ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Thursday 11 December 2014

ஆக்ராவில் 57 முஸ்லிம் குடும்பங்கள் இந்து மதத்தினருக்கு மாறினார்களா?


சங்பரிவார் அமைப்பினரின்
பித்தலாட்டம் அம்பலம்
ஆக்ராவில் 57 முஸ்லிம்
குடும்பத்தினர்
இந்து மதத்தை தழுவினர்
என்று நேற்று பரபரப்பாக தேசிய
ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
தர்ம ஜாக்ரான் மஞ்ச் மற்றும் பஜ்ரங் தளம்
ஆகிய சங் அமைப்புகள் நடத்திய
நிகழ்வில் இந்த முஸ்லிம்
குடும்பத்தினர் இந;து மதத்தைத்
தாமே முன்வந்து இந்து மதத்தைத்
தழுவியதாக இந்த செய்திகள்
வெளியாகின.
இந்த செய்தி தவறானது என்றும்
தாங்கள்
முஸ்லிம்களாகவே வாழ்வதாக இந்த 57
குடும்பத்தினரும் அளித்துள்ள
பேட்டி இந்துஸ்தான் டைம்ஸ் டைம்ஸ்
ஆப் இந்திய முதலிய
செய்தித்தாள்களில்
இன்று செய்திகள்
வெளியியாகியுள்ளன. ரேசன்
அட்டை வாங்கி தருகிறோம் என்றும்
ஆதார் அட்டை வாங்கித் தருகிறோம்
என்று காவிகள் தங்களை அந்த
நிகழ்விற்கு அழைத்துச் சென்றதாக
அவர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள்
தொடர்ந்து முஸ்லிம்களாகவே இருப்பதாகவும்
கட்டாயப்படுத்தி தங்களை இந்த
நிகழ்விற்கு காவிகள் அழைத்துச்
சென்றதாக
குப்பை சேகரித்து வாழ்க்கை நடத்தும்
இந்த ஏழை முஸ்லிம்கள்
தெரிவித்துள்ளனர்.
பொய்மையை மூலதனமாக
கொண்டு செயல்படும்
சங்பரிவாரின்
இந்த பொய் பித்தலாட்டம்
ஆச்சரியப்படக்
கூடியது இல்லை. முஸ்லிம்களும்
கிறிஸ்த்தவர்களும் பண
ஆசை காட்டி மதமாற்றம்
செய்து வருகின்றனர்
என்று பேசி வரும் சங்பரிவாரின்
திருக்த்தாளம் ஆக்ராவில்
அம்பலமாகியுள்ளது.
ஏழை முஸ்லிம்களை ஏமாற்ற
அது எடுத்த
முயற்சி பிசுபிசுத்துள்ளது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR