ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Friday 14 August 2015

வக்ப் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் முன்னாள் IAS அதிகாரி

அதிகார வர்க்கங்கள் அச்சுறுத்தி அடக்கி ஒடுக்க நினைப்பதை உடைத்தெறிய வேண்டும்!

ஊடகங்கள் அதிகார வர்க்கங்களுக்கு பயந்து செய்தியை வெளியிட மறுக்கிறது!

நமக்கான ஊடகத்தில் அதிகமாக பகிர்ந்து இச்செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்ல உதவுங்கள் தயவு செய்து!

நடவடிக்கை இல்லாத பட்சத்தில் ஆலோசனைக்கு பிறகு ஓரிரு தினங்களில் அடுத்த கட்ட நிகழ்வு அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...
திருச்சி மீர் ஹசனுல்லா ஷா வக்புக்கு சொந்தமான நில பிரச்சனை தொடர்பான விவரங்கள் பின்வருமாறு....
திருச்சி மாவட்டம், தென்னூர், கிராமம், டைட்டில் டீடு எண் 1142-க்கு உட்பட்ட திருச்சி டவுன், புதிய வார்டு “Y” பிளாக் 26, புதிய சர்வே எண்கள்: 5, 6,8,9-க்கு கட்டுப்பட்ட 2.04 ஏக்கர் மேற்படி தர்காவுக்கு சொந்தமான நிலமாகும். 2005-ஆம் வருடம் வரை ஆவணங்கள் அனைத்தும் இதை உறுதி செய்கின்றன.

(1). திருச்சிராப்பள்ளி, பழைய வார்டு II, பழைய பிளாக் 4, பழைய சர்வே எண்: 118, இதற்கு திருச்சிராப்பள்ளி மேற்கு, வார்டு Y, பிளாக் – 26, சர்வே எண்கள் : 5, 6, 8, 9 - ல் உள்ள 2.04 ஏக்கர் நிலம் TD. NO: 1142, மீர் ஹசனுல்லா ஷா வக்புக்கு சொந்தமானதுதான என OS. NO : 133 / 1918 என்ற வழக்கில் தீர்ப்பாகியுள்ளது.
(2). திருச்சிராப்பள்ளி, பழைய வார்டு II, பழைய பிளாக் 4, பழைய சர்வே எண்: 118, இதற்கு திருச்சிராப்பள்ளி மேற்கு, வார்டு Y, பிளாக் – 26, சர்வே எண்கள் : 5, 6, 8, 9 - ல் உள்ள 2.04 ஏக்கர் நிலம், 1935 – ஆம் வருட இனாம் ஃபேர் ரிஜெஸ்டரில், TD. NO: 1142, ஹஜ்ரத் மீர் ஹசனுல்லா ஷா வக்பின் பெயரில் தேவதாயமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

(3). 1955 – ஆம் வருடம், வக்ப் நிலங்கள், அரசு சர்வேயரால் அளவீடு செய்யப்பட்டு, சமர்பிக்கப்பட்ட அறிக்கையிலும், அதை தொடர்ந்து 1958 – ஆம் வருடம் வெளியான அரசிதழிலும் திருச்சிராப்பள்ளி, பழைய வார்டு II, பழைய பிளாக் 4, பழைய சர்வே எண்: 118, இதற்கு திருச்சிராப்பள்ளி மேற்கு, வார்டு Y, பிளாக் – 26, சர்வே எண் : 5, 6, 8, 9 - ல் உள்ள 2.04 ஏக்கர் நிலம், TD. NO: 1142, மீர் ஹசனுல்லா ஷா வக்ப் தேவதாயம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

(4). திருச்சிராப்பள்ளி, பழைய வார்டு II, பழைய பிளாக் 4, பழைய சர்வே எண்: 118, இதற்கு திருச்சிராப்பள்ளி மேற்கு, வார்டு Y, பிளாக் – 26, சர்வே எண்கள் : 5, 6, 8, 9 - ல் உள்ள 2.04 ஏக்கர் நிலம், 1963 – ஆம் வருட, திருச்சி மாவட்ட டவுன் ரிஜிஸ்டரில் TD. NO: 1142, மீர் ஹசனுல்லா ஷா வக்ப் தேவதாயம் என பதிவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

(5). திருச்சிராப்பள்ளி மேற்கு, வார்டு Y, பிளாக் – 26, சர்வே எண்கள் : 5, 6, 8, 9 - ல் உள்ள 2.04 ஏக்கர் நிலம், TD. NO: 1142, மீர் ஹசனுல்லா ஷா வக்பின் பெயரில் தேவதாயமாக பதிவாகியுள்ளது என, திருச்சிராப்பள்ளி கோட்ட நில அளவை ஆய்வாளரால் 2003-ஆம் வருடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

(6). திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, கோ. அபிஷேகபுரம் கோட்டம், வார்டு “Y” பிளாக் -26, பழைய TS. NO: 118, புதிய TS. NO: 5,6,8,9-ல் உள்ள 2.04 ஏக்கர் நிலம் TD. NO: 1142, மீர் ஹசனுல்லா ஷா வக்பின் பெயரில் தேவதாயமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என, 2005-ஆம் வருடம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலரால் சான்று அளிக்கப்பட்டுள்ளது.

(7). திருச்சிராப்பள்ளி மாவட்டம் பழைய வார்டு II, பழைய பிளாக் – 4, TS. No.: 118, இதற்கு, வார்டு பிளாக் -26, புதிய TS. NO: 6 –ல் உள்ள நிலத்தில் எந்த பெயரிலும் பதிவாகவில்லை என 2014 – ஆம் வருடம், சார்பதிவாளர் அவர்களால் வில்லங்க சான்று அளிக்கப்பட்டுள்ளது.
(8). திருச்சி மாநகரம், தென்னூர், அண்ணாநகர், வார்டு “Y” பிளாக் -26, TS. No.: 5, 6, 8, 9 –ல் உள்ள 2.04 ஏக்கர் நிலம் மேற்படி வக்பிற்கு சொந்தமானது என இருந்து வரும் நிலையில், இது குறித்து, திருச்சிராப்பள்ளி வக்ப் தீர்ப்பாயத்தில் WOP. No.: 4 / 2007 என்ற இந்த வழக்கில், IA.No.: 140 / 2007 – ல் “Status Quo” உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் மேற்படி சர்வே நம்பரும் அடக்கம்.
(9). WOP. NO: 4 / 2007 என்ற வழக்கில், மேற்படி சர்வே எண்ணுக்கும் சேர்த்து “Status Quo” உத்தரவாகியுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ஹஜ்ரத் மீர் ஹசனுல்லா ஷா வக்பிற்கு சொந்தமான இந்த இடத்தை 2008 – ஆம் வருடம், கடந்த ஆட்சி காலத்தில் திருசங்கு, பாபு, கண்ணன், சிராஜ் அகமது ஆகியோருக்கு நீதிமன்ற உத்தரவுகளை மறைத்தும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராகவும் தில்லைநகர் வீடு கட்டும் கூட்டுறவு சங்க நிர்வாகிகளால் பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
(10). நீதிக்கும், நீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரான பத்திரப்பதிவுகளை வைத்துக்கொண்டு, தன் அதிகார பலத்தின் மூலம், 2014 – ல், மாநகர நில அபகரிப்பு ஆய்வாளராக இருந்த செல்லமுத்துவை தன் அடியாள் போல பயன்படுத்தி எங்களை மிரட்டி இந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தார் ஓய்வு பெற்ற IAS அதிகாரி இளங்கோவன். நாங்கள் எங்கள் ஆவணங்களை காட்டியும் அதை பார்க்க மறுத்துவிட்டு, விசாரனையை திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியருக்கு மாற்றப்பட்டது. அப்போது கோட்டாட்சியராக இருந்த பஷீர் அவர்களும் எங்களிடமிருந்த வருவாய் ஆவணங்கள் உள்ளிட்ட எந்த ஆவணங்களையும் பார்க்காமலே, வக்புக்கு சொந்தமான இந்த இடத்தை இளங்கோவன் மகன்களான பாபு, கண்ணன் ஆகியோருக்கு சொந்தம் என்ற நீதிக்கும், உண்மைக்கும் எதிரான ஒரு உத்தரவை பிறப்பித்துவிட்டார்.

(11). வருவாய் கோட்டாட்சியரின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து, தர்கா நிர்வாகாத்தின் சார்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் WP.(MD) :12063 & 12064 of 2014 ஆகிய ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு “Status Quo” உத்தரவு பெற்றிருந்தோம். இவ்வழக்கில் வருவாய் கோட்டாட்சியர், நில அபகரிப்பு ஆய்வாளர், பாபு ஆகியோர் மீது “Status Quo” உத்தரவு இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி பாபுவிடம் புகார் வாங்கி என் மீது CR.No.: 18 / 2014 என்று ஒரு பொய் வழக்கை பதிவு செய்து கைது செய்தார் நில அபகரிப்பு ஆய்வாளர் செல்லமுத்து.
(12). எங்களுடைய ஆவணங்களையும், நீதிமன்ற உத்தரவுகளையும் நடுவர் அவர்கள் பார்வையிட்டதால், உடன் பிணையில் விட்டதோடு, மாநகர நில அபகரிப்பு ஆய்வாளர் செல்லமுத்துவுக்கு அறிவுரை வழங்கினார். இந்த வழக்கு குற்றப்பத்திரிக்கைகூட தாக்கல் செய்யாமல் நிலுவையில் உள்ளது.

(13). தன் மகன்கள் பாபு, கண்ணன் பெயருக்கு மேற்படி இடத்தை பட்டா மாற்றி தர மறுத்த சர்வேயர் பாண்டியனை மிரட்டியுள்ளார் இளங்கோவன். இந்த இடம் மீர் ஹசனுல்லா ஷா மாஸ்கு என தேவதாயமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை யார் பெயருக்கும் மாற்ற முடியாது என எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காத இளங்கோவனின் அதிகார தூண்டுதலின் பேரில் சர்வேயர் பாண்டியனுக்கு டிரான்ஸ்ஃபர் உத்தரவு போடப்பட்டது. இந்த டிரானாஃபர் உத்தரவை எதிர்த்து சர்வேயர் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்து வழக்கு
நிலுவையில் உள்ளது.

(12). சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாங்கள் தொடர்ந்த மேற்படி வழக்குகளில் தரப்பினர்கள் இருவரும் சிவில் நீதிமன்றத்துக்கு செல்லுமாறு உத்தரவாகியுள்ள நிலையில் இளங்கோவன் தன் அதிகார பலத்தின் மூலம் தற்போதைய நில அபகரிப்பு ஆய்வாளர் மணிமொழி தலைமையில் ஒரு காவல் படையை வைத்துக்கொண்டு சனிக்கிழமை (08.08.2014) முதல் மேற்படி இடத்தை சுவாதீனம் எடுக்கும் முயற்சியில்
ஈடுபட்டு வருகிறார்கள்.

பகல் இரவு என போலிஸ் பாதுகாப்போடு வக்ப் நிலம் அபகரிக்கப்படுகிறது.
நில அபகரிப்பை தடுப்பதற்காக தமிழக முதல்வர் அவர்களால் உருவாக்கப்பட்ட “நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு”-வானது “நில அபகரிப்பு சிறப்பு பிரிவாக” மாறி, வக்ப் நிலத்தை அபகரிக்க அடியாள் வேலை பார்க்கிகிறது.

இளங்கோவனுக்கு இந்த வக்ப் நிலத்தை சுவாதீனம் எடுத்து கொடுப்பதில் நில அபகரிப்பு ஆய்வாளர் மணிமொழியின் ஈடுபாடுகளை பார்க்கும்போது, மேற்படி இடம் இளங்கோவன் மகன்களான பாபு, கண்ணன் ஆகியோருக்கே சொந்தம் என்று தீர்ப்பாகி, அவர்களுக்கு சுவாதீனம் எடுத்து கொடுக்குமாறு மணிமொழிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைப்போல், ஒரு அடியாளைப்போலவும், கட்டிட பணியாளரை போலவும் திருச்சி மாநகர நில அபகாரிப்பு ஆய்வாளர் மணிமொழி தலைமையிலான காவல்துறை நடந்து கொள்கிறது.

இந்த இடம் வக்புக்கு சொந்தமானதுதான் என்பதற்கு நீதிமன்ற உத்தரவுகளும், அனைத்து வருவாய் ஆவணங்களும் தெளிவாக இருக்கையில், காவல்துறை அதிகாரி மணிமொழி உள்ளிட்ட சில காவாளிகளின் செயல்பாடு வக்பு சொத்துக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்த மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல் வாக்குறுதியை கேள்விக்குறியாக்கி, வக்பு சொத்துக்களை மோசடி செய்தவர்களுக்கும், செய்ய முயற்சிப்பவர்களுக்கும் காவல்துறை உதவுவது போல இருக்கிறது.

காவல்துறையில் உள்ள சில காவாளிகளின் இந்த செயல்பாடுகளை வைத்து நாங்கள் ஒட்டுமொத்த காவல்துறையையும் குற்றம் சாட்டவில்லை. நில மோசடி செய்துள்ள, தில்லைநகர் வீடுகட்டும் சங்க நிர்வாகிகள், திருசங்கு, சிராஜ் அகமது டாக்டர்.பாபு, கண்ணன், ஒய்வு பெற்ற IAS இளங்கோவன், நில அபகரிப்பு ஆய்வாளர் மணிமொழி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து வக்ப் நிலத்தை பாதுகாத்து தர கோரி 10.08.2015 அன்று மாவட்ட ஆட்சித்தலைவரிடமும், சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை இல்லாத பட்சத்தில் ஆலோசனைக்கு பிறகு ஓரிரு தினங்களில் அடுத்த கட்ட நிகழ்வு அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்..!

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR