‍ഭത്തിലും ഞാന്‍ നിനക്കും നിന്‍റെ മാതാവിനും ചെയ്ത് തന്ന അനുഗ്രഹം ഓര്‍ക്കുക.
ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan
[5:110]     (Remember) when Allah will say (on the Day of Resurrection). "O 'Iesa (Jesus), son of Maryam (Mary)! Remember My Favour to you and to your mother when I supported you with Ruh-ul-Qudus [Jibrael (Gabriel)] so that you spoke to the people in the cradle and in maturity; and when I taught you writing, Al-Hikmah (the power of understanding), the Taurat (Torah) and the Injeel (Gospel); and when you made out of the clay, as it were, the figure of a bird, by My Permission, and you breathed into it, and it became a bird by My Permission, and you healed those born blind, and the lepers by My Permission, and when you brought forth the dead by My Permission; and when I restrained the Children of Israel from you (when they resolved to kill you) since you came unto them with clear proofs, and the disbelievers among them said: 'This is nothing but evident magic.' "
HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur Rahman Nadwi
[5:110]     जब अल्लाह कहेगा, "ऐ मरयम के बेटे ईसा! मेरे उस अनुग्रह को याद करो जो तुमपर और तुम्हारी माँ पर हुआ है। जब मैंने पवित्र आत्मा से तुम्हें शक्ति प्रदान की; तुम पालने में भी लोगों से बात करते थे और बड़ी अवस्था को पहुँचकर भी। और याद करो, जबकि मैंने तुम्हें किताब और हिकमत और तौरात और इनजील की शिक्षा दी थी। और याद करो जब तुम मेरे आदेश से मिट्टी से पक्षी का प्रारूपण करते थे; फिर उसमें फूँक मारते थे, तो वह मेरे आदेश से उड़नेवाली बन जाती थी। और तुम मेरे आदेश से मुर्दों को जीवित निकाल खड़ा करते थे। और याद करो जबकि मैंने तुमसे इसराइलियों को रोके रखा, जबकि तुम उनके पास खुली-खुली निशानियाँ लेकर पहुँचे थे, तो उनमें से जो इनकार करनेवाले थे, उन्होंने कहा, यह तो बस खुला जादू है।"
URDU | Translation By :Dr. Col Muhammad Ayub
     [5:110]جب الله کہے گا اے عیسیٰ مریم کے بیٹے میرا احسان یاد کر جو تجھ پر اور تیری ماں پر ہوا ہےجب میں نے روح پاک سے تیری مدد کی تو لوگوں سے گود میں اور ادھیڑ عمر میں بات کرتا تھا اور جب میں نے تجھے کتاب اورحکمت اور تورات اور انجیل سکھائی اور جب تو مٹی سے جانور کی صورت میرے حکم سے بناتا تھا پھرتو اس میں پھونک مارتا تھا تب وہ میرے حکم سے اڑنے والا ہو جاتا تھا اور مادر زاد اندھے کو اور کوڑھی کومیرے حکم سے اچھا کرتا تھا اور جب مردوں کو میرے حکم سے نکال کھڑا کرتا تھا اور جب میں نے بنی اسرائیل کو تجھ سے روکا جب تو ان کے پاس نشانیاں لے کر آیا تو جو ان میں کافر تھے وہ کہنے لگے اور کچھ نہیں یہ تو صریح جادو ہے

Friday 24 October 2014

வெளிநாடுகளில் வேலை செய்யும் சகோதரர்களே!

ஷைத்தானின் வலையில் விழுந்து விடாதீர்கள்!

நாம் சுவனம் செல்வோமா? இல்லை நரகம் செல்வோமா?என்று தீர்மானிக்கும் காலங்களில் பெரும் பங்கு வகின்ற காலம் இந்த பருவ காலம் தான். இந்த பருவ காலத்தில் நம்மில் பல சகோதரர்கள் வழிமாறி சென்று விடுகின்றனர்.அவர்களுக்கு சரியான வழியைக் காண்பிக்கும் நபரை அவர்களின் பெற்றோர்கள்காண்பிக்க தவறுவதுதான்இதற்கு முக்கிய காரணம்.

சிறு வயதிலிருந்தே நல்ல பழக்கங்களோடு வளர்ந்த சிலர் கூடவெளிநாடுகளுக்கு வந்ததும் தவறான நண்பர்களை தேர்ந்தெடுப்பதின் மூலம் வழி தவறி சென்று விடுகின்றனர்.சொந்த தேசத்தில் திருமணம் முடித்தவராக இருப்பினும் வெளிநாடு வந்த பிறகு  இவருக்கும் திருமணம் ஆகாதவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவர் ஓரிரு குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பினும் வெளிநாட்டில் அவர் BACHELOR என்று தான் சொல்லிக் கொள்வார்.இந்த வாழ்க்கை மிகவும் சிரமமான கசப்பான வாழ்க்கை என்பது அயல் நாட்டில் வாழும் அனைவரும் அறிந்ததே.

இங்கே நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெற்றவர்தான் பெரும் பாக்கியசாலி.ஜும்ஆ நாட்கள் மற்றும் பெருநாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் தொழாத தீனின் வாடையே நுகராத நபர்களை நண்பர்களாக தேர்ந்தெடுத்தவர் நிலை மிகவும் கவலைக்குறிய நிலையாகும்.

இது முதலில் தொழுகையின் அருமை பெருமையை மறக்ககடிக்கச் செய்யும்.அதன் பின் வீணான காரியங்களில் ஈடுபட வைக்கும்.குறிப்பாக தொலைக்காட்சில் சினமா ஆடல் பாடல் என்று கேளிக்கைகளில் காலங்கள் நகரும். இதன் விளைவுகாலப் போக்கில் அல்லாஹ்வின் அச்சமின்றி அன்னியப் பெண்களை காண மனம் கிடந்தது துடிக்கும்.

பொதுவாகவே மனிதனின் மனம் தீமைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கும். இதில் தனிமையில் இணையத்தில் மூழ்கும் நம் இளைஞர்கள் விஷயத்தில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர்கள்ஷைத்தானின் வலையில் மிகவும் எளிதில் அகப்பட்டுக் கொள்கின்றார்கள்.]

வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!   

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்

பாசத்திற்குரிய அயல்நாட்டில்  வாழும்  இஸ்லாமிய சகோதரர்களே உங்களில் ஒருவனாக அரபு நாடுகளில் ஒன்றான அரபு அமீரகத்தில் ஷார்ஜாஹ், துபை, ஃபுஜைராஹ் போன்ற நகரங்களில் பத்து ஆண்டு காலங்களை  கழித்தவன் என்ற அனுபவத்திலும் நம் சகோதரர்கள் மேல் உள்ள அக்கறையினாலும் ஒரு சில உண்மைகளையும் அதற்குரிய பரிகாரங்களையும்  உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அனைவரும் அவசியம் படியுங்கள்.

சகோதரர்களே நாம் வாழும் இந்த வாழ்க்கை அல்லாஹ் கொடுத்த மிகப் பெரிய அருட்கொடை என்பதை நாம் அறிவோம்.இங்கே எதை விளையச் செய்கிறோமோ அதைத்தான் நாளை மறுமையில் அறுவடை செய்ய  இருக்கின்றோம்.இவ்வுலகம் மறுமையின் விளை நிலமாக இருக்கின்றது.

நல்ல அமல்களை அதிகமதிகம் செய்ய முடிகின்ற வயது வாலிப வயதுதான். இந்த வாலிபப் பருவத்தை நாம் உலக விஷயங்களுக்காகவும்  உலக சம்பாத்தியத்திற்காகவும் செலவு செய்கின்ற அளவிற்கு மார்க்க விஷயங்களுக்காகவும் மறு உலகிற்காகவும் செலவு செய்வது மிகவும் அரிதாகி கொண்டே போகிறது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களைப் பற்றியது தான் என் கவலையெல்லாம்.

நாம் இளமைப் பருவத்தில் தான் சம்பாத்தியம் செய்ய முடியும் எனவே இந்த வயதில் நாம் ஓடி ஓடி உழைக்க கடமைப் பட்டுள்ளோம். அதே நேரம் ஹலாலான சம்பாத்தியமாக அது இருக்க வேண்டும். இது விஷயத்தில் எவரிடமும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கும் பேச்சிற்கே இடமளிக்கக் கூடாது.

மேலும் இவற்றிற்கிடையே நமக்குரிய ஐங்கால கடமைகளான தொழுகைகளையும் காலம் தவறாமல் நாம் நிறைவேற்றிட கடமைப்பட்டுள்ளோம். இரவு பகல் பாராது கடுமையாக உழைக்கும் பல சகோதரர்கள் வேலையை முடித்து விட்டு இரவு படுக்கைக்கு செல்லும் முன் அன்றைய பொழுதின் அனைத்து தொழுகைகளையும் தொழுதிருப்பார்களா? என்றால் அதற்கு பெரும்பாலும் பதில் இல்லை என்று தான் வரும்.இவ்வுலகின் உன்னத செயல்களான தொழுகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இவ்வாலிப பருவத்தை நம் எதிரியான ஷைத்தானின் தூண்டுதளுக்கு துணையாக தியாகம் செய்து கொண்டிருக்கின்றோம். எப்படி இது சாத்தியம் என கேட்கிறீர்களா?

ஆம் இன்று துபை, மலேசியா போன்ற நாடுகளில் லாட்டரிகள் அதிகம் விற்பனையாகின்றது. துபை டூட்டி ஃப்ரீ கூப்பன்,மற்றும் மில்லினியர் கூப்பன்,என்று ஏராளமான பெயர்கள் அவைகளுக்கு உண்டு.மலேசியா போன்ற நாடுகளில் இந்த லாட்டரிகளை நம் முஸ்லிம்கள் அதிகம் விரும்பி  வாங்குவதாகவும் அதில் கிடைக்கும் பரிசுகளால் மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாகவும் கேள்விபடுகிறேன். இதெல்லாம் ஷைத்தானுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரக் கூடியவை.

நம் மறுமை வாழ்க்கையை வருமையாக்கி நாளை நரகிற்குள் நம்மை இழுத்து செல்லும் தீய செயல்களாகும். இப்படி இன்னும் பல தீய காரியங்களால் நம் முஸ்லிம் சகோதரர்கள் ஷைத்தானின் தூடுதளுக்கு துணை போகின்றார்கள். அவற்றையெல்லாம் பட்டியல் போடுவதற்காக நான் இதை எழுத வில்லை.மாறாக இவற்றையெல்லாம் விட என் மனதை அதிகம் பாதித்தவை ஒன்றுள்ளது. அதை பகிர்ந்து அது தொடர்புடைய நபர்களுக்கு இந்த செய்தி சென்று சேர வேண்டும் என்பதற்காகத் தான் இதை எழுதுகிறேன்.

வாலிபப் பருவனும் சோதனை

நாம் சுவனம் செல்வோமா? இல்லை நரகம் செல்வோமா? என்று தீர்மானிக்கும் காலங்களில் பெரும் பங்கு வகின்ற காலம் இந்த பருவ காலம் தான். இந்த பருவ காலத்தில் நம்மில் பல சகோதரர்கள் வழிமாறி சென்று விடுகின்றனர். அவர்களுக்கு சரியான வழியைக் காண்பிக்கும் நபரை  அவர்களின் பெற்றோர்கள் காண்பிக்க தவறுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.சிறு வயதிலிருந்தே நல்ல பழக்கங்களோடு வளர்ந்த சிலர் கூட வெளிநாடுகளுக்கு வந்ததும் தவறான நண்பர்களை தேர்ந்தெடுப்பதின் மூலம் வழி தவறி சென்று விடுகின்றனர்.சொந்த தேசத்தில் திருமணம் முடித்தவராக இருப்பினும் வெளிநாடு வந்த பிறகு  இவருக்கும் திருமணம் ஆகாதவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவர் ஓரிரு குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பினும் வெளிநாட்டில் அவர் BACHELOR என்று தான் சொல்லிக் கொள்வார். இந்த வாழ்க்கை மிகவும் சிரமமான கசப்பான வாழ்க்கை என்பது அயல் நாட்டில் வாழும் அனைவரும் அறிந்ததே.

இங்கே நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெற்றவர்தான் பெரும் பாக்கியசாலி. ஜும்ஆ நாட்கள் மற்றும் பெருநாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் தொழாத தீனின் வாடையே நுகராத நபர்களை நண்பர்களாக தேர்ந்தெடுத்தவர் நிலை மிகவும் கவலைக்குறிய நிலையாகும்.இது முதலில் தொழுகையின் அருமை பெருமையை மறக்ககடிக்கச் செய்யும்.அதன் பின் வீணான காரியங்களில் ஈடுபட வைக்கும்.குறிப்பாக தொலைக்காட்சில் சினமா ஆடல் பாடல் என்று கேளிக்கைகளில் காலங்கள் நகரும். இதன் விளைவு காலப் போக்கில் அல்லாஹ்வின் அச்சமின்றி அன்னியப் பெண்களை காண மனம் கிடந்தது துடிக்கும்.

தனிமை ஓர் பெரும் சோதனை

அயல் நாட்டில் வசிக்கும் ஓர் வாலிபன் தனிமை என்னும் சோதனையை  சில அல்லது பல சந்தர்பங்களில் சந்தித்தே ஆக வேண்டும். இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெறாதவர் பாக்கியசாளி  என்றே சொல்லலாம்.ஆனால் அது கிடைத்து அதில் திறம்பட வெற்றி பெற்றவர் அல்லாஹ்வின் அருளைப் பெற்றவராவார். ஒரு இளைஞன் பாவங்களை சம்பாதித்துக் கொள்ள பெரிதும் துணை நிற்பது அவன் கையில் உள்ள கைபேசிதான்.

தற்போதைய  காலச் சூழலில் இணையம் (INTERNET) உபயோகிக்காத நபர் இல்லை என்றுதான் சொல்லலாம். கணினி இல்லாதவர் கூட கைபேசியில் (Mobile Phone) இணையத்தை உபயோகிக்கின்றார். வெளிநாடுகளில் வாழும் நம் (BACHELOR) வாலிபர்கள் இப்படிப்பட்ட கைபேசிகளினால் உலகத்தையே ஒரு சுற்று சுற்றி வருகின்றனர்.அதில் ஆபாச உலகமும் அடங்கும். YOU TUBE ,FACEBOOK போன்றவை இதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இதில் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கும் பல சகோதரர்கள் தனிமை  விரும்பிகளாகவே மாறி விடுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும்? இது தொடர்பாக மார்க்கம் நமக்கு என்ன சொல்கின்றது?என்பதை வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம் இளைஞரும் அறிந்து வைத்திருப்பதும் அதன்படி அமல் செய்வதும் கட்டாயமாகும். 

ஐந்து வருவதற்குள் ஐந்தை (நல்வழியில்) அனுபவித்துக் கொள்ளுங்கள்.நோய் வரும் முன் ஆரோக்கியத்தையும்,வேலை வரும் முன் ஓய்வையும்,வறுமை வரும் முன் செல்வத்தையும்,முதுமை வரும் முன் வாலிபத்தையும்,மரணம் வரும் முன் இந்த வாழ்வையும்.(நல்வழியில்) அனுபவித்துக் கொள்ளுங்கள்.என்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்.(நூல்:நஸாயீ)

நமக்கு கிடைத்த இந்த வாலிப பருவத்தை ஓய்வு நேரங்களில் எந்த நோக்கமும் இல்லாமல் வெறுமெனே எந்நேரமும் TV யிலும்  INTERNET லும் காலங்களை போக்காமல் நல்ல முறையில் பயன்படுத்துவதற்காக ஒரு அட்டவணையை நமக்கு நாமே மனதிற்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தொழுகை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் குர்ஆன் ஓதுவது,அல்லது ஓதக் கற்பது, அல்லது கற்பிப்பது,ஹதீஸ்களை படிப்பது, உழு எப்படிச்  செய்தல்? கடமையான குளிப்பு  எப்படி குளித்தல்?போன்ற ஏராளமான சட்டங்களை அருகில் இருக்கும் ஆலிம்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.  இதை அனைவரும் அவசியம் செய்ய வேண்டும்.அப்படி அவசியம் செய்ய வேண்டிய காரணம் என்ன?
 
''மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் நிச்சயமாக ஷைத்தானும் ஓடிக் கொண்டிருக்கின்றான்''என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள். (நூல் புகாரி)

நமது அறியாமையும் பலகீனமும் தனிமையும் தான் ஷைத்தானின் மிகப் பெரும் பலம். நம்மை எப்படியும் வழிகெடுக்க வேண்டும் என்று காத்திருக்கும் ஷைத்தானின் கூட்டங்களுக்கு நாம் எளிதில் வாய்ப்புகளை வழங்கிடக் கூடாது.தவறான முறையில் நேரங்களை பயன்படுத்துவது நம் மன இச்சைகளை கட்டவிழ்த்து விட்டுவிடும்.தீய காட்சிகளை பார்ப்பதும் அன்னியப் பெண்களை ஆபாசமாக நோக்குவதுமாக நம்மை வெட்கமில்லாத ஜடமாக மாற்றிவிடும். இறையச்சமற்றவனாகவும் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்க்கையையும் சீரழித்த பாவியாக கெட்டழியச் செய்து விடும்.

பொதுவாகவே மனிதனின் மனம் தீமைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கும். இதில் தனிமையில் இணையத்தில் மூழ்கும் நம் இளைஞர்கள் விஷயத்தில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர்கள் ஷைத்தானின் வலையில் மிகவும் எளிதில் அகப்பட்டுக் கொள்கின்றார்கள். இதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு சில ஆலோசனைகள்.

சிரமமில்லாத வேலையில் உள்ளவர்கள் ரமலான் மாதம் மட்டுமல்லாது மற்ற மாதங்களிலும் பிறை 13,14,15,ஆகிய நாட்களில் நோன்பு நோற்பதும் மேலும் சாத்தியமென்றால் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழன் போன்ற நாட்கள் நோன்பு நோற்பதும் சிறந்தது. சிரமமான வேலையில் இருக்கும் வாலிபர்கள் மனம் எப்போதெல்லாம் தீய எண்ணங்களில் அலை பாய்கின்றதோ அப்போதெல்லாம் நோன்பை அவசியமாக்கிக் கொள்ள வேண்டும்.

இதை கடை பிடிக்கும் காலமெல்லாம் மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா? என்றொரு வினா உங்கள் உல் மனதில் எழுந்தால்.அந்த எண்ணத்தை குழி தோண்டி புதைத்திடுங்கள்.இந்தியாவில் இருந்து ஆகாய மார்க்கமாக கடல் கடந்து அந்நிய தேசத்திற்கு வந்து சம்பாத்தியம் செய்வது சாத்தியெமென்றால் அங்கே கர்ப்பொழுக்கமாக  நாம் வாழ இந்த நபிவழியை கடைபிடிப்பதும் சாத்தியமே என்று எண்ணிக் கொள்ளுங்கள்.

வாலிபர்களே உங்களில் வசதியுள்ளவர் திருமணம் செய்து கொள்ளுங்கள்.நிச்சயமாக அது அவரின் பார்வையை (அன்னியப் பெண்களை விட்டும்) தாழ்த்திடும். மேலும் அவரின் மர்ம உறுப்பை (கர்ப்பை) பாதுகாத்திடும். திருமணம் செய்ய வசதியில்லாதவர் நோன்பை பற்றிப் பிடிக்கட்டும் அது அவருக்கு பாதுகாப்பாகும். என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகிய வழி காண்பித்துள்ளார்கள்.(நூல் புகாரி,முஸ்லிம்)

நம் பெற்றோர்கள் மற்றும் நம் மனைவி மக்களுக்காக குடும்ப கஷ்டத்தை நீக்கிட அயல் நாட்டிற்கு வந்துள்ள நாம், கர்ப்பொழுக்கத்தை கடை பிடிப்பது கட்டாயமாகும்.அதை மீறினால் பெற்றோருக்கும் நமக்காக தன் இளமையை தியாகம் செய்து அடுத்த முறை கணவன் எப்போது வருவார் என்று காத்திருக்கும் நம் மனைவிக்கும் துரோகம் செய்ததோடு படைத்த ரப்புல் ஆலமீனின் கடும் சினத்திற்கும் ஆளாக நேரிடும்.விளைவு துன்யாவிலும் கைசேதம். ஆகிரத்திலும் நஷ்டம் என்ற இழி நிலைக்கு ஆளாகுவோம். அல்லாஹ் இதிலிருந்து நம்மை பாதுகாப்பானாக.

எனவே இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள சட்டம் வெளிநாட்டில் வாழும் நம் இளைஞர்களுக்கும் பொருத்தமானதாக இருப்பதனால்  இது போன்ற நோன்புகளை கடைபிடித்து கர்ப்பை பாதுகாத்திட நம் வாலிபர்கள் தயாராக வேண்டும். இதற்கு தயாராவது யாருக்கெல்லாம் சிரமமோ அவர் திருமணம் ஆனவரா? மனைவியை உடன் அழைத்துக் கொள்ளுங்கள்.அதற்கு பொருளாதார வசதி இல்லையா? திருமணமானவராக இருந்தாலும் சரி, அல்லது திருமணம் ஆகாதவராக இருந்தாலும் சரி  இது போன்றதோர் வாழ்க்கையை தூர தள்ளிவிட்டு தாயகம் திரும்ப முன்வாருங்கள். உண்மையாக உழைத்தால் எங்குவேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்.நிச்சயம் உணவு வழங்குபவன் அந்த ஏக இறைவனாகும்.நாம் எங்கே இருந்தாலும் நமக்கு அவன் உணவு (ரிஸ்க்) வழங்குவான்.

வஸ்ஸலாம்:

மவ்லவி N.சய்யிது ஷம்சுத்தீன் சாதிக்.ஃபாழில் மன்பஈ

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR